This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 25 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - ஒரு விமர்சனம் - ஏன் கலாம் அவர்கள் புறக்கணிக்கப்ப்ட்டார்?

செந்தமிழ் மாநாடு கோவையில், கடந்த மூன்ற் நாட்களாக நடந்து கொண்டு வருகிற்து.  சுமார் 600 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும் இந்த ஆடம்பர விழாவைப்பற்றிய விமரசனங்களும் வரத்தொடங்கிவிட்டன.

துவக்க விழாவில், பத்திரிகையாளர்களுக்கு சரியாக இடம் ஒதுக்கப்படவில்லை.  நடிக ந்டிகையர் முன் வரிசையில் அமர வைக்கப்பட்டனர்.  மேடையில் பேசிய பெரும்பாலோர் ஆங்கிலத்தில் பேசினர் என்றும் அதை மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யாததால், கிராமத்து மக்கள் அவதிப்ப்ட்டனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்ற்ன.

எல்லாவற்றையும் விட, ஜெயலலிதா குற்றம் சாட்டியபடி, இந்த மாநாடு 'தன்னல தம்பட்ட விழாவாகவும் குடும்ப விழாவாகவும்' இந்த மூன்று நாட்களில் மாறிவிட்டது. பேசிய அனைவரும், கலைஞரை புகழ்வதில்தான் கவனம் செலுத்தியது, டி.வி. நேரடி ஒளிபரப்பில் தெரிந்தது.  வைரமுத்து ஒரு படி மேலே போய், "கலைஞர், வள்ளுவரை விட மேலானவர்" என்று பாடினார்.  வள்ளுவர் அறம், பொருள், இன்பம் மூன்று தான் தந்தார்.  ஆனால், கலைஞரே,  வீடும் கொடுத்தார், என்று கவிதை பாடியது, முகம் சுளிக்க வைத்தது.  இதனால் தான் என்னவோ, கலைஞரும், மூன்றாவது நாள் இறுதியில்,  தன்னை புகழ்ந்தது போதும், இனி தமிழை புகழுங்கள் என்று கூறினார்.  நாளை என்ன நடக்கிறது என்று பார்க்கவேண்டும். இந்த குறிப்பை புரிந்து கொண்டவர்கள்,  கலைஞரையும் தமிழையும் ஒன்றாக்கி பேச ஆரம்பித்து விடுவார்கள். 

ஜால்ரா அடிப்பதில், எல்லோருக்கும் போட்டி.  பத்திரிகைகளும் சளைக்கவில்லை.  விளம்பரங்களை வாரி வாரி கொடுத்து விட்டதால், கொஞ்ச நஞ்சம் விமரிசித்தவர்களும், ஜால்ரா போட ஆரம்பித்து விட்டனர். அரசு பிரிண்ட் மற்றும் டி.வி. களைத்தான் வரிந்து வரிந்து கவனித்துக் கொண்டார்கள்.  ஆனல், இணைய தளத்துடன் சம்பந்தப்பட்ட பதிவாளர்களை கண்டு கொள்ளவில்லை.  அதனால், கூகுளில் 'செம்மொழி மாநாடு' என்று தேடினால், நூற்றுக்கு 90 பதிவுகள், எதிர்மறை விமர்சனமாக இருக்கிற்து.

இது தவிர இலங்கை தமிழர்கள், அதிக அளவில், இணைய தளத்தில் பதிவு எழுதுகிறார்கள்.  அவர்களுக்கும் கலைஞர மேல் அதிக கோபம்.  இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு காண முயலவில்லை என்கிற கோபம் வெறு.  சென்ற ஆண்டு கலைஞர இருந்த உண்ணாவிரத டிராமா (காலை டிபனுக்கும், மதிய உணவுக்குமிடையில்)வேறு அவர்களை வெறுப்பேற்றியுள்ளது.  அத்னால், இணைய தளங்களில், எதிமறையான விமர்சனங்களே அதிகம் காணலாம்.  இதனால், உலக அளவில், தமிழர்களிடையே, கலைஞருக்கு, அதிக அளவில், இந்த செம்மொழி விழா ஒரு பெருமையை சேர்க்காது.   



