This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8
தேர்தல் 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் 2009 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மே, 2009

அரசியல் வியாபாரிகளின் ஆட்டம் ஓய்ந்தது! சிவகங்கை தொகுதி முடிவில் குளறுபடி!!

இந்தியாவில் 15வது பொது தேர்தல் முடிந்து விட்டது.  கருத்துக்கணிப்புகள், தடை செய்யப்பட்ட நிலையில், பத்திரிகைகள் வெளியிட்ட  யூகங்கள் பொய்யாகி விட்டன.  மத்தியில், மன்மோகன் சிங் அரசு மீண்டும்,  நிலையான ஆட்சி அமைக்க மக்கள் ஓட்டளித்துள்ளார்கள்.பாஜக அணி, எதிர்பார்த்தைவிட குறைவாகவே இடங்களை பெற்றுள்ளது.  பிரதமர் கனவுடன் போட்டியிட்ட, மூன்றாம் அணி, நான்காம் அணிகள் மண்ணை கவ்வின.  நாளொருதோறும், மன்மோகன் சிங் அரசை மிரட்டியே தங்களை வளர்த்துக்கொண்ட இடது சாரிகள், குறைந்த இடங்களையே பெற்றுள்ளனர். 

தமிழகத்தில், பெரிய கூட்டணியாக கருதப்பட்ட அதிமுக கூட்டணி, எதிர்பார்த்த அளவு இடங்களை பெறவில்லை.  ஒவ்வொரு தேர்தலிலும் அணி மாறி, தங்கள் நலனையே பாதுகாத்துக்கொண்ட பாமக, ஏழு இடங்களிலும் மண்ணை கவ்வின.மதிமுக ஒரு இடத்தில் தான் வெற்றி பெற்றது. 

திமுக அணி மீது, அதிக அளவில் வாக்காளர்களூக்கு பணம் அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சிவகங்கை தொகுதியில் மத்திய அமைச்சர் சிதம்பரம் வெற்றி பெற்றதில் பெரிய சந்தேகம் உள்ளது.  தேர்தல் அதிகாரிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கு இடமான முறையில் இருந்ததாக மீடியாக்கள் கூறுகின்றன.  எதிர் கட்சிகள், நீதிமன்றத்துக்கு சென்றால், நீதி கிடைக்க குறைந்தது 6 அல்லது 7 வருடங்களாவது ஆகும்.  தேர்தல் கமிஷனின் நடுநிலை மக்களால் சந்தேகிக்கப்டுகின்றன.  ந்வீன் சாவ்லாமீது, எதிகட்சிகள் குற்றம் சாட்டப்படும் நிலையில், இது அவரது நம்பகத்தன்மையை குறைக்கிறது. 

பொதுவாக, மக்கள், இந்திய அளவில், ஒரு நிலையான ஆட்சி அமைக்க விருப்பம்  தெரிவித்துள்ளார்கள்.  பிஜேபி உட்பட அனைத்து கட்சிகளூம் இதிலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் உள்ளன.  அதே சமயம், காங்கிரஸும் வெற்றி ஆணவத்தில் இருந்தால், அவர்களும், அடுத்த தேர்தலில் தோல்வியை தழுவ வேண்டியிருக்கும்.

தமிழக மற்றும் தேசிய அரசியல் நிலை பற்றி, பிரபல பத்திரிகையாளர் திரு சிகாமணீயிடம் நான் தொலைபேசியில் பேட்டி கண்டேன். அந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி, கேட்கவும்.    இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்ட்டாப்பில் சேமித்து கேட்கவும் ( 19 நிமிடங்கள்)



இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857421

வெள்ளி, 15 மே, 2009

கருத்து கணிப்புகள் (exit poll) - நம்பக்கத்தக்கவையா? ஒரு சூடான விவாதம்

கடந்த மே 13ம் தேதி மாலை 5 மணிக்கு ஐந்து கட்டங்களாக நடந்த இந்திய மக்களவை தேர்தல் முடிந்து விட்டது. இந்த தேர்தலில், தேர்தல் ஆணையம், ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடியும் வரை, கருத்து கணிப்புக்களையோ அல்லது எக்ஸிட் போல் எனப்படும் கணிப்புக்களையோ வெளிடக்கூடாது என்று ஆணை பிறப்பித்திருந்த்து. அதனால், அனைத்து டி.வி. சேனல்களும் 13ம் தேதி, மாலை 5 மணிமுதல், அவரவர்களது கணிப்புக்களை வெளியிட்டார்கள்.

இது போன்ற கணிப்புக்கள், கடந்த 2004 பொது தேர்தல், குஜராத் மற்றும் உத்தர்பிரதேஷ் மாநில சட்டசபை தேர்தல்களில் பொய்த்து விட்டன. அதனால், இந்த கணிப்புக்கள் மக்களிடையே ஒரு பெரிய நம்பிக்கையை தோற்றுவிக்கவில்லை. டி.வி. சேனல்களையும் குறை கூறமுடியாது. அவர்களும், மக்களின் எதிர்பார்ப்புகளூக்கு ஏதாவது சூடாக கொடுக்க வேண்டும். கொடுத்துவிட்டார்கள். அதன் நிலை அவ்வளவுதான்.

நான் இமேஜ் ஆடிட் என்கிற 'perception study' செய்யும் தொழிலில் இருப்பவன். www.imageaudit.com என்கிற இணைய தளத்தில் பல கருத்துக்களை பல ஆண்டுகளாக சொல்லி வருகிறேன். எந்த கணிப்புக்களிலும், மக்களின் ம்ன ஓட்டத்தை அறிய வேண்டுமானால், கீழ்கண்ட மூன்று கருத்துக்களும் முக்கியமானவை.

