This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 21 ஜனவரி, 2011

தமிழக எம்.பிக்கள் மக்களவையில் என்ன செய்தார்கள்? ஒரு அலசல்

தற்போதுள்ள மக்களவை சுதந்திரம் பெற்ற பிறகு 15வது மக்களவையாகும்.  இந்த பேரவை கட்ந்த ஆண்டு 2009ல் ஜூன் 1ம் தேதி முதல் அமர்வுகளை நடத்தி வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும், மக்களவை மூன்று முறை கூடும்.  பட்ஜெட் தொடர், மழைக்கால தொடர் மற்றும் குளிர்கால தொடர்.  
இதுவரை, 15வது மக்களவை ஆறு தொடர்களை நடத்தியுள்ளது.  135 நாட்கள் அமர்ந்துள்ளது.  கடந்த் குளிர்கால தொடர் டிசம்பர் 13ம் தேதி, 2010ல் முடிந்தது. 
இந்த 135 நாட்களில், நம் தமிழ்நாட்டிலிருந்த மக்களவைக்கு சென்ற நம் பிரதிநிதிகள் என்ன செய்தார்கள் என்பதை கீழ்கண்ட அட்டவணையில் காணலாம்.
ஒவ்வொரு தொடர் முடிந்ததும், PRS இந்தியா என்கிற ஒரு அமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர்களின் பணிகள் பற்றிய விவரங்களை தொகுத்து வெளியிருகிறது.  அதன் அடிப்படையில், இந்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.  
பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பணிகளை சரிவர செய்தார்களா என்பதற்கு, அவர்கள் கலந்து கொள்ளும் விவாதங்கள், தனியார் மசோதாக்களை எழுப்புவது,  மக்கள் பிரச்சனைகளைப்பற்றிய கேள்விகளை எழுப்புவது, வருகைப்பதிவு ஆகிய்வைகளே சான்றாகும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, திருநெல்வேலி எம்.பி இராமசுப்பு அவர்கள் முன்னணியில் உள்ளார்.  அவரது மொத்த கூட்டுதொகை 466.  அவர் 96 சதவிகித அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.  இவர் மக்களவைக்கு முதல் முறை பணியாற்ற சென்றவர்.  முதல் கூட்டத்தொடரின் போதே அகில இந்திய அளவில் 9வது இடத்தை பெற்றிருந்தார்.  தற்போது, குளிர்கால தொடருக்கு பிறகு அகில இந்திய அளவில் 5வது இடத்தை கைப்பற்றியுள்ளார்.  அவருக்கு, தமிழக மக்கள் சார்பாக நமது பாராட்டுக்கள்.  
கிருஷ்ணகிரி தொகுதி எம்.பி.சுகவனம் கூட்டுத்தொகை 332 பெற்று இரண்டாவது இடத்தை பெற்றுள்ளார்.  அவருக்கும் நம் பாராட்டுக்கள்.  
அனைத்து எம்.பிக்களின் விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.  அவரவர்கள் தங்கள் தொகுதி எம்.பிக்கள் என்ன செய்தார்கள் என்று பார்த்து தெரிந்து கொள்ளலாம். 

MP name Constituency Political party Total of debates, pvt bills and questions Attendance
S.S. Ramasubbu Tirunelveli INC 466 96%
E.G. Sugavanam Krisnagiri DMK 332 51%
P. Viswanathan Kancheepuram INC 258 83%
S. Semmalai Salem AIADMK 243 86%
C. Sivasami Tiruppur AIADMK 232 70%
R. Thamaraiselvan Dharmapuri DMK 226 79%
S. R. Jeyadurai Thoothukkudi DMK 208 57%
N.S.V. Chitthan Dindigul INC 187 90%
J.M. Aaron Rashid Theni INC 176 64%
S. Alagiri Cuddalore INC 170 70%
P. Kumar Tiruchirappalli AIADMK 161 80%
Munisamy Thambidurai Karur AIADMK 160 76%
P. Lingam Tenkasi CPI 151 96%
Abdul Rahman Vellore DMK 149 67%
K. Sugumar Pollachi AIADMK 137 80%
A. Ganeshamurthi Erode MDMK 128 81%
C. Rajendran Chennai South AIADMK 126 64%
P.R. Natarajan Coimbatore CPI (M) 123 79%
K. Murugesan Anandan Viluppuram AIADMK 101 84%
Thalikkottai Rajuthevar Baalu Sriperumbudur DMK 101 88%
Manicka Tagore Virudhunagar INC 79 86%
A.K.S. Vijayan Nagapattinam DMK 71 58%
Adhi Sankar Kallakurichi DMK 58 49%
Sivakumar @ J.K. Ritheesh. K Ramanthapuram DMK 56 40%
Davidson J. Helen Kanniyakumari DMK 55 75%
T.K.S. Elangovan Chennai North DMK 36 99%
M. Krishnaswamy Arani INC 32 86%
P. Venugopal Tiruvallur AIADMK 16 80%
Thirumaa Valavan Thol Chidambaram VCK 16 38%
Danapal Venugopal Tiruvannamalai DMK 15 70%
O. S. Manian Mayiladuthurai AIADMK 14 56%
Andimuthu Raja Nilgiris DMK 0 5%