முதல் நாள் விழா ஆரம்பித்தவுடன், ஏன் க்லாமை அழைக்க வில்லை என்று ஒரு  குறுஞ்செய்தி ( sms), தமிழ்நாடு முழுவதும் உலாவர ஆரம்பித்து விட்டது.  கலாம்  அவர்கள், குடியரசுத்தலைவராக இருந்த போது தான், தமிழை செம்மொழியாக்கி, உத்தரவு பிறப்பித்தார்.  அவர் எந்த நாட்டில் போசினாலு, இன்றுவரை, தமிழிலிருந்து மேற்கோள் காட்டாமல் பேசுவதில்லை.  உல்கம் மூழுவதும், தமிழனை தலை நிமிரச் செய்த கலாம்  போன்றவர்களை, அரசு அழைக்காதது ஒரு துரதிருஷ்டமே.  கலாம் வந்திருந்தால், அனனத்து இளைஞர்கள் மற்றும், மீடியா பார்வையும், அவர் பக்கம் போயிருக்கும்.  மேலும், கலைஞர், தமிழ் நாட்டு சட்டசபைக்கு வந்து கலாம், தன்னை புகழ வேண்டும் என்று விரும்பியபோது, கலாம் அவர்கள் தவிர்த்து விட்டதால், கலைஞர் , கலாம் அவர்களை அழைக்க விரும்பாமலும் இருந்திருக்கலாம்.

கலாம்  அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்த போது, ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றத்தில், அவர்களது, பொன்விழாவை ஒட்டி ஒரு சிறப்பு உரை ஆற்றினார்.  அந்த சமயம், "யாதும் ஊரே' யாவரும் கேளிர்" என்கிற பாடலை கூறி அதன் விளக்கத்தையும், ஆங்கிலத்தில் கூறி, தமிழின் பெருமையை உலகறிய செய்தார்.  அதை கேட்ட அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்தினர்.  அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர், கலாம் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார். 

அந்த நிகழ்ச்சியை, எனது நண்பர் தனபால் தயாரித்த "லிட்டில் டிரீம்" என்கிற கலாம் அவர்கள் பற்றிய குறும்படத்திலிருந்து,  கீழே கொடுத்துள்ளேன். 

"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை" என்கிற் கண்ணதாசன் வரிகள் தான் என் நினைவுக்கு வருகிற்து.



இந்த குறும்படத்தை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.youtube.com/watch?v=Uu-0vTOHJ44

செவ்வாய், 22 ஜூன், 2010

ஆர்பாட்டம் இல்லாமல் வைணவம் வளர்க்கும் தமிழ் - செம்மொழி மாநாட்டு சிறப்பு பதிவு

வெற்றி குரல் இதழ் 17

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் மிகுந்த ஆடம்பரத்துடனும், பிரும்மாண்டமுமாய் துவங்கிவிட்டது.  பல அறிஞர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பேச இருக்கிறார்கள்.  சுமார் ரூபாய் 600 கோடி செலவில் நடத்தப்படும் இந்த மாநாட்டைப்பற்றி பல விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.   கலைஞர் தன்னை பாராட்டுவதற்காக  அரசு  செலவில்  நடத்தப்ப்டும் ஒரு தன்னல தம்பட்ட  விழா என்று  எதிர் கட்சிகள்  குற்றம்  சாட்டுகின்றன.