1. sample size என்ப்படும், மாதிரி கருத்துக்கள். அந்த sample, பொர்துவாக அனைத்து மக்களின் கருத்துக்களையும் பிரதிபலிக்குமாறு தேர்ந்து எடுக்கவேண்டும். இதில் தவறு இருந்தால், முடிவுகள் சரியாக வராது.

2. எவ்வாறு கருத்து கணிப்புக்களை நடத்துவது என்பது இரண்டாவது முக்கியமான ஒன்று. அதில் கேட்கப்படும் கேள்விகள், அதை செயல் படுத்துவரின் திறமை, அவர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி முக்கியமானவை.

3. முதல் இரண்டும் சரியாக இருந்தாலும், கடைசியாக, அந்த கருத்துக்களை சொல்லும் மக்கள், ஒளிவு மறைவு இல்லாமல், வெளிப்படையாக கருத்து சொல்ல வேண்டும். அவை honest அல்லது transparent கருத்துக்களாக இருப்பது மிகவும் இன்றியமையாதது.

ஆனால் நடைமுறையில், இந்த கருத்து கணிப்புக்கள், அவசர அவசரமாக நடத்த்ப்படுகின்றன. sample size சரியாக இருப்பதில்லை. பயிற்சி பெறாத பல மாணவர்கள் இந்த கணிப்புகளுக்காக அமர்த்தப்படுகிறார்கள். அவர்களுக்கு, அவர்கள் எடுக்கும் பாரங்களூக்கு தகுந்தவாறு அல்லது நாட்கணக்கில் ஊதியம் வழ்ங்கப்படுகிறது. அதில் அதிக தவறுகள் நடக்கின்றன. மேலும், கருத்து சொலலும் மக்கள், பல காரணங்களூக்காக தங்கள் உண்மையான கருத்துக்களை தேர்தல் சம்பத்தப்பட்ட விஷயங்களில் சொல்வதில்லை. இந்த தேர்தல் கணிப்புக்கள் மிகவும் சென்சிடிவான் விஷயம். மிகவும் நுட்பமாக கையாள வேண்டும்.

கருத்து கணிப்புக்கள் அறிவு சார்ந்த, அறிவியல் பூர்வமான ஒன்று. அதில் குறை கூற முடியாது. ஆனால், பல நடைமுறை சிக்கல்களால், இந்தியாவில், பொய்த்துப்போகின்றன. அவர்கள் மதிப்பிடும் எண்களில் தவறு நேரிட்டாலும், ஒரு மாதிரியாக trend தெரிய் வாய்ப்பு உள்ள்து.

இது ச்ம்பந்தமாக, நேற்று இரவு (14 மே 2009) 9.30 மணிக்கு என் நண்பர் மாலன் நடத்தும் 'மக்கள் தீர்ப்பு 2009' நிகழ்ச்சியில், என் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள , ஒரு 'வல்லுநர்' என்கிற முறையில் என்னையும் அழைத்து இருந்தார்கள். இந்த் முழு நிகழ்ச்சியையும், (29 நிமிடங்கள்), 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த வீடியோவை, பிராட்பேண்டில் சீராக கேட்க முடியும். சீராக வரவில்லை என்றால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து கேட்கவும்.



இந்த வீடியோவை, கீழ்கண்ட த்ளத்டிலும் கேட்கலாம்.
http://blip.tv/file/2115592/

புதன், 13 மே, 2009

தேர்தல் குளறுபடிகள் - யார் பொறுப்பு?

தமிழகத்தில் ஒரு வழியாக தேர்தல் முடிந்து விட்டது. பல இடங்களில், பலர் வாக்காளர்களின் பட்டியலில் இடம் பெற வில்லை. பலர் வாக்காளர் அடையாள அட்டைகள் பெற்றிருந்தும், அவர்கள் பெய்ர் பட்டியலில் இல்லை. பல குளறுபடிகள்.

மக்களவை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், இந்தியா விஷன் சார்பாக ""Celebrate Democracy - Vote India" என்கிற பிரச்சாரத்தை, டாக்டர் அப்துல் கலாமின் வாழ்த்துரையுடன் நான் துவங்கியது நினைவிருக்கலாம். இது தவிர, மற்ற அமைப்புகளீலும் சேர்ந்து, அனைவரும் குறிப்பாக இளைஞர்கள் வோட்டளிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வந்திருந்தேன்.

கட்ந்த மாதம், இந்த பிரச்சாரத்தை துவக்கியபின், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் இணைய தளத்தில், எங்கள் பகுதியின் வாக்காளர் பட்டியலை பார்த்தேன். எங்கள் குடும்பத்தில் அனைவரது பெயரும் காணப்படவில்லை. தற்போதுள்ள விலாசத்திலேயே கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து தேர்தல்களிலும் வாக்க்ளித்துள்ளேன். வாக்காளர் பட்டியலை திருத்தும் போது, அதிகாரிகள் வீட்டிற்கு வந்து, புகைப்படம் எடுத்துள்ளார்கள். அனைத்தும் சரியாக இருக்கிறது என்பதன் அடையாளமாக ஒரு ஸ்டிக்கரையும், வீட்டு நிலைப்படியில் ஒட்டி சென்றுள்ளனர். இருந்தும், எங்களது பெயர்கள் விடுபட்டது குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

உடனடியாக தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரி திரு நரேஷ் குப்தாவிடமும் தொலைபேசியில், இது போன்று பலரது பெயர்கள் விடுபட்டிருக்கும் என்று முதல் தகவல் கொடுத்தேன். அவரது அறிவுரையின், பேரில், சென்னை மாநகராட்சியின் எட்டாவது மண்டலத்தின் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தேன். உடனடியாக அவர் ஒரு அதிகாரியை அனுப்பி, எனது புதிய விண்ணப்த்தை வாங்கிக் கொண்டார்.

கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனது பெயர், துணை பட்டியலில் சேர்ந்ததா என்பது பற்றி விஜாரிக்க ஆரம்பித்தேன். துணை பட்டியலை அவர்களது இணைய தளத்திலும் வெளியிடவில்லை. அரசியல் கட்சியின் எங்கள் பகுதி பொறுப்பாளர்களிடமும் இந்த துணை பட்டியல் இல்லை.

இன்று காலை (13 மே 2009), ஒரு மணி நேரம், தேர்தல் சாவடியில், கியூவில் நின்று, அங்கிருந்த பொறுப்பாளர்களீடம் கேட்டதில், அவர்கள் என் பெயர் பட்டியலில் இல்லை என்று கை விரித்து விட்டார்கள்.

மற்றவர்களை ஓட்டு போடும் படி பிரச்சாரம் செய்த எனக்கே ஓட்டு இல்லை என்கிற வருத்தத்தில், மாநகராட்சி கமிஷனர் அலுவலகத்தில் இந்த த்கவலை தெரிவித்தேன். அவர்கள் ஒரு மணி நேரத்தில், என்னுடைய பெயர் துணைபட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், என்னுடைய நம்பரையும் தெரிவித்தார்கள். நான் ஒரு பத்திரிகைத்துறையைச் சேர்ந்தவன் என்பதாலும், பல உயர் அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ள் வாய்ப்பு உள்ளவனாதனாலும், என்னுடைய நீக்கப்பட்ட பெயர்கள் திரும்பவும் சேர்க்கப்பட்டன. (அப்படியும் எங்கள் குடும்பத்தில் ஒரு பெயரை சேர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த தேர்தலில் பலரது பெயர்கள் பட்டியலில் விடுபடுள்ளன. தங்கள் பெயர் இல்லை என்று தெரிந்து ஏமாற்றத்துடன் பலர் திரும்பியதை நான் பார்த்தேன். எந்த ஒரு சிபாரிசும் இல்லாத ஒரு சராசரி குடிமகனுக்கு இதுபோன்று, பெயர் நீக்கப்பட்டால், அவர்கள் என்ன செய்வார்கள். துணைப்பட்டியலிலும் பல பெயர்கள் சேர்க்கப்படவில்லை என்று கூறுகிறார்கள். துணைப்பட்டியலும் வெளியிடுவதில் தாமதம். வாக்காளர் பட்டியலிலும், போட்டோக்கள் மாறி மாறி ஒட்ட்ப்பட்டுள்ளன. சொதப்பல் அதிகமாக இருந்தது.

வாக்காளர் பட்டியலை திருத்துவதற்கு, தேர்தல் ஆணையம் ஆயிரக்கணக்கான கோடிரூபாய்களை செலவு செய்கிறது. இவ்வளவு செலவு செய்தும், எனோ தானோ என்று பொறுப்பற்ற முறையில், அரசு உழியர்கள் பணியாற்றுகிறார்கள். கணினி யுகத்தில், ஏன் இவ்வாறு நடக்கிறது என்பது தெரியவில்லை.

தேர்தல் ஆணையம் உடனடியாக, வாக்காளர் பட்டியலை திருத்தும் பணீகளை ஆய்வு செய்து, குறைபாடுகளை களைய வேண்டும். இந்த செலவுகளை, இந்திய தபால் துறைக்கு கொடுத்தால், அவர்கள் இந்த பட்டியலை சரி செய்து கொடுப்பார்கள். த்பால் துறை ஊழியர்கள், நாட்டின் அனைத்து கிராமங்கள், நகரங்களையும் சிறப்பான முறையில் அறிந்து வைத்துள்ளார்கள்.

பூனைக்கு யார் மணி கட்டுவது?

திங்கள், 11 மே, 2009

தமிழக தேர்தல் வேட்பாளர்களின் சொத்து, கடன், குற்ற பின்னணி விவரங்கள்


வெற்றி குரல் இதழ் 14

இந்த இடுகையை எழுதும் நேரத்தில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒய்ந்து விட்டது. வருகிற மே 13ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்க இருக்கிறது. இந்த நிலையில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்து, கடன், மற்றும் குற்ற பின்னணி ஆகியவைகளை அவர்கள் சம்ர்ப்பித்த மனுக்களிலிருந்து தொகுத்து பத்திரிகைகள் மூலமாக ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் முதல் நாள் வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி, தமிழக வேட்பாளர்களைப்பற்றிய விவரங்களையும் இன்று பத்திரிகையாளர்கள் முன் வெளியிட்டார்கள்.

இந்த தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தில் பல பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒய்வு பெற்ற ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பல இடங்களிலிருந்தும் பலர், முக்கியமாக மாணவர்கள், இண்டர்நெட் மூலமாக இந்த விவரங்களை தொகுத்தனர்.

வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தபின், அந்த மனுக்களை 'ஸ்கேன்' செய்து சென்னையிலுள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பர். தலைமை தேர்தல் அதிகாரி, அந்த விவரங்களை, jpeg ஃபைலாக அவர்களது இணைய தளத்தில் வெளியிடுவர். தம்ழகத்தில் 877 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பல ஃபைல்களை பதிவிறக்கம் கூட செய்ய முடியவில்லை என்று, தேசிய தேர்தல் கண்காணிப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தேர்தல் ஆணையம், இந்த விவரங்களை சரியாக உடனடியாகவும் தங்கள் இணைய தளத்திலும் வெளியிடவில்லை. இந்த கம்பூட்டர் யுகத்தில், இது போன்று, காலம் தாழ்த்தியும், பதிவிறக்கம் செய்ய முடியாமலும் வெளியிட்டால், மக்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் சட்டசபை, மற்றும் மக்களவை தேர்தலிலாவது, கணினி மூலம் இந்த விவரங்களை அளிக்கலாம். லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு விண்ணப்ங்களையே சமாளிக்கும் அரசாங்கம், இந்த விண்ணப்ங்களை மனம் இருந்தால், சரியாக வழங்க முடியும்.

அகில இந்திய அளவில், அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும் http://www.myneta.info என்கிற் இணைய தளத்தில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம் வெளியிடுகிறது.

இது சம்பந்தமாக, தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தின் தமிழக நிர்வாகிகளை, பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேட்டி கண்டேன். அவர்களது பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமித்து கேட்கவும். (12 நிமிடங்கள்)



இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857419

ஞாயிறு, 3 மே, 2009

தமிழக அரசியல் அணிகளின் பலமும், பலவீனமும்!

Tada Periaswamy
வெற்றி குரல் இதழ் 13

இலங்கை பிரச்சனை என்றுமில்லாத அளவிற்கு தமிழக மீடியாக்கள் மூலமாகவும் அரசியல் கட்சிகள் மூலமாகவும் ஒரு தேர்தல் பிரச்சனையாக்கப்பட்டுள்ளது. திமுக அணியும், அதிமுக அணியும் போட்டி போட்டுக்கொண்டு தங்கள் நாடகங்களை தினந்தோறும் அரங்கேற்றம் செய்கின்றன. உண்மையிலேயே, அவர்களுக்கு இலங்கை தமிழர்கள் மீது பாசம் இருந்தால், மத்திய அரசில் இன்று வரை அங்கம் வகிக்கும் திமுகவும், சில மாதங்களுக்கு முன்பு வரை அரசை ஆட்டிப்படைத்த இடது சாரிகளும், சில தினங்கள் முன்புவரை அரசில் அங்கம் வகித்த பாமகவும் எவ்வளவோ செய்திருக்க முடியும். பாமகவும், இடதுசாரிகளும் அணிமாறியதால், அவர்கள் இலங்கை பிரச்சனையில், மத்திய அரசின் நிலைப்பட்டினை குறை சொல்ல முடியாது. மத்திய அரசின் அனைத்து முடிவுகளுக்கும், அவர்களூம் பொர்றுபேற்க வேண்டும். ஜெயலலைதாவோ ஒரு அந்தர் பல்டி அடித்து விட்டார். திடீரென்று இலங்கை தமிழர்கள் மீது பாசத்தை பொழிகிறார். தமிழ் ஈழத்தை உருவாக்கி தருகிறேன் என்கிறார்.

இந்த நாடகங்களை மக்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தங்கள் சுய லாபத்திற்கு, இலங்கை மக்களை வசதியாக உபயோகப்படுத்திக்கொள்வதாக மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். தேர்தல் முடிந்த அடுத்த நாள், அதாவது மே 14ம் தேதி, அவர்களது சிந்தனையில், இலங்கையாவது, தமிழர்களாவது. அவர்களது செய்கையெல்லாம், அடுத்த அரசுக்கான ரகசிய பேரங்களே.

இந்த சூழ்நிலையில், தமிழக அரசியல் அணிகளின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பது பற்றி மூத்த தலித் தலைவர் திரு தடா பெரியசாமியிடம் ஒரு தொலைபேசி பேட்டி கண்டேன். வெளிப்படையாக பல கருத்துக்களை பேட்டியில் தெரிவித்தார்.

அவரது பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ' பிளே' பட்டனை அழுத்தி, கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து , டெஸ்க்டாப்பில் சேமிக்கவும். (13 நிமிடங்கள்)



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857406

சனி, 25 ஏப்ரல், 2009

இலங்கை பிரச்சனை தமிழக தேர்தலை பாதிக்குமா?

வெற்றிகுரல் இதழ் 12

தமிழக அரசியல் களம் சூடாகி விட்டது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அணிகள் மோத தயாராகி விட்டன. இந்த நிலையில், தமிழக மக்களிடையே, எந்தெந்த பிரச்சனைகள் தேர்தல் பிரச்சனைகளாக உருவாகி வருகின்றன என்பது பற்றி விவாதங்கள் மீடியாக்களில் வருகின்ற்ன. அனைத்து கட்சிகளும், இலங்கை பிரச்சனையை பெரிதாக்கி, அதுதான் மக்கள் மனத்தில் இருப்பதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகின்றன.

மேலும் விஜயகாந்த், திமுக அணிக்கு எதிரான வாக்குகளை பிரித்து, திமுக விற்கு ஆதரவாக இருப்பதாகவும் மீடியாக்கள் மத்தியில் ஒரு பேச்சு அடிபடுகிற்து.

