இந்தியாவில் 15வது பொது தேர்தல் முடிந்து விட்டது. கருத்துக்கணிப்புகள், தடை செய்யப்பட்ட நிலையில், பத்திரிகைகள் வெளியிட்ட யூகங்கள் பொய்யாகி விட்டன. மத்தியில், மன்மோகன் சிங் அரசு மீண்டும், நிலையான ஆட்சி அமைக்க மக்கள் ஓட்டளித்துள்ளார்கள்.பாஜக அணி, எதிர்பார்த்தைவிட குறைவாகவே இடங்களை பெற்றுள்ளது. பிரதமர் கனவுடன் போட்டியிட்ட, மூன்றாம் அணி, நான்காம் அணிகள் மண்ணை கவ்வின. நாளொருதோறும், மன்மோகன் சிங் அரசை மிரட்டியே தங்களை வளர்த்துக்கொண்ட இடது சாரிகள், குறைந்த இடங்களையே பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், பெரிய கூட்டணியாக கருதப்பட்ட அதிமுக கூட்டணி, எதிர்பார்த்த அளவு இடங்களை பெறவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறி, தங்கள் நலனையே பாதுகாத்துக்கொண்ட பாமக, ஏழு இடங்களிலும் மண்ணை கவ்வின.மதிமுக ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றது.
திமுக அணி மீது, அதிக அளவில் வாக்காளர்களூக்கு பணம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதில் பெரிய சந்தேகம் உள்ளது. தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்ததாக மீடியாக்கள் கூறுகின்றன. எதிர் கட்சிகள், நீதிமன்றத்துக்கு சென்றால், நீதி கிடைக்க குறைந்தது 6 அல்லது 7 வருடங்களாவது ஆகும். தேர்தல் கமிஷனின் நடுநிலை மக்களால் சந்தேகிக்கப்டுகின்றன. ந்வீன் சாவ்லாமீது, எதிகட்சிகள் குற்றம் சாட்டப்படும் நிலையில், இது அவரது நம்பகத்தன்மையை குறைக்கிறது.
பொதுவாக, மக்கள், இந்திய அளவில், ஒரு நிலையான ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். பிஜேபி உட்பட அனைத்து கட்சிகளூம் இதிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் உள்ளன. அதே சமயம், காங்கிரஸும் வெற்றி ஆணவத்தில் இருந்தால், அவர்களும், அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டியிருக்கும்.
தமிழக மற்றும் தேசிய அரசியல் நிலை பற்றி, பிரபல பத்திரிகையாளர் திரு சிகாமணீயிடம் நான் தொலைபேசியில் பேட்டி கண்டேன். அந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி, கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்ட்டாப்பில் சேமித்து கேட்கவும் ( 19 நிமிடங்கள்)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857421
தமிழகத்தில், பெரிய கூட்டணியாக கருதப்பட்ட அதிமுக கூட்டணி, எதிர்பார்த்த அளவு இடங்களை பெறவில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறி, தங்கள் நலனையே பாதுகாத்துக்கொண்ட பாமக, ஏழு இடங்களிலும் மண்ணை கவ்வின.மதிமுக ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றது.
திமுக அணி மீது, அதிக அளவில் வாக்காளர்களூக்கு பணம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதில் பெரிய சந்தேகம் உள்ளது. தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்ததாக மீடியாக்கள் கூறுகின்றன. எதிர் கட்சிகள், நீதிமன்றத்துக்கு சென்றால், நீதி கிடைக்க குறைந்தது 6 அல்லது 7 வருடங்களாவது ஆகும். தேர்தல் கமிஷனின் நடுநிலை மக்களால் சந்தேகிக்கப்டுகின்றன. ந்வீன் சாவ்லாமீது, எதிகட்சிகள் குற்றம் சாட்டப்படும் நிலையில், இது அவரது நம்பகத்தன்மையை குறைக்கிறது.
பொதுவாக, மக்கள், இந்திய அளவில், ஒரு நிலையான ஆட்சி அமைக்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். பிஜேபி உட்பட அனைத்து கட்சிகளூம் இதிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் உள்ளன. அதே சமயம், காங்கிரஸும் வெற்றி ஆணவத்தில் இருந்தால், அவர்களும், அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டியிருக்கும்.
தமிழக மற்றும் தேசிய அரசியல் நிலை பற்றி, பிரபல பத்திரிகையாளர் திரு சிகாமணீயிடம் நான் தொலைபேசியில் பேட்டி கண்டேன். அந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி, கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்ட்டாப்பில் சேமித்து கேட்கவும் ( 19 நிமிடங்கள்)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857421