மற்றும், கலைஞர் இந்த மாநாட்டிற்கக எழுதிய "யாதும் ஊரே..யாவரும் கேளீர்" என்கிற பாடலை ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்து வெளியிட்டுள்ளார்கள்.  அதைப்பற்றியும் பல விமர்சனங்களும் வரத்தொடங்கி விட்டன.  தமிழ் மாநாட்டிற்கான இசையை, மேல் நாட்டு பாணியில் இசை அமைக்க வேண்டுமா என்றும், தமிழின் மென்மையை வெளிக்காட்டாமல், ஒரே காட்டுக்கூச்சலாக இருப்பதாகவும், பலர் எரிச்சல் படுகிறார்கள்.  பண்டைய தமிழ்நாட்டில், யாழ், வீணை, குழல், மத்தளம், வரிசங்கம் போன்ற பல இசைகருவிகள் இருநதன.  அவைகளில் பல, இன்றும் நம்மிடையே உள்ளன.  அந்த கருவிகளை உப்யோகித்து,  தமிழ் க்லாச்சாரத்திற்கு ஏற்ப மென்மையான இசையாக இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது என்றும் கூறுகிறார்கள். .  ஏ. ஆர். ரஹ்மானே அதை செய்திருக்கலாம். 

இந்த பாடலை கேட்ட ஒரு மூத்த பத்திரிகை நண்பர், "கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர், அவரது பாரம்பரிய உடையில் இருந்தால் தான் மரியாதை.  அதைவிட்டு, அவர், ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்டுக்கொண்டு அர்ச்சனை செய்தால் எப்படி இருக்கும்.  அது போன்று தான் இந்த செம்மொழி பாடல் இருக்கிறது" என்று விமர்சித்தார்.

எது எப்படி இருந்தாலும், செம்மொழி மாநாடு தமிழை வளர்க்க முயற்சித்தால், நல்லது தான்.  தமிழ் செம்மொழி ஆவதற்கு முக்கிய காரணமே, பல ஆயிரக்க்ணாகான ஆண்டுகளாக தமிழுக்கு ஏற்றம் கொடுத்து, இறைவனது கருவறையிலிருந்து, வீதிவரை தமிழை உபயோகிக்கும் சைவ, வைணவ திருக்கோவில்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.  ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை தமிழில் வழிபட வழிகாட்டினார்கள். . 

பாடல் பெற்ற அனைத்து திருத்தலங்களின் இறைவன், இறைவியின் திருப்பெயர்கள் தமிழில் உள்ளன.  அனத்து வைணவ திருத்தலங்களிலும், கோவிலின் கருவறை திறக்கும் போது 'திருப்பள்ளி எழுச்சி" பாடுவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.  திருவரங்கத்தில்,   இந்த தமிழ் பாசுரம், பண்டைய தமிழ் இசை க்ருவியான வீணையில் இசைக்கபடும்.   திருப்பாவை, மற்றும் ப்ல்லாண்டு பாசுரம் பாடியபிறகுதான, அனைத்து வைணவக் கோவில்களிலும், (திருப்பதி உட்ப்ட), தினந்தோறும் தீர்த்த பிரசாதம் வழங்கப்படும்.  இது தவிர, இறைவனை இரவில், பள்ளியறையில் எழுந்தருளச் செய்யும்  போதும், தமிழ் பாசுரங்கள் தான் பாடப்படும். 

அனைத்து வைணவ திருக்கோவில்களிலும், மார்கழிமாதம், தமிழ்த் திருவிழாவாக கொண்டாடப்படும்.  திருவரங்கத்தில், 'அரையர்கள்' என்கிற ஒரு பிரிவினர், தமிழ் பாசுரங்களுக்கு, அநத மார்கழி மாதத்தில், பண்ணிசைத்தும், நடனமாடியும். இறைவனை வழிபடுவார்கள்.

