This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 15 ஜூலை, 2009

சைபர் குற்றங்கள், பிரவுசிங் செண்டர் வழியாக நடக்கின்றனவா? - ஒரு சூடான விவாதம்

தமிழ்நாட்டில், பிரவுசிங் செண்டர் வைப்பதற்கு போலீஸ் அனுமதி தேவை. அத்துடன், பிரவுசிங் செண்டரில், அங்கு உப்யோகிப்பாளர்களின் பெயர், விலாசம், போன் நம்பர், கையெழுத்து உள்ள ரிஜிஸ்டர் இருக்க வேண்டும். இண்டர்நெட்டை உபயோகிக்குமுன், வாடிக்கையாளர்கள், அவர்களது போட்டோ அடையாள அட்டையை கண்பிக்க வேண்டும். மேலும், அந்த பிரவுசிங் செண்டரில், ஒரு CCTV யும் வைத்து வருபவர்களை கண்காணிக்க வேண்டும்.

அண்மையில், சென்னையில், தமிழ்க முதல்வர் அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் இமெயில் வந்தது. அதனை புலன் விஜாரணை செய்த போலீசார், அந்த இமெயில் ஒரு பிரவுசிங் செண்டரிலிருந்து வந்ததாக கண்டுபிடித்தனர். உடனடியாக பல பிரவுசிங் செண்டர்களை போலீஸ் அதிரடி சோதனையிட்டு , விதிமுறைகளை பின்பற்றாத மையங்களை மூடிவிட்டனr. இது தமிழ்நாடிடில் கடந்த சில தினங்களாக பரபர்ப்பாகிவிட்டது.

பிரவுசிங் செண்டர் உரிமையாளர்கள், தங்கள் மீது போலீஸ் கடுமையாக நடந்து கொள்வதாக புகார் கூறின்ர். மேலும், போலீஸ், இந்த மையங்கள், லைசென்சை புதுப்பிக்க சமர்ப்பித்த விண்ணப்பங்களையும் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுப்பிக்காமல் வீணாக இழுத்தடிப்பதாகவும் குற்றச்சட்டு எழுந்துள்ளது.

இந்த பின்னணீயில், ஸீ-தமிழ் (Zee Tamil) சேனல், இன்று காலை 'முதல் குரல்' நிகழ்ச்சியில், ஒரு பேட்டியை ஒளிபரப்பியது. அதில், என்னையும், இந்திய சைபர் சொசைட்டியின் (Cyber Society of India) நிறுவனர்களில் ஒருவர் என்கிற முறையில் அழைத்து இருந்தார்கள்.

இந்த பேட்டியை 'பிளே' பட்டனை அழுத்தி, நீங்களூம் கேளுங்களேன். இந்த வீடியோ ஒளிப்பதிவு, பிராட்பேண்டில் சீராக வரும். சீராக வரவில்லை என்றால், இந்த லிங்கை, வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் wmv ஃபைலாக சேமித்து கேட்கவும்.



இந்த் வீடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...