தமிழக தேர்தல் பிரச்சனைகள் பற்றி, வெற்றி குரலுக்காக, நான் டெலிகிராப் பத்திரிகையின் இணை ஆசிரியர் திரு ஜி.சி. சேகர் அவர்களை தொலைபேசி மூலம் பேட்டி கண்டேன். திரு சேகர் ஒரு பிரபல பத்திரிகையாளர். கடந்த 30 வருடங்களாக பல வட இந்திய பத்திரிகைகளில் அரசியல் பற்றிய கட்டுரைகளை எழுதி வருகிறார்.

இந்த பேட்டியை, கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ,பிராட் பேண்டுகளில் சீராக வரும். ஏதாவது த்டங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் சேமித்து mp3 பிளேயரில் கேட்கலாம்.



அவரது பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://podbazaar.com/permalink/144115188075857400

புதன், 22 ஏப்ரல், 2009

ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் - அடித்து சொல்கிறார் அர்ஜுன் சம்பத்

Arjun Sampath, Hindu Makkal Katchiவெற்றி குரல் - இதழ் 11

தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சிகள் அணி அமைத்து விட்டன. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

இந்து மக்கள் கட்சி, ஜெயல்லிதாவிற்கு அதிரடியாக ஆதரவு தந்து, பிரச்சாரத்தை துவக்கி விட்டது. பெரியார் சிலை உடைப்பு, தாய் மதம் திரும்புதல் முதலிய நிகழ்ச்சிகள் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமானவர் திரு அர்ஜுன் சம்பத். சில மாதங்களுக்கு முன், தமிழக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். சில நாட்கள், தலைப்பு செய்தியாகி இருந்தவர்.

வெற்றிகுரல் சார்பாக, நான் அவரை தொலைபேசி மூலம் பேட்டி கண்டேன். ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று அடித்து சொல்லும் அர்ஜுன் சம்பத், அவரது கொள்கைக்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளுடன் எவ்வாறு செயல் படுவார் என்று கூறினார். தமிழகத்தில், தேர்தலில் மக்கள் முன் இருக்கும் பிரச்சனைகள், இலங்கை பிரச்சனை, சுவிஸ் வங்கி கணக்குகள், தேர்தலுக்கு பின் அமைய இருக்கும் அரசு ஆகியவை பற்றியெல்லாம் பேசினார். அவரது பரபரப்பான பேட்டியை நீங்களூம் கேளுங்களேன்.

கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை கிளிக் செய்து அவரது பேட்டியை கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க்டாப்பில் சேமித்து, mp3 பிளேயரில் கேட்கவும்) - 15 நிமிடம்.



இந்த பேட்டியை கீழ்கண்டதளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857398



புதன், 8 ஏப்ரல், 2009

சிதம்பரத்தை ஷூவினால் தாக்கிய ஜர்னைல் சிஙகிடம் பிரத்தியேக பேட்டி

Jarnail Singh asking question to the Minister, before the incident
நேற்று (7 ஏப்ரல் 09) மதியம், மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போது, ஜர்னைல் சிங் என்கிற ஒரு இந்தி பத்திரிகை நிருபர், 1984ல் சுமார் 3000 சீக்கியரகளை கொன்ற வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட ஜகதீஷ் டைட்லரை சி.பி.ஐ விடுவித்தது பற்றி வினவினார். சிதம்பரம் தந்த மழுப்பனான பதிலில் திருப்தி ஆகாத ஜர்னைல் சிங், தனது காலிலிருந்த ஒரு ஷூ வை கழட்டி சிதம்பரத்தை நோக்கி வீசி தன்னுடைய அதிருப்தியை காட்டினார்.

இது அனைத்து டி.வி.க்களிலும், மீடியாக்களிலும் தலைப்பு செய்தியாக இன்று வந்துள்ளது. நான் இன்று மதியம் ஜர்னைல் சிங்கை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பாட்யூனிவர்சலுக்காக ஒரு பேட்டி கண்டேன். அவர் எதற்காக இவ்வாறு நடந்து கொண்டார் என்று வினவினேன்.

அவர் தன்னுடைய நடத்தைக்காக மிகவும் வருத்தப்பட்டார். தான் சிதம்பரத்தை தாக்க வேண்டும் என்கிற நோக்கில் ஷூவை வீசவில்லை என்றும், அவரிடம் தன்னுடைய அதிருப்தியை காட்டவும், சிதம்பரத்தின் அருகிலிருந்த ஒரு வெற்றிடத்தை நோக்கி ஷூவை வீசியதாகவும் என்னிடம் தெரிவித்தார். 1984ம் ஆண்டு நடந்த சீக்கியர்களின் படுகொலைக்கு நியாயம் வேண்டும் என்று் கூறினார். சிதம்பரத்தை சந்திக்கும்போது, அவரிடம் 'வருத்தம்' தெரிவிப்பதாகவும் கூறினார்.

அவரது முழு ஆங்கில பேட்டியை கீழ்கண்ட தளத்தில் கேட்கலாம்.
http://www.poduniversal.com/2009/04/what-prompted-jarnail-singh-to-throw.html

தமிழக தேர்தல் களம் - ஒரு சூடான அலசல்

M R Venkatesh, Senior journalist, Chennai வெற்றி குரல் இதழ் 9

தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. ஒரளவு பெரிய அனிகள் என்ன என்பது தெரிய வந்துவிட்டது. மதிமுக மட்டும் இன்னும் தொங்கலில் உள்ளது.

தமிழக அரசியலில், எந்த வகையான பிரச்சனைகள் முன்னிறுத்தப்படும் என்பது விவாதிக்கப்படுகிறது. இந்த நிலைமையில், தேசிய தேர்தல் களம் அதிக அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்கவிட்டது. வருண் காந்தி விவகாரம் அதற்கு லாலு கொடுத்த மிரட்டல் ஆகியவை பெரிய அளவில் பேசப்படுகிறது.