இன்றும் பல  வைணவ இல்லங்களிலும், திருக்கெண்ணமுது (பாயசம்), அக்கார வ்டிசில் (பாயசம்), நெகிழ் கறி அமுது (சாம்பார்), சாற்றமுது (ரசம்), கறி அமுது (பொறியல்), மடப்பள்ளி (சமையலறை), திருமஞ்சனம் (அபிஷேகம்), திருமண் (நெற்றியில் இடப்படும் திரு நாமம்). அகம் (வீடு), அமுது செய்வது (இறைவனுக்கு  உணவு படைப்பது)   போன்ற தூய தமிழ்சொற்கள் வழக்கத்தில் உள்ளன.  இந்த தூய தமிழ் சொற்களை பிறர் (டி.விகள் உட்பட) கேலி செய்வதால், பலர் வெளியில் உபயோகப்படுத்தவும் தயங்குகிறார்கள்.  இதுதான்,  தமிழ் பேசுபவர்களுக்கு ஏற்படும் இன்றைய நிலை. 
வைணவ திருக்கோவில்களிலும், இல்லங்களிலும்  தமிழை உபயோகப்படுத்தும்  முறையை இராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  தோற்றுவித்தார்.   செம்மொழி மாநாடு போல ஆர்ப்பாட்டம்   ஆரவாரம்  இல்லாமல், ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக,   சைவ மற்றும்  வைணவ திருக்கோவில்கள் தமிழை வளர்து வருகின்றன.   இந்த மாநாட்டில், ஆன்மீகத்தமிழிற்கு அதிக முக்கியத்துவம் இல்லாததால், வெற்றிகுரலின் பங்களிப்பாக, "வைணவத்தில் தமிழ்" என்கிற தலைப்பில்,  வைணவப்பிரபந்தங்களில் பிரபல ஆராய்ச்சியாளர் தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்) திரு கோசகன் அவர்களுடன் தொலைபேசியில். ஒரு பேட்டி க்ண்டேன். 

இந்த பேட்டியை (20 நிமிடங்கள்) 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும்.  இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து கேட்கவும்.



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857495

வியாழன், 17 ஜூன், 2010

அரசியல் கட்சிகளுக்காக நடத்தப்படும் சர்வேக்களின் நம்பகத்தன்மை

சென்ற மாத இறுதியில், ஜூ.வியின் மிஸ்டர் கழுகு பாணியில், மிஸ்டர் மதியின் சூடான செய்திகளை http://www.ilakku.in/ என்கிற இணைய தளத்தில் யாரோ வெளியிட்டு வருகிறார்கள். ஆரசியலில் தினந்தோறும் அரங்கேறும் நகழ்வுகளை சூடாகவும் சுவையாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு பத்திரிகையாளர் சோ, ஜெயலலிதாவை சந்தித்ததாகவும், அரசியல் ஆலோசனைகளை சோ அளித்ததாகவும் எழுதியிருந்தார்கள். அதே செய்தியில், இலவசமாக தரும் ஆலோசனைகளை யாரும் மதிப்பதில்லை என்றும், ஏதாவது வெளிநாட்டு நிறுவனங்கள் சர்வே என்கிற பெயரில், பல லட்சங்களை பெற்றுக்கொண்டு அழகான பைண்டு செய்து கொடுக்கும் ஆலோசனைகளை தான் நம்புவார்கள் என்றும் குறிப்பிட்டு இருந்தார்கள்.
அதன் தொடர்ச்சியாக இன்றைய இதழில், அண்ணா திமுக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் அரசியல் சர்வேயை ஒப்படைக்க இருப்பதாக ஒரு செய்தியும் வெளியிட்டுள்ளார்கள்.

நானும் கார்ப்பொரேட் நிறுவனங்களில், ஊழியர்களீன் ஆழ் மனத்தில் இருக்கும் மன ஓட்டங்களை (perception) அறியும் இமேஜ் ஆடிட்டையும் செய்பவன்.  அத்னால், இந்த அரசியல் சர்வேக்களின் நம்பகத்தன்மை பற்றி எனக்கு ஒரு மாறுபட்ட கருத்து உண்டு.  அந்த நிறுவனங்கள் செய்யும் முறை பற்றி நான் குறை கூறவில்லை. 

பொதுவாக ஒவ்வொருவருடைய ஆழ்மனத்தில் இருக்கும் அடிப்படை எண்ணங்கள் மாறுபாட்டுக்கு உட்பட்டவை.  பொதுவாக கார்ப்பொரேட் நிறுவனங்களில், நாங்கள் நடத்தும் இமேஜ் ஆடிட்டிற்கும், அரசியல் கருத்து கணிப்பிற்கும் அதை நட்த்தும் முறையில் வித்தியாசம் இருக்காது. இரண்டுமே, இரகசியமாகத்தான் நடக்கும்.   ஆனால், கருத்து கூறுபவர்களின் மன ஓட்டத்தில் வித்தியாசம் உண்டு.  கார்ப்பொரேட் நிறுவன ஊழியர்கள், தங்கள் கருத்துக்களை கூடியவரையில் அதாவது 90 சதவிகததிற்கு மேல் சரியாக தங்கள் மனதில் தோன்றியதை frank  ஆக பதிவு செய்வார்கள்.  

