This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

’தூறல்’ (drizzle) புயலாகிறது - சாதனை படைக்க துடிக்கும் மூன்று இளைஞர்கள்

வினோ, விஜய், சந்த்ரு
வினோ, விஜய் மற்றும் சந்த்ரு மூவரும், அண்ணா பல்கலை கழகத்தில், 2004ல் மீடியா துறையில் முதுகலை முடித்த நண்பர்கள். முதுகலை பட்டம் பெற்றபின், ஒவ்வொருவரும் ஒரு துறையில் சேர்ந்து அதில் தனித்துவம் பெற்று வந்தனர். ஆனாலும், அவர்கள் மூவரும், ஒவ்வொரு வாரமும், தவறாமல் சந்தித்து தங்கள் துறைகளைப் பற்றி விவாதித்து, திறமையை மேம்படுத்திக் கொண்டு வந்தனர்.

வினோ, ரேடியோ ஒன் மற்றும் ஜெயா டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக சேர்ந்து பிரப்லமடைந்தார்.  விஜய், ராஜீவ் மேனனிடம் உதவி இயக்குநராக சேர்ந்து, இயக்குநராக பயிற்சி பெற்றார்.  சந்த்ரு, திரைப்படம், டாகுமெண்டரி படங்கள் தயாரிப்பில் திறமையை வளர்த்துக்கொண்டார்.

இந்த நண்பர்கள், ஒவ்வொரு வாரமும் சந்தித்து உரையாடுவது மட்டும் தவறுவதில்லை.  கடந்த ஜனவரி 2011ல், அவர்கள் சந்தித்தபோது, நண்பர்களிடையே ஒரு பொறி தட்டியது.  தங்கள் தனிப்பட்ட திறமைகளை இணைத்து, ஏன் ஒரு முயற்சி செய்யக்கூடாது என்று சிந்தித்து விவாதித்தார்கள்.

அடுத்து என்ன பெயர் வைப்பது என்பது பற்றி விவாதித்தார்கள். “Drizzle productions"  என்கிற பெயரை தேர்ந்தெடுத்தார்கள்.

“பிரவாகமாக ஓடும் கங்கையும் ஒரு சிறிய ஓடையில் தான் துவங்குகிறது.  எந்த ஒரு பெரிய மழையும், ஒரு தூறலில் தான் துவ்ங்குகிறது.  தவிர, தூறலில் நனைவது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இனப்த்தைத் தரும். அதனால் தான் Drizzle Productions  என்று பெயர் வைத்தோம்”  என்கிறார் விஜய் அமைதியாகவும் தன்னம்பிக்கையுடனும்.

விஜய் கிரியேடிவ் டைரக்டராகவும், வினோ நிர்வாகம் மற்றும் மார்க்கெட்டிங் பணிகளை மேற்கொள்ளவும் முடிவு செய்தார்கள்.  சந்த்ரு, நட்பு முறையில், புரொடக்‌ஷன் பணிகளை ஏற்கவும் முடிவாயிற்று.  தங்கள் திறமைகளை இணைத்து, விளம்பரப் படங்களையும், குறும் படங்களையும் தயாரிக்கலாம் என்று முடிவு செய்தனர்.  தேவைப்பட்டால், டிவி சீரியல்களையும் , நல்ல திரைப்படங்களையும் தயாரிக்கவும் தயாராக இருக்கிறார்கள்.

அடுத்த கட்டத்தில், தங்கள் திறமைகளை காண்பிக்கும் முறையில், ஒரு குறும் படம் தயாரித்து வெளியிட்டால் என்ன என்று சிந்தித்தார்கள்.  அந்த குறும் படம் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகவும், அதே சமயத்தில் நகைச்சுவையாகவும் சொன்னால் என்ன என்று பல பிரச்சனைகளை ஆய்வு செய்தார்கள்.

குழந்தைகளுக்கு, நடுத்தர வர்க பெற்றோர்கள் எவ்வாறு மன அழுத்தம் கொடுத்து தங்கள் கருத்துக்களை திணிக்கிறார்கள் என்பது பற்றிய ஒரு தீமை மையமாக வைத்து, விஜய் கதை தயார் செய்ய, மற்றவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள்.

