This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 21 அக்டோபர், 2007

டாக்டர் கலாம் மாணவர்களுக்கு கூறும் ஆறிவுரை

சென்ற பதிவில் டாக்டர் கலாமின் நேர்முக பேட்டியின் முதல் பாகத்தை வெளியிட்டேன். தற்போது டாக்டர் கலாமின் நேர்முக பேட்டியின் இரண்டாவது பாகத்தை வெளிடுகிறேன்.

இதில், அவர் சிறுவர்களுக்கு அறிவுரை கூறுகிறார். 'click to play' பட்டனை அழுத்தி, அவரது பேட்டியினை கேட்கவும்.


இந்த பேட்டியினை டவுன்லோடு செய்ய, இதை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் பதிவு செய்துகொள்ளவும். ( wmv format - விண்டோஸ் மீடியா பிளேயரில் கேட்கமுடியும்)

பாரத ரத்னா டாக்டர் கலாமுடன் ஒரு நேர்முகம்

நான் சென்ற் பதிவில் கூறியிருந்த்படி, சாதனையாளர்களின் கருத்துகளை பெற்று எழுத எண்ணுகிறேன். நான் பாட்யுனிவர்சல் (PodUniversal) என்கிற ஒரு இணைய் ஒலி இதழை வெளிட்டு வருகிறேன். கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 60 வது சுதந்திர தினத்தை ஒட்டி முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் க்லாமிடம் தொலைபேசி மூலம் ஒரு சிறப்பு பேட்டி எடுத்திருந்தேன். அனைத்து இளைஞர்களுக்கும் புரிவதற்காக, ஆங்கிலத்தில் எடுத்திருந்தேன்.

இந்த பேட்டியில் டாக்டர் கலாம் அவர்கள் இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பத்து ச்வால்களையும் அந்த சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு ஏழு அறிவுரைகளையும் தருகிறார்.

டாக்டர் கலாமின் பேட்டியின் முதல் பாகத்தை 'Click to play' என்கிற button ஐ அழுத்தி கேட்கவும்.



டாக்டர் கலாமின் பேட்டியினை டவுன்லோடு செய்ய (wmv file - விண்டோஸ் மீடியா பிளேயரில் கேட்கமுடியும்) , இதை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் பதிவு் செய்து கொள்ளவும். (4.15 mb)

சனி, 20 அக்டோபர், 2007

வெற்றிப்பயணம் துவங்குகிறது

வெகுநாட்களாகவே எனக்கு தமிழில் ஒரு பிளாக் துவங்கவேண்டுமென்று ஒரு ஆசை. ஏதோ தள்ளிப்போட்டுக்கொண்டு வந்து விட்டேன். இந்த வாரம், காத்தோலிக் சிரியன் வங்கியின் தகவல் தொழில் நுட்ப துறையின் துணை பொது மேலாளர் திரு டி.பி. ஆர். ஜோஸப் அவர்களள சந்தித்தேன். தன்னுடைய பல அலுவலக பணிகளிடையே தமிழில் மூன்று பிளாக வைத்திருப்பது கண்டு வியப்புற்றேன். அவரது ஆர்வம் என்னை தூண்டிவிட்டது.


இனி நான் தழிழ் பிளாக் ஆரம்பிபபதற்கு கால தாமதம் செய்வது எனக்கே மிகவும் வெட்கமாக இருந்தது. இனி தமிழிலும் முயற்சி செய்வது எனறு முடிவு செய்தேன்.


நான் ஒரு மக்கள் தொடர்பு மற்றும் கம்யூனிகேஷன் ஆலோசகர். சென்ற ஆண்டு ஆனந்த விகடனில் "வெற்றிக்கு ஏழு படிகள்" என்கிற தலைப்பில் நான் எழுதிய கட்டுரைகள் வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. அந்த க்ட்டுரைகள் ஆனந்த விகடன் பதிப்பகத்தால் ஒரு புத்தகமாக வெளியிடப்பட்டு, அதிக அளவில் விற்பனனயாகிக் கொண்டிருக்கிறது.


அதன் பின்னணியில் இந்த புதிய பிளாகிற்கும் "வெற்றிப்படிகள்" என்று பெயர் சூட்டினேன். விஜயதசமி (இதுவும் ஒரு வெற்றி திருநாள்) அன்று துவங்குகிறேன்.


உங்கள் வாழ்த்துகள் மற்றும் ஆசிகளுடன் முயற்சிக்கிறேன் எழுத்துப் பயணத்தை துவங்குகிறேன்.




அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...