ஆனால், அரசியல் கருத்துகணிப்பில், பொதுவாக, மக்கள் தங்கள் கருத்துக்களை சரியாக frank  ஆக பதிவு செய்ய தயங்குவார்கள்.  எதிர்மறையான கருத்து கூற தயக்கம் காட்டுவார்கள்.  டி.வி. காரர்களீடம் பேசும் போதும் மிகவும் ஜாக்கிரதையாக பேசுவார்கள். கலைஞர் டிவிக்கு ஒரு மாதிரியாகவும் ஜெயா டிவிக்கு வேறு மாதிரியாகவும் பேசுவார்கள்.   தங்களை சுற்றி இருப்பவர்கள், பல கட்சிகளை சார்ந்தவராக இருப்பதாலும்,  'ஏன் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டும்' என்கிற எண்ணத்தாலும், பல சமயங்களில் கருத்து கணிப்புகள் பொய்யாகிவிடுகின்ற்ன.  கடந்த சில் ஆண்டுகளில், இந்திய வாக்காளர்களின் மன ஓட்டத்தை கணிப்பது மிகவும் கடினமன ஒன்றாகி விட்டது.  அமெரிக்காவில் நிலையே வேறு.

தற்போது நடத்தப்படும் கருத்து கணிப்பிற்கும், ஆறு மாதங்களுக்கு பிறகு நடத்தப்ப்டும் கருத்து கணிப்பிற்கும் அதிக அளவில் வித்தியாசம் இருக்கவும் வாய்ப்புண்டு.  இதற்கு பல காரணங்கள் உள்ளன.  ஒரு கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருப்பது போன்ற ஒரு கருத்து கணிப்பு மாயையை தோற்று வித்து, அதையே பல தடவை, டி.வி மற்றும் மீடியாக்களில் பரவ் விட்டால், அது கூட மக்கள் கருத்துக்களை பாதிக்க வாய்ப்புண்டு.  

இந்த கருத்து கணிப்பால், ஓரளவு, மக்கள் மனத்தை பாதிக்கும் பிரச்சனைகளை கணக்கிட்டு,  அதை களைய முயற்சி செய்யலாம்.   இந்த சர்வேக்களை முழுவதுமாக நம்பி கெட்டவர்கள்தான் அரசியலில் அதிகம்.  

ஞாயிறு, 6 ஜூன், 2010

கோலங்கள் புகழ் 'தோழர் பாலகிருஷ்ணனுடன்' ஒரு சுவையான பேட்டி

வெற்றிகுரல் இதழ் 16
சன் டி.வியில் அண்மைக்காலம் வரை, 'கோலங்கள்' மெகா தொடர் ஒளிபரப்பாகி வந்தது அனைவருக்கும் நினைவிருக்கும்.  அந்த கோலங்கள் தொடரில், 'தோழர் பாலகிருஷ்ணன்' என்கிற க்தாபாத்திரத்தில் நண்பர் ஆதவன் என்கிற ஆவுடையப்பன் அழகு தமிழில் பேசி அசத்தியதை எவரும் மறந்திக்க முடியாது.  சன் டிவி தொடரில், அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற க்தாபாத்திரமும் 'தோழர் பாலகிருஷ்ணனே'.

ஆதவன் அவர்கள்,  தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு தோழர் பாலகிருஷ்ணனாகவே வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 
அவரது சுவையானதும், காரசாரமானதுமான பேட்டியை, கீழ்கண்ட ஃபிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்டில், சீராக வரும்.  தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து, mp3  பிளேயரில், கேட்கவும்.

இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...