தங்கள் நண்பர்களையே இந்த குறும் படத்தில் நடிக்க வைத்ததுடன், ஒரு சிறிய குழந்தையும் நடிக்கவைத்து சாதனை படைத்தார்கள்.  டிவி தொகுப்பாளரான வினோ, இந்த குறும் படத்தில், தன்னுடைய நடிப்பு திறமையும் வெளிப்படுத்தி உள்ளார்.

சாதனை படைக்க துடிக்கும் இந்த இளைஞர்களை emaildrizzle@gmail.com என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

”சின்ன கண்ணன் சிரிக்கிறான்” என்கிற இந்த குறும் படத்தை, நீங்களும் பார்த்து ரசியுங்களேன்.  உங்கள் கருத்துக்களையும் பதிவு செய்தால், இந்த இளைஞர்களுக்கு ஒரு உற்சாகமாக இருக்கும்.

இந்த மூவரும் அண்ணா பலகலையில் என்னுடைய மாணவர்கள் என்பதால், நான் மிகவும் பெருமைப் படுகிறேன்.  இந்த ‘தூறல்’ (Drizzle) ஒரு ‘’புயலாக” க வரும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

இந்த வீடியோவை, கீழ்கண்ட தளத்திலும் பார்க்கலாம்.

வியாழன், 9 பிப்ரவரி, 2012

ஆரிய மாயை - திராவிட மாயை : ஒரு அலசல்

கடந்த 19ம் நூற்றாண்டிலிருந்து, ஆரியம் மற்றும் திராவிடம் என்கிற வார்த்தைகள், இன ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதிக அளவில்  உபயோகப்ப்டுத்தப் படுத்தப்பட்டு வருகின்றன.

பண்டைக்காலங்களில் ஆரியம் - திராவிடம்

பண்டைய இலக்கியங்களில் ‘ஆரிய’ என்கிற சொல், மேன்மை தங்கிய அல்லது மதிப்பிற்குரிய என்கிற வகையில் தான் வழக்கத்தில் இருந்தது.   இராமயணத்தில், கும்பகர்ணன் இராவணனை, ‘ஆரிய’ என்று அழைக்கிறான்.  சீதை, இராமனை, ‘ஆரிய’ என்று அழைக்கிறார்.  ‘ஆரிய’ என்கிற சொல் பண்பை குறிப்பதாக கூறுகிறார்கள். இலங்கையை ஆண்ட அரசர்கள் தங்கள் பெயருக்கு முன்னால், ‘ஆரிய’ என்கிற பெயரையும் சேர்த்து வந்தனர்.

அதுபோன்று, ‘திராவிடம்’ என்கிற சொல், ஒரு நில பரப்பை குறிப்பதாக கூறப்படுகிறது.  பண்டைய பாரதத்தில், 56 தேசங்கள் இருந்ததாக வரலாறு.  அதில் ‘திராவிட நாடும்’ ஒன்று.  அந்த திராவிட நாடு, இன்றைய காஞ்சிபுரத்திற்கும் ஆந்திராவிலுள்ள நெல்லூருக்கும் இடைப்பட்ட பகுதியாகும்.

இது தவிர, வைணவ இலக்கியங்க்ளில்,  தமிழை திராவிடம் என்று குறிப்பிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இது சம்பந்தமாக பத்திரிக்கையாளர் சுப்பு எழுதிய கட்டுரையை இந்த லிங்கில் படிக்கலாம்.
http://www.tamilhindu.com/2012/01/aryan-dravidan-literary-evidences/

நூறு ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த காஞ்சி மகா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளும், இது சம்பந்தமாக ப்ல ஆண்டுகளுக்கு முன்பாக பேசிய பேச்சை ‘தெய்வத்தின் குரல்’ புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்கள்.  இதை கீழ்கண்ட தளத்தில் படிக்கலாம்.

http://www.kamakoti.org/tamil/KURAL4.htm

ஆரிய திராவிட இன பேதங்கள் உருவானது எப்படி?


19ம் நூற்றாண்டில், கால்டுவெல் பாதிரியார் இந்தியாவிற்கு வந்த போது, அவர் ஆரியர் - திராவிடர் என்பதை தனிதனி இனமாக குறிப்பிட்டார்.   இது ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியாக கருதப்பட்டது.

இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை எழுதிய அம்பேத்கார் அவர்கள், வேதங்களை நன்கு படித்தவர். அவர் ஒரு அறிஞர்.  அவரே, இந்த ஆரிய-திராவிட இன பாகுபட்டை ஏற்கவில்லை.  அந்த கருத்தை மறுத்தார்.

நாமக்கல் கவிஞர் போன்ற ப்ல அறிஞர்களும் இந்த ஆரிய-திராவிட இன வேற்றுமை கருத்தை ஏற்கவில்லை. அவர் “ஆரியமாவது - திராவிடமாவது;" என்கிற நூலில், ஆரிய-திராவிட இன பேதங்களை சாடுகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், சுதந்திர போராட்ட தியாகி திரு நெல்லை ஜெபமணி அவர்கள் கூட துக்ளக்கில், ‘கழகங்களை கண்டு கொள்வோம்’ என்கிற தொடரில்,  திராவிட கழகங்களை தோலுருத்திக் காட்டினார்.

திராவிட இயக்கங்களின் வளர்ச்சி


1917 ம் ஆண்டில், நீதிக்கட்சி என்று அழைக்கப்பட்ட ‘தென்னிந்திய நல உரிமை சங்கம்’ (South Indian Liberal Federation)  பிராமணர் அல்லாதவ்ர்களால் உருவாக்கப்பட்டது. 1920 முதல் 1937 வரையான கால கட்டங்களில், 13 ஆண்டுகள் சென்னை மாகாணத்தையும் இந்த கட்சி ஆண்டது.  பிராமண எதிர்ப்பும், இந்த காலங்களீல் அதிகமானது.

1943ல், திரு அண்ணதுரை அவர்கள் ‘ஆரிய மாயை’ என்கிற ஒரு நூலை எழுதினார்.  இந்த் புத்தகத்தில், வட இந்தியர்களூம், பிராமணர்களூம் ஆரிய்ர்கள் எனவும், மற்றவர்கள் திராவிடர்கள் எனவும் விவரித்தார்.  ஆனால், இந்த புத்தகம் அன்றைய காங்கிரஸ் அரசின் முதல்வரான்  திரு குமாரசாமி ராஜா அவர்களால் தடை செய்யப்ப்பட்டது.  திரு அண்ணா அவர்கள் 1967ல் முதல்வராக வந்தபோதும், அவர் அந்த தடையை நீக்கவில்லை.  அவருக்கு பின்னால் திரு கருணாநிதியால் நீக்கப்பட்டது.

1944ல் திராவிட கழகம், திரு ஈ.வே.ரா. பெரியாரால் துவக்கப்பட்டது.  இது ஒரு பிராமண எதிர்ப்பு இயக்கமாகவே உருவானது.  இதனால், பிராமணர்களை அவர்கள், தங்கள் இயக்கத்தில் உறுப்பினராக சேர்க்கவில்லை.   இந்தியாவிற்கு சுத்ந்திரம் வருவதையும் அவர்கள் எதிர்த்தார்கள் என்பது வரலாறு.

1948ல், திராவிட முன்னேற்ற கழகம் (திமுக) அண்ணா அவர்கள் தலைமையில் உருவானது.  இதுவரை, திராவிட கழகத்தில் தளபதியாக இருந்த அண்ணா, அதிலிருந்து பிரிந்து, திமுக வை உருவாக்கினார்.  பிராமணர்களை ஆரியர்களாக தனது ‘ஆரிய மாயை’ நூலில் எழுதிய அண்ணாவே, திமுக துவங்கியபோது, பிராமணர்களையும்,  திமுகவில் இணைக்க ஆதரவு அளித்தார்.

திராவிட வாதங்களின் வீழ்ச்சி

1977ல், திரு எம்.ஜி.ஆர் அவர்கள் அ இ அ தி மு க் துவங்கி, பின்பு ஆட்சி அமைத்தபோது, இந்த் திராவிட வாதம் நீற்று போக ஆரம்பித்தது.  தன்னுடைய கட்சியின் பெயரில், “அகில இந்திய” என்று சேர்த்து, தன்னை ஒரு தேசியவாதியாக அடையாளம் காட்டிக்கொண்டார். திமுக துவங்கியது முதல், நாத்திகர்களாகத்தான் தங்களை திமுகவினர் அடையாளம் காட்டிக்கொண்டனர்.  எம்.ஜி.ஆரின் புது கட்சிக்கு பிறகு, அவரே, மூகாம்பிகை கோவிலுக்கு த்ன தொண்டர்களுடன் செல்ல ஆரம்பித்தார். சென்னையிலிருந்து,  மூகாம்பிகை கோவிலுக்கு நேரடி பேருந்தும் விட்டார்.