தமிழக மற்றும் தேசிய தேர்தல் களம் பற்றி, வெற்றி குரலுக்காக திரு எம். ஆர். வெங்கடேஷ் அவர்களை பேட்டி கண்டேன். வெங்கடேஷ் ஒரு மூத்த பத்திரிகையாளர். தற்போது, டில்லியிலிருந்து வெளிவரும் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் தமிழக அரசியல் நிருபர்.

அவரது பேட்டியை கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். (இந்த ஆடியோ பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கலிருந்தால், டவுன் லோடு செய்ய இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கவும் )







இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.odeo.com/episodes/24425019-Election-2009-Tamilnadu-and-National-political-trends

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

ஜனநாயகத்தை கொண்டாடுவோம் - FM ரேடியோக்களும் கூட்டணி போடுகின்றன

ChennaiLive FM 104.8அண்மையில் இந்தியாவிஷன் ஆன்லைன் குரூப், "Celebrate Democray - Vote India" என்கிற பிரச்சாரத்தை துவக்கியது. டாக்டர் அப்துல் கலாம் அவர்களும், இந்த பிரச்சாரத்திற்கு ஆதரவு அளித்து தன்னுடைய கருத்துகளையும் பதிவு செய்தார். இந்த பிரச்சாரத்தின் நோக்கம், இந்திய குடிமகன் ஒவ்வொருவரும், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றவேண்டும் என்பதே. தேர்தல் தினத்தன்று, அனைவரும், ஒட்டளிக்கும் இடத்திற்கு சென்று, ஓட்டளிக்க வேண்டும் என்பதே.

நாம் ஒட்டளிக்க வேண்டும் என்பதற்காகத்தான், நம் முன்னோர்கள் 200 ஆண்டுகாலம், அந்நியருடன் போராடி, சிறை சென்று, தங்கள் வாழ்வை தியாகம் செய்தார்கள். அவர்கள் செய்த தியாகத்தின் பலனை இன்று நாம் அனுபவிக்கிறோம். நம்முடைய கடமை, அவர்கள் வாங்கி கொடுத்த ஜனநாயகத்தை சிற்ப்பாக்க வேண்டும்.

ம்காகவி பாரதியார் இந்த சுதந்திர போராட்டங்களை பற்றி கூறுகையில், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம், சர்வேசா, கண்ணீரால் காத்தோம். கருகத்திருவுளமோ" என்று சுதந்திரம் வருவதற்கு முன்பே பாடினார். நம் முன்னோர்கள், கண்ணீரால் காத்த இந்த சுதந்திரத்தை சிறப்பாக்க வேண்டிய கடமை, அனைவருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கு உண்டு. இந்த கருத்துகளைத்தான், இந்தியா விஷன் உறுப்பினர்கள், பரப்பி வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை (4 ஏப்ரல் 2009), சென்னை லைவ், FM ரேடியோ, என்னை, இதுபற்றி பேட்டி எடுத்தனர். இளைஞர்களான சனோபார் என்கிற தயாரிப்பாளரும், அஜய் என்கிற் ரேடியோ ஜாக்கியும், சென்னை லைவ் FM எடுத்து வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை.

இந்த பேட்டியை நீங்களும் கேளுங்களேன். கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். ( இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கலாம்)



இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857388

செவ்வாய், 31 மார்ச், 2009

நடிகர் எஸ்.வி. சேகரின் மனம் திறந்த பரபரப்பான பேட்டி

S.Ve. Shekher, MLA of Mylaporeவெற்றிகுரல் இதழ் 8

பிரபல நடிகரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏயுமான திரு எஸ். வி. சேசர், அண்ணா திமுகவினால் ஓரம் கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்படுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர், கட்சி கூட்டங்களில் பங்கேற்க தலைமை அழைப்பதில்லை.

இதனிடையில் எஸ். வி. சேகர், நேற்று (30 மார்ச் 2009) தமிழக முதல்வர் திரு கருணாநிதியை சந்தித்து, பிராமணர்களூக்கு 7 சதவிகித இட ஒடுக்கீடு வேண்டும் என்று ஒரு விண்ணப்பம் கொடுத்துள்ளார். அது இன்றைய செய்திதாள்களில் ஒரு முக்கிய செய்தியாக வந்துள்ளது. இது குறித்து, எஸ். வி. சேகரிடம் தொலைபேசியில், வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன்.

நான் சற்றும் எதிர்பாராத வகையில், அவரது பேட்டி, மிகவும் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்து விட்டது. திடீரென்று ஏன் பிராமணர்களுக்காக 7 ச்தவிகித ஒதுக்கீடு கேட்டார், அண்ணா திமுக அவரை ஓரம் கட்டுவதனி பின்னணி, ஜெயலலிதாவின் முரண்பாடான நிலை, அண்ணா திமுக வில் ஓரம் கட்டப்ட்ட நிலையில் அவரை கட்சி வெளியேற்றினாலோ அல்லது அவராகவே வெளி வந்தாலோ அவரது எதிர்கால அரசியல் நிலை, விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் போன்ற நடிகர்கள் முதலமைச்சர் கனவுடன் அலைவதைப்பற்றி அவரது கருத்து, காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றிய அவரது வெளிப்படையான கருத்து மற்றும் அவருக்கு பிடித்த தேசிய அளவிலான தலைவர் ஆகியவை பற்றி மனம் திறந்து பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். (இந்த ஆடியோ, பிராண்ட்பாண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், டவுன் லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும்) - 27 நிமிடங்கள்



இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857384

திங்கள், 30 மார்ச், 2009

அத்வானி போட்ட குண்டு - சுவிஸ் வங்கியில் இந்திய கள்ள பணம் 25 லட்சம் கோடி!!