திங்கள், 10 ஜனவரி, 2011

தலித் மக்களுக்கு சொந்தமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு

வெற்றிகுரல் இதழ் 19
பல நேரங்களில், பத்திரிகைகளில், பஞ்சமி நிலங்களை மீட்பது பற்றிய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.  பலருக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன, அதன் நடைமுறை என்ன, அதற்குறிய சட்டங்கள் என்ன என்பது பற்றிய விவரங்கள் தெரிவதில்லை.  அதை விளக்குவதற்காகத்தான் இந்த பதிவு.
தற்போது, ஆதிதிராவிடர்கள், தலித்துக்கள் என்று அழைக்கப்படும் மக்களை, ‘பஞ்சமர்கள்’ என்றும் கூறுவார்கள்.   வழக்கமாக நாம் மனு சாஸ்திரப்படி   நினைப்பது நான்கு வர்ணங்களைத்தான்.  ஏதோ ஒரு கால கட்டத்தில்,  இந்த வர்ணங்களை ஏற்காதவர்கள் ‘ஐந்தாவது வர்ணத்தை’ உருவாக்கினார்கள். அவர்கள் தான் பஞ்சமர்கள் என்ப்படுபவர்கள்.
இந்த பஞ்சமர்கள், ஊருக்கு வெளியே, சேரிகளில் வாழ்ந்து வந்தார்கள்.  காலங்காலமாக, அவர்கள் பொருளாதாரத்தில் தாழ்ந்தவர்களாகவும்,  மேல் ஜாதிக்காரர்களிடம் அடிமைகளாகவும் இருந்து வந்தனர். கருணாநிதி அடிக்கடி தன்னை ‘சூத்திரர்’ என்று தாழ்ந்த ஜாதியாக அடியாளம் காட்டி கொள்வதை, பஞ்சமர்கள் எதிர்க்கிறார்கள். அந்த காலங்களில், சூத்திரர்கள் என்ப்வர்களும் மேல் ஜாதியினரே என்கிறார்கள்.  இந்த விவாதத்தில் நான் இப்போது இறங்கவில்லை.  
பஞ்சமர்களுடைய நிலை பற்றி கவலை கொண்டு, 1891ம் ஆண்டில், செங்கல்பட்டில் ஆட்சியராக இருந்த டிரெமன்ஹரே என்கிற ஆங்கிலேயர்,  லண்டனிலுள்ள அரசிக்கு ஒரு கடிதம் எழுதினார்.  இந்த கடிததின் அடிப்படையில்,  பிரிட்டிஷ் பாராளுமன்றம், 1892 ம் ஆண்டில் ஒரு சட்டத்தை இயற்றியது.
இந்த சட்டத்தின்படி, இந்தியா முழுவதும், Depressed Class  என்று கூறப்பட்ட தாழ்த்தப்ப்ட்ட மக்களுக்கு நிலங்களை இலவசமாக அளித்தது.  இந்த நிலங்களீல், தாழ்த்தப்பட்ட மக்கள் பயிர் செய்தோ, வீடுகள் கட்டிக்கொண்டோ அனுபவிக்கலாம்.  குறைந்தது 10 ஆண்டுகளுக்கு பிறகு தான், அவர்கள் இந்த நிலங்களை பிறர் பெயருக்கு மாற்ற முடியும்.  அதுவும், அவர்கள் விற்பதாக இருந்தால், அவர்கள் வகுப்பைச்சார்ந்த (Depressed Class) வர்களிடம் தான் விற்க முடியும்.  வேறு வகுப்பினரிடம் விறறால், அநத விறபனை செல்லாது.
அரசு ரெவின்யூ ரிகார்டுகளில், இந்த நிலங்களைப்பற்றிய விவரங்கள் உள்ளன.
தவறுதலாக, யாராவது, இந்த பஞ்சமி நிலங்களை வேறு வகுப்பினரிடம் விற்க முற்பட்டால், பத்திர பதிவு அதிகாரி, அதை பதிவு செய்யக்கூடாது. மீறி வாங்கினால்,  எந்த காலத்திலும், அந்த நிலங்களை வாங்கியவரிடமிருந்து, அரசு பறிமுதல் செய்யலாம்.  அதற்கு நஷ்ட ஈடு கிடையாது.
இந்த சட்டம், தாழ்த்தப்பட்ட மக்களை யாரும் ஏமாற்றி விடக்கூடாது என்கிற எண்ணத்தில், ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது.
இந்த சட்டத்தை பற்றிய ஒரு குறிப்பும், சென்னை உயர்நீதி மன்ற தீர்ப்பில், விவரமாக இருக்கிறது.
1950க்கு பிறகு, ஆசார்ய வினோபா அவர்கள் பூதான இயக்கத்தின் படியும், பல நிலங்களை இதே சட்டப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அரசு வழியாக வழங்கினார். 1960களிலும், கூட்டுறவு முறையிலும் நிலங்கள் இந்த அடிப்படையில் வழங்கப்பட்டன.  Depressed Class என்கிற பெயர் இந்திய அரசியல் சட்டத்தில், Scheduled caste (அட்டவணை வகுப்பினர்) என்று மாற்றப்பட்டது.