பிராமண எதிர்ப்பு கொள்கையை முன் வைத்து, திராவிடம் பேசி ஆட்சிக்கு வந்தனர் திமுகவினர்.  அதே வழியில் அண்ணாவை தனது குருவாக ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் முதன் முறையாக பிராமணரான திரு ஹண்டேவை அவரது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார்.  இது போதாதென்று, பிராமணரான செல்வி ஜெயலலிதாவையும், தனது வாரிசாக அறிவித்தார். இன்றைக்கும், அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் நெற்றியில் குங்குமம் அல்லது திருநீறு இல்லாமல் வெளியில் வரமாட்டார்கள்.

எம்.ஜி.ஆர் காலத்திற்கு பிறகு, ஆரிய-திராவிட இன பேதங்கள் மறைந்து விட்டாலும், தான் எப்போதெல்லாம், மக்களால் நிராகரிக்கப்டுகிறாரோ, அப்போதெல்லாம், கலைஞர் அவர்கள், ஆரிய-திராவிட வாதங்களையும், பிராமண எதிர்ப்பு வாதங்களையும் புதுப்பித்துக்கொள்வார்.  கட்ந்த வாரம், முரசொலியில், இது பற்றிய கட்டுரை வந்தது.

கலைஞர் அவர்கள் எவ்வளவு தான் நாத்திகம் பேசினாலும், திராவிட வாதங்களால் பிராமண எதிர்ப்பு பேசினாலும், அவரது குடும்பத்தினர், கனிமொழி கைதுக்குப் பிறகு, ஹோமங்கள் செய்தது, பல பிரபல கோவிலகளுக்கு சென்றது எல்லாம் அண்மையில் விவரமாக ஊடகங்களில் வந்தன.


திராவிட் மாயை - ஒரு பார்வை 


இதன் பின்னணியில், பிரபல பத்திரிக்கையாளர் திரு சுப்பு அவர்கள், கடந்த ஆண்டில், “திராவிட மாயை - ஒரு பார்வை” என்கிற ஒரு புத்தகத்தை வெளிட்யிட்டுள்ளார்.  இந்த புத்தகம் எழுதுவதற்காக, அவர் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக, ப்ல நூல்களை படித்து ஆராய்ச்சி செய்துள்ளார்.

இந்த் நூலில், 42 அத்தியாயங்களில், 1917 முதல் 1944 வரை நடந்த் நிகழ்வுகளை ஆதாரபூர்வமாக எழுதியுள்ளார்.  அதாவது, நீதிக்கட்சி துவக்கியது முதல் (1917) திராவிட கட்சி உருவானது (1944) வரை எழுதியுள்ளார்.  இந்த தமிழ் புத்தகத்தை, ஆங்கிலத்திலும் வெளியிட, மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருக்கிறார்.

இந்த புத்தகத்தின் இரண்டாவது பகுதியை திராவிட கட்சி துவங்கிய ஆண்டு முதல் (1944), எம்.ஜி.ஆர் அ.இ.அ.தி.மு.க் துவக்கியது (1977) வரை எழுத இருக்கிறார்.

வெற்றிகுரல் இதழ் 26

பத்திரிக்கையாளரும், “திராவிட மாயை - ஒரு பார்வை” நூலின் ஆசிரியருமான திரு சுப்பு அவர்களுடன், வெற்றிகுரலுக்காக ஒரு பேட்டி எடுத்தேன்.  அவரது பேட்டியை கீழே கேட்கலாம்.

திரு சுப்புவை subbupara@yahoo.co.in  என்கிற இமெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த பேட்டியை, கீழ்கண்ட தளத்திலும் காணலாம்.
http://www.youtube.com/watch?v=CqFJBYCJtRY

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...