H Raja, Vice President, BJP, Tamilnaduவெற்றி குரல் இதழ் 8

அரசியல் களம் தேசிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்க விட்டது. நேற்று ((29 மார்ச் 2009) பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் திரு எல். கே. அத்வானி செய்தியாளர்களிடம் பேசிய போது ஒரு புதிய குண்டை போட்டார். சுவிஸ் வங்கிகளில் இந்திய கள்ள பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருப்பதாகவும், பிஜேபி ஆட்சிக்கு வந்தால், அந்த கள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதகவும் கூறினார்.

வருகிற் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஜி-20 மாநாட்டில், இந்த பிரச்சனையை பிற நாடுகள் எழுப்ப இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமயத்தில், திரு அத்வானி இந்த பிரச்சனைய எழுப்புவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் எத்தனை பெரிய தலைகளின் பெயர் அடிபடப்போகிறதோ - இறைவனுக்குத்தான் வெளிச்சம்.

இது பற்றி தமிழக பிஜேபியின் மாநில துணை தலைவர் திரு ஹெச். ராஜா அவர்களுடன் தொலைபேசியில் வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன். திரு ராஜா ஒரு சார்ட்டர்டு அக்கவுண்டண்ட். உயர் பதவியிலுள்ள பலருக்கு, சுவிஸ் வங்கியில் பணம் இருப்பதாக கூறினார். அவரது முழு பேட்டியையும், கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோ சீராக இல்லையென்றால், டவுன்லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும். (14 நிமிடம்)



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857383



ஞாயிறு, 29 மார்ச், 2009

நடிகர் விஜயகாந்தின் நிலை விசித்திரமானதா?

மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் டி. சிகாமணீவெற்றிக்குரல் இதழ் 7

தமிழகத்தில் விஜயகாந்த் தன்னை நம்பியே பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அந்த இடங்களில் பாரதீய ஜனதா கட்சியுடனும், காங்கிரசுடனும் மோத இருக்கிறார். இந்த தேர்தல், மக்களவைக்கான தேர்தல். டில்லியில் யார் ஆட்சி அமைப்பது பற்றிய தேர்தல். இந்த தேர்தலில் விஜயகாந்த் யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்பார்? தமிழக சட்டசபை தேர்தல் என்றாலும், அவர் தன்னை முதல்வராக முன்னிறுத்தி ஓட்டு கேட்கலாம். மற்றவர்கள் விஜயகாந்தை உசுப்பி விட்டு, உசுப்பி விட்டு தன்னை ஒரு எம்.ஜி.ஆராகவே நினைத்து கொண்டு விட்டார் என்றும் விமர்சிக்கிறார்கள்.

இந்த தேர்தலில் தமிழகத்தில், பாஜக மற்றும் பி.எஸ்.பி நிலைப்பாடுகள் என்ன?

தற்போது, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் எதிராக பிரச்சாரம் செய்து ஒட்டு வாங்கும், அதிமுக, மதிமுக, பாமக, விஜயகாந்த், கம்யூனிஸ்ட்கள், தேர்தலுக்கு பிறகு, காங்கிரசையோ அல்லது, ப்ஜேபியையோ ஆதரித்து, ஆட்சியில் பங்கு பெற்றால், அந்த நிலைமை, மக்களை ஏமாற்றுவது போல ஆகாதா?

இந்த் தேர்தலில், விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, உள் நாட்டு பாதுகாப்பு போன்ற அத்தியாவசமான பிரச்சனைகளை முன்னிறுத்துவார்களா? வருண் காந்தி விவகாரம் ஒரு டிராமாவா?

மேற்கண்ட வினாக்களுக்கு, தொலைகாட்சிகளில் அரசியலை அலசும், பிரப்ல பத்திரிகையாளர் திரு டி. சிகாமணியை வெற்றிகுரலுக்காக பேட்டி கண்டேன். அந்த பேட்டியை கீழே உள்ள பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். ( இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், ஆடியோவை டவுன்லோடு செய்து mp3 பிளெய்ரில் கேட்கவும்)



இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857382

வெள்ளி, 27 மார்ச், 2009

தேர்தலுக்கு பிறகு அணிகள் மாறுமா? ஒரு யதார்த்தமான அலசல்

வெற்றிக்குரல் - இணைய ஒலி இதழ் 6

தமிழகத்தில் இப்போது 4 அணிகள் இருக்கின்றன. திமுக அணி, அதிமுக அணி, விஜயகாந்த அணி மற்றும் பிஜேபி அணி. மாயவதி கட்சி, தனியாக முதன் முறையாக களம் இறங்குவதால், அவர்கள் ஒரு அணியாக கருதலாமா என்பது தெரியவில்லை.