இந்திய அளவில், எவ்வளவு நிலங்கள், இந்த பஞ்சமி நிலங்களாக கொடுக்கப்பட்டுள்ளன என்பது பற்றிய சரியான் புள்ளி விவரங்கள் இல்லை.  திமிழ் நாட்டில் சுமார் 2.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  ஆனால், நான் மேலே குறிப்பிட்ட சென்னை உயர் நீதி மன்ற தீர்ப்பில், 12 லட்சம் ஏக்கர் அந்த கால சென்னை மாகாணத்தில் (கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா) பஞ்சமி நிலங்களை கொடுத்ததாக  குறிப்பிட்டுள்ளார்கள்.  இந்திய அளவில், சுமார் 25 லட்சம் ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.  
காலப்போக்கில், பஞ்சமி நிலங்கள் பிற வகுப்பினருக்கு விற்கப்பட்டுள்ளன.  விற்கப்படாத நிலங்க்ளின் பெரும் பகுதி, மற்றவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.  இது பற்றிய புள்ளிவிவரங்கள் தமிழ்நாட்டு அளவில் இல்லை.   சென்ற வாரம், தமிழக அரசு, கவர்னர் உரையில், பஞ்சமி நிலங்களை பற்றி ஆய்வு செய்ய ஒரு கமிஷன் அமைக்கபபடப்போவதாக கூறப்பட்டுள்ளது.
பிரபல தலித் தலைவரும், விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் நிறுவனருமான (தற்போது அவர் இந்த இயக்கத்தில் இல்லை) திரு தடா பெரியசாமி அவர்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் (RTI Act), பெரம்பலூர் மாவட்ட புள்ளி விவரங்களை பெற்றுள்ளார்.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் மூன்று தாலுக்காக்களில், 134 கிராமங்கள் உள்ளன. அதிகாரபூர்வ தகவல்கள் படி, 4442 ஏக்கர் நிலங்கள் பஞ்சமி நிலங்களாக உள்ளன.  அதில் 1263 ஏக்கர் நிலங்கள் 948 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள 3180 ஏக்கர் நிலங்கள் 3148 பேர் பெயரில் உள்ளன.  இந்த நிலங்கள் தலித் மக்கள் பெயரில் இருந்தாலும், சுமார் 25 சத்விகிதம் நிலங்கள் மற்ற வகுப்பினரால் ஆக்கிரமிகப்பட்டு அனுபவிக்கப்படுகிறது என்று தடா பெரியசாமி கூறுகிறார்.  அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், சுமார் 2000 ஏக்கர் நிலங்கள், அதாவது, 50 சதவிகித பஞ்சமி நிலங்கள், பிறாரல் அனுபவிக்கப்படுகின்றன என்று தடா பெரியசாமி கூறுகிறார்.
திரு கருப்பன் இ.ஆ.பெ (ஓய்வு) தலைமையில் ஒரு மண்ணுரிமை மீட்பு இயக்கத்தை துவங்கியுள்ளார்கள்.  இந்த ஒரு சிறிய மாவட்டத்தில் மட்டும் இவ்வளவு என்றால், தமிழ்நாடு முழுவதும் மற்றும் இந்தியா முழுவதும் எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பார்க்கலாம்.
மூச்சுக்கு முன்னூறு முறை தலித் மேம்பாடு பற்றி வாய் கிழிய பேசும் அரசியல் வாதிகள், ஏன் இதை கண்டு கொள்ளவில்லை.  தலித் மேம்பாட்டிற்காக தங்களை அர்பணித்துகொண்டு, ஏசி காரிலும், விமானத்திலும் பறந்து கொண்டு, ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கி, தலித் மேம்பாட்டிற்காக பாடுபடும் தலித் தலைவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அனைவரும் கண்காணிக்கிறார்கள்.  
தடா பெரியசாமியுடன் நான் எடுத்த பேட்டியை ‘கிளிக்’ செய்து கேட்கவும்.
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...