This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 29 மார்ச், 2009

நடிகர் விஜயகாந்தின் நிலை விசித்திரமானதா?

மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் விமர்சகர் டி. சிகாமணீவெற்றிக்குரல் இதழ் 7

தமிழகத்தில் விஜயகாந்த் தன்னை நம்பியே பல இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். அந்த இடங்களில் பாரதீய ஜனதா கட்சியுடனும், காங்கிரசுடனும் மோத இருக்கிறார். இந்த தேர்தல், மக்களவைக்கான தேர்தல். டில்லியில் யார் ஆட்சி அமைப்பது பற்றிய தேர்தல். இந்த தேர்தலில் விஜயகாந்த் யாரை முன்னிறுத்தி ஓட்டு கேட்பார்? தமிழக சட்டசபை தேர்தல் என்றாலும், அவர் தன்னை முதல்வராக முன்னிறுத்தி ஓட்டு கேட்கலாம். மற்றவர்கள் விஜயகாந்தை உசுப்பி விட்டு, உசுப்பி விட்டு தன்னை ஒரு எம்.ஜி.ஆராகவே நினைத்து கொண்டு விட்டார் என்றும் விமர்சிக்கிறார்கள்.

இந்த தேர்தலில் தமிழகத்தில், பாஜக மற்றும் பி.எஸ்.பி நிலைப்பாடுகள் என்ன?

தற்போது, காங்கிரசுக்கும், பிஜேபிக்கும் எதிராக பிரச்சாரம் செய்து ஒட்டு வாங்கும், அதிமுக, மதிமுக, பாமக, விஜயகாந்த், கம்யூனிஸ்ட்கள், தேர்தலுக்கு பிறகு, காங்கிரசையோ அல்லது, ப்ஜேபியையோ ஆதரித்து, ஆட்சியில் பங்கு பெற்றால், அந்த நிலைமை, மக்களை ஏமாற்றுவது போல ஆகாதா?

இந்த் தேர்தலில், விலைவாசி உயர்வு, வேலை இழப்பு, உள் நாட்டு பாதுகாப்பு போன்ற அத்தியாவசமான பிரச்சனைகளை முன்னிறுத்துவார்களா? வருண் காந்தி விவகாரம் ஒரு டிராமாவா?

மேற்கண்ட வினாக்களுக்கு, தொலைகாட்சிகளில் அரசியலை அலசும், பிரப்ல பத்திரிகையாளர் திரு டி. சிகாமணியை வெற்றிகுரலுக்காக பேட்டி கண்டேன். அந்த பேட்டியை கீழே உள்ள பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். ( இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், ஆடியோவை டவுன்லோடு செய்து mp3 பிளெய்ரில் கேட்கவும்)



இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857382

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...