This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 16 ஏப்ரல், 2008

ராஜீவ் காந்தி படுகொலை - அவருக்காக உயிர் நீத்த 30 காவல் துறையினர் என்ன பாவம் செய்தார்கள்?

priyanka gandhi met Nalini at Vellore Prison தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஒரே பரபரப்பு. ஒரு பக்கம், தலைமை செயலாளர் போனை ஒட்டு கேட்டதாக வரும் செய்திகள். அதே நாளில் பிரியங்கா காந்தி, அண்மையில் வேலுர் சிறையில் நளினியை சந்தித்தாக வரும் செய்திகள்.

பிரியங்கா - நளினி சந்திப்பு அகில இந்திய அளவில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கி விட்டது. காரணம் எதுவாக இருந்தாலும், பல காரணங்கள் கூறப்படுகின்ற்ன. நளினியின் தூக்கு தண்டனை சோனியா காந்தியின் கருணையால் ரத்து செய்யப்பட்டது. நளினிக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதால், அதை காரணம் காட்டி, மீடியாவும் கருணை மழையை பொழிந்தது. பிரியங்காவும், தன்னுடைய தகப்பனாரை கொன்றவர்களை மன்னித்து விட்டதாக கூறிவிட்டார். இது போராதா! நம்முடைய மீடியாக்களுக்கு - தலையில் வைத்துக்கொண்டு கூத்தாட!

இதில் நான் கருத்து கூற விரும்பவில்லை. இன்னா செய்தாருக்கும் நன்மை செய்வது அவரவர்கள் விருப்பம்.

ராஜீவ் காந்தி கொலை நிகழ்ந்த அன்று, அவருடன் சுமார் 30 போலீஸ் காவலர்களும், அதிகாரிகளும் உயிர் துறந்தனரே! யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா! அவர்களுக்கும் குடும்பம் இல்லையா? குழந்தைகள் இல்லையா? பணியில், தீவிரவாததிற்கு பலியான, கடமை வீரரகளுக்காக சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் என்ன செய்தார்கள்? எந்த மீடியாவும் ஏன் வாய் திறக்கவில்லை.

காங்கிரஸ்காரர்கள் அவர்களது கோஷ்டி சண்டையில் செலுத்தும் நேரத்தில், நூற்றில் ஒரு பங்கை, தங்கள் தலைவருக்கு காவல் பணியில் இருந்து உயிர் நீத்த காவல் துறையினருக்காக செலவிடக்கூடாதா?

3 கருத்துகள்:

  1. என்னைப் பொறுத்தவரை எந்த ஒரு மீடியா-விற்கும் உண்மையானதொரு Social responsonsibility இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு செய்திக்கு coverage குடுததால் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்குமோ அந்த ஒரு செய்திக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுக்கிறார்கள். உண்மை எதுவாய் இருந்தால் அவர்க்கென்ன? நாடு நன்றாய் இருந்தால் என்ன? கெட்டால் என்ன? அவர்களுக்கு viewership மற்றும் sponsorship கிடைத்தால் போதும். இந்த நிலமை மாற வேண்டுமானால் viewers ஆகிய நம் கைகளில் தான் உள்ளது!

    'Citizen awareness forum' ஒன்று ஆரம்பித்து மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு பெறச் செய்யலாம்!

    பதிலளிநீக்கு
  2. >>> எந்த ஒரு மீடியா-விற்கும் உண்மையானதொரு Social responsonsibility இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு செய்திக்கு coverage குடுததால் அவர்களுக்கு ஆதாயம் கிடைக்குமோ அந்த ஒரு செய்திக்கு மட்டுமே முக்கியத்துவம் குடுக்கிறார்கள் <<<

    True.. but how far people are interested in reading the truth behind ?! will they be ready to accept truths ?!?!

    normal people have been made blunt with Cinema and other celebrity news from politics..

    பதிலளிநீக்கு
  3. >>>normal people have been made blunt with Cinema and other celebrity news from politics<<<

    Agreed Mr.யாத்திரீகன். But, சினிமா / தொலைக்காட்சி நிகழ்ச்சி தரமானதாக இல்லை என்றால் அதை பார்ப்பதும் / ஆதரிப்பதும் நம் கையில் அல்லவா உள்ளது?

    If most of the individuals decide not to support low quality TV programs / news items / movies, then the media would automatically change their way of presenting things!... isn't it? So, perhaps a 'Consumer Awareness' forum might help in bringing awareness of these to the general public! What do you say?

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...