திமுக அணியில் காங்கிரஸ் இருக்கிறது. மாநிலத்திலும், மத்தியிலும் இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்கின்றன. அதனால் ஏற்படக்கூடிய 'anti establishment' என்று கூறப்படும் வோட்டு இழப்பு இருவருக்கும் பாதிக்க்லாம். தவிரவும், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியிலிருந்து வெளியேறிவிட்டன. இதனால் கூட வோட்டு இழப்பை திமுக அணி சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுக அணிக்கு எதிரான வாக்குகள், அதிமுக அணி, பாஜக அணி, விஜயகாந்த் அணி ஆகிய அணிகளிடையே பிரிந்து போகவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், மைனாரிடி வாக்குகள் எவ்வாறு செல்லும் என்பதும் முக்கியமான விஷயமாகும்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும், தேர்தலுக்கு பிற்கு அணிகள் மாறவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது பற்றி பிரபல அரசியல் பத்திரிகையாளர் திரு நுருல்லா அவர்களை 'வெற்றிக்குரலுக்காக' இன்று காலை (27.3.09) தொலைபேசியில் பேட்டி எடுத்தேன்.. திரு நுருல்லா அவர்கள், தினமலர், தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். த்ற்போது, தினசுடர் பத்திரிகையில் பணியாற்றுகிறார். சென்ற பொது தேர்தலில் (2004), அவர் தினமலரில் எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரபலமனவை. அனைத்து அரசியல் தலைவர்களும் அவரது கருத்தை அறிய விரும்பினர்.

அவரது பேட்டியை, கீழே காணும் பிளாஷ் பிளேயரில், 'play' பட்டனை அழுத்தி, கேட்கவும் ( 18 நிமிடங்கள்). இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோவில் தடங்கல் இருந்தால், இந்த ஆடியோவை டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கவும்.



இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய்தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857381

வியாழன், 26 மார்ச், 2009

தேசிய கட்சிகளை ஏன் மாநில கட்சிகள் வறுத்து எடுக்கின்றனர்?

தடா பெரியசாமிவெற்றிக்குரல் - இதழ் 5

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிலை தேசிய கட்சிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில், ஒரு பெரிய கட்சி தலைமையில், கூட்டணி ஆட்சி என்கிற நிலை வந்துள்ளது. இந்த தேர்தலில், மாநில கட்சிகள், காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய இரு கட்சிகளையுமே, மாநில கட்சிகள் ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டன. பெரிய கட்சிகள பரிதாப்மாக சிறிய கட்சிகளை பேரம் பேசி தாஜா செய்ய வேண்டிய நிலை இப்போது வந்துள்ளது.

இந்த நிலைமை தேசிய நலனுக்கு உகந்ததா என்பது பற்றி, தேசிய அக்கறை கொண்ட அனைவரது எண்ணத்திலும் வந்துள்ளது. இது குறித்து, நான் திரு தடா. பெரியசாமியிடம் ஒரு பேட்டி கண்டேன். திரு பெரியசாமி, ஒரு காலத்தில் தீவிரவாதத்தில் இருந்து, மனம் மாறி, தற்போது, பெரிய அளவில் தலித் மேம்பாட்டிற்கு 60 இரவு பள்ளிக்கூடங்கள் நடத்தி சமூக சேவை செய்து வருகிறார். அவரால், சுமார் 3000 தலித் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் அமைப்பை திருமாவளவனுடன் இணைந்து நிறுவினார். அரசியல் மற்றும் தலித் சமூக பணிகளில் ஈடுபட்டிற்கும் இவர், தமிழக அரசியலில் ஒரு முக்கியமான குறிபிடத்தக்க தலித் தலைவர்.

(1) தேசிய கட்சிகளின் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம், (2) 60 ஆண்டுகளுக்கு பிறகும் ஏன் தலித மக்கள முன்னேற முடியவில்லை, (3) தேசிய நலனுக்காக காங்கிரஸும், பி.ஜே.பியும் ஒரு தேசிய அரசு அமைக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி மன்ம் திறந்து உரையாடினார்.

அவரது பேட்டியை 'கிளிக்' செய்து கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்ட் இணைப்பில் சரியாக கேட்கலாம். ஆடியோ சரியாக வரவில்லை என்றால், இந்த ஆடியோவை டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கலாம்)



இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857380

இனி வரும் நாட்களில், பல அரசியல் தலைவர்களீன் தமிழ் பேட்டிகளை இங்கு வெளியிட இருக்கிறேன். பதிவுகளை இமெயிலில் பெற வலது பக்கத்திலுள்ள அதற்குரிய கட்டத்தில், உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும்.

புதன், 25 மார்ச், 2009

தேர்தலில் சிறந்தவர்களை தேர்ந்தெடுக்க டாக்டர் கலாமின் வேண்டுகோள்


இந்தியா விஷன் ஆன்லைன் குழுமத்தின் சார்பில் "Celebrate Democracy - Vote India" என்கிற பிரச்சாரத்தை துவக்கியுள்ளோம். அதற்காக முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை தொலைபேசியில் பேட்டி கண்டேன்.

இந்திய் குடிமக்கள் அனைவரும், வாக்குரிமையை ஒரு புனிதமான கடமையாகக் கருதி, நல்ல மக்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், 15வது மக்கள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் அனைவரும் ஒரு ஐந்து அம்ச குறிக்கோளை ஏற்று தங்கள் தொகுதி மக்களுக்கு பணி செய்ய வேண்டும் என்றார். மக்களும், மீடியாக்களும், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட குறிக்கோளை அடிப்படையாக வைத்து உறுப்பினர்களை மதிப்பிடவேண்டும் என்றார்.

டாக்டர் கலாமின் முழு ஆங்கில பேட்டியையும் ( 7 நிமிடம் 50 செகண்ட்), பாட்யூனிவர்சல் இணைய தளத்தில் கேட்கலாம்.

http://www.poduniversal.com/2009/03/dr-abdul-kalam-exhorts-to-vote-for.html


அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...