This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

செவ்வாய், 18 மார்ச், 2008

நாத்திகர்களுக்கும் கை கொடுக்கும் தில்லை நடராஜர்

தில்லை ந்டராஜர் கோவில் கடந்த சில வாரங்களாக தில்லையில் நடராஜர் முன்னிலையில் தேவாரம் பாடுவது சம்பந்தமாக ஒரு பெரிய சர்ச்சை கிளம்பி, போலீஸ் தடியடி, கைது போன்ற நிகழ்ச்சிகளுக்கு பிறகு அமைதி திரும்பியது போல் தோன்றுகிறது. இன்றைய பத்திரிகைகளீல் தமிழக முதல்வர், தேவாரம் பாடிய திரு ஆறுமுகசாமி அவர்களுக்கு மாதம் ரூபாய் மூவாயிரம் கருணை தொகையும், ரூபாய் 15 மெடிகல் செலவிற்கும் தருவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். நல்ல செய்தி. எந்த நோக்கத்தில் இந்த முடிவு எடுத்தாலும், தில்லையில் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு தமிழக முதல்வர் ஆற்றும் பணி சிறப்பானதே.
இந்த தில்லை நடராஜர் கோவில் விவ்காரம், ஒரு பெரிய உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் தொன்மை வாய்ந்த மொழிகளில் சமஸ்கிருதமும், தமிழும் முதன்மையானவை. இன்றைக்கு தமிழ் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு காரணம், சைவமும், வைணவமுமே. பன்னிரு ஆழ்வார்களும் , அறுபத்து மூன்று நாயன்மார்களும் தமிழில் பாடிய பிரபந்தங்களும், தேவரம் திருவாசகமுமே, தமிழை ஒரு புனிதமான மொழியாக வளர்த்தன. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக, இந்த தமிழ் பதிகங்கள் கோவிலில் அதற்குரிய பண்ணுடன் பாடப்படுகின்றன.

இன்றைய தமிழ் வளர்ச்சிக்கு சைவமும், வைணவமுமே 95 சதவிகிதம் காரணம். தமிழ் வளர்ப்பதாக கூறிக்கொள்பவர்கள் செயவது 'ஆரவாரம்' மட்டுமே. தங்கள் பிள்ளைகளை 'கான்வெண்டில்' படிக்கவைத்து, 'மம்மி, டாடி' சொல்ல வைத்து மகிழ்பவர்கள். தமிழ் டி.வி. சேனல்களில் பேசப்படும் தமிழைப்பற்றி பேசாமல் இருப்பதே நல்லது.
தில்லையில் நடந்ததெல்லாம், தமிழ் ஆர்வலர்கள் என்கிற போர்வையில், நாத்திகர்கள் செய்த ஆர்பாட்டம் என்று பத்திரிகைகள் கூறுகின்றன. தில்லை தீட்சிதர்களும் , நாத்திகர்கள் விரித்த வலையில் சிக்கி, சரியாக கையாளத் தெரியாமல், விவகாரத்தை பெரிது படுத்தி விட்டார்கள். ஏதோ, இந்து மதம், குறிப்பாக பிராமணர்கள் தமிழுக்கு எதிரி போன்ற் மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்கள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு 'தில்லை நடராஜரையும், திருவரங்கம் அரங்கனையும் பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக' முழங்கிய நாத்திகர்கள், உண்மையிலே என்ன செய்தார்கள்? தங்கள் கொள்கைகளுக்கு மாறாக 'தேவாரம்' பாட துடிக்கிறார்கள். இப்போது நாத்திகம் பேசினால் யாரும் கேட்பதில்லை.

நாத்திகம் பேசும் பகுத்தறிவுவாதிகளின் முயற்சியால், தமிழ்நாட்டில் ஆன்மீகம் அதிக அளவில் வளர்ந்து வருகிறது. பகுத்தறிவு பேசப் பேச, 'தலையில் தேங்காய உடைத்துக்கொள்ளும்' அறிவுசாராத மூடநம