This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வியாழன், 25 டிசம்பர், 2008

பிளஸ் டூ படிக்கும் ஸ்ரீசித்ரா ஒரு ஆல் ரவுண்டர்

ஸ்ரீ சித்ரா  Sri Chitra
மார்கழியில் எப்போதுமே சென்னையில் இசை மழைதான். ச்பாக்களில், பூங்காக்களில், டி.விக்களில், ரேடியோவில் மற்ற எல்லா இடங்களிலும் இசை கச்சேரிகள். பல இளங்கலைஞர்களுக்கு தங்கள் திறமையை காட்ட பல வாய்ப்புகள். இன்று கிருஸ்த்மஸ் தின விடுமுறையானதால் (25 டிசம்பர் 2008), ப்ல சென்னை ச்பாக்களில் சிறப்பு நிகழ்ச்சிகள்.

நுங்கம்பாக்கம் கல்சுரல் அகடமியில் செல்வி ஸ்ரீ சித்ராவின் ஒரு மணி நேர கச்சேரியை கேட்க ஒரு வாய்ப்பு வந்த்து. 15 வயதே ஆன ஒரு பள்ளி சிறுமி. அஷோக் நகரில் ஜவ்ஹர் மேல்நிலை பள்ளியில் பிளஸ் டூவில் முதலாம் ஆண்டு படிக்கிறார்.

இசை அறிவு இல்லாத என்னைப்போன்றவர்கள் கூட ரசிக்கக்கூடிய ஒரு குரல் வளம். சிறுமியாக இருந்தாலும், ஒரு சீனியர் பாடகருக்குள்ள தெளிவு.

கலைஞர் டி.வி மற்றும் இமயம் டிவிககளில் ஒரு தொகுப்பாளினியாகவும் இருக்கிறார். பரத நாட்டியமும் தெரியும். 10ம் வகுப்பு பொது தேர்வில் 95 மார்க் வாங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார். என்.சி.சியில் சார்ஜண்ட் வேறு. பள்ளியில் மாணவர் தலவர் வேறு. பள்ளியில் 'பெஸ்ட் ஆல் ரவுண்டர்' அவார்டு வாங்கியவர்.

சென்ற் ஆண்டு விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியில், அரை இறுதி வரை வென்றவர். மூன்று வயது முதல், இசை பயின்று வரும் இவர், இதுவரை 57 மேடை கச்சேரிகள் செய்துள்ளார். பல சபாக்களிலிருந்து அழைப்புகள் வ்ந்தாலும், பள்ளி படிப்பு பாதிக்கப்படாமல், ஒரு சில கச்சேரிகளை மட்டும், விடுமுறைநாட்களில் ஏற்கிறார்.

இசை பயில்வதுதான் தன்னுடைய பல ஆல் ரவுண்டு வெற்றிகளுக்கு காரணம் என்கிறார் ஸ்ரீ சித்ரா. எவ்வளவு டென்ஷன் இருந்தாலும், தனக்கு பிடித்த 'சாந்தி நிலவ வேண்டும்' என்கிற பாட்டை பாடும்போது, உற்சாகம் பிறக்கிறது என்கிறார் அமைதியாக.

பிளஸ் டூ முடித்தபிறகு, அப்துல் க்லாம் போல் 'ஏரொநாடிக்' இன்ஜினீயரிங் படிக்கவேண்டும் என்று ஆசை. அத்துடன் இந்துஸ்தானி இசையும் கற்று சிற்ந்த பாடகியாக வெண்டும் என்று ஆர்வமுடன் இருக்கிறார். (அப்துல் கலாம் அவ்ர்களும் இசையில் சிறந்த் விற்பன்னர்).

திரைப்படங்களில் பாட வாய்ப்புகள் வந்தாலும், பள்ளி படிப்பு இருப்பதால, பிளஸ் டூ முடித்தபிறகுதான் அதைப்பற்றி சிந்திக்க முடியும் என்கிறார். இந்திய திரை உலகிற்கு, ஒரு சிறந்த பாடகி உருவாகி வருகிறார் என்ற நிறைவுடன், சபாவை விட்டு வெளியே வந்தேன்.

இந்த ஆல்ரவுண்டர் ஸ்ரீ சித்ராவின் வெற்றிக்கு ஊக்கமளித்து வரும் அவரது பெற்றோர்கள் விஜயகுமாருக்கும் , சிந்துவுக்கும் பாராட்டுக்கள்.

வெள்ளி, 19 டிசம்பர், 2008

சென்னை தி.நகரில் பெருகி வரும் அங்கீகாரமற்ற கட்டிடங்கள் - விதிமீறல்களை குண்டர் சட்டத்தில் சேர்க்க வேண்டும்.

சென்னை தி.நகரில் தற்போது பல பிரபல நிறுவனங்கள் தங்கள் பிரும்மாண்டமான கட்டிடங்களை எழுப்பி வருகின்றனர்.  இன்று காலை (19.12.08) வடக்கு உஸ்மான் சாலையிலுள்ள   ARR  சீவல் கட்டிடத்தை அதிகாரிகள் போலீஸ் துணையுடன் இடிக்க ஆரம்பித்துள்ளனர். 


இந்த கட்டிடத்தில் பல குளறுபடிகள் இருப்பதாகவும், வரை முறைகள் மீறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  பல முறை, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் அங்கீகாரமற்ற கட்டிடங்களை  இடிக்க உத்திரவு கொடுத்தும், அதிகாரிகள் - அரசியல் வாதிகள் துணையுடன், பல கட்டிடங்கள் வரைமுறையை மீறி தி.நகரில் கட்ட்பபட்டு வருகின்றன. 


இந்த கட்டிடம் மட்டுமல்ல.  இன்னும் ப்ல கட்டிடங்கள் வரைமுறையை மீறி கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.  அதற்கு எல்லாம் என்று விடிவு வருமோ?
இந்த கட்டிட உரிமையாளர்கள், வரைமுறையை மீறி கட்டிக்கொடுத்த பொறியாளர்கள், இந்த வரைமுறைகளை கண்காணிக்க தவறிய (அல்லது லஞ்சம் வாங்கிக்கொண்டு கண்களை மூடிக்கொண்ட) அதிகாரிகள், அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த அரசியல் வாதிகள் அனைவரையும் 'குண்டர் சட்டத்தில்' கைது செய்தால்தான், இனி இது போன்ற அப்பட்டமான விதிமீறல்கள் தவிர்க்கப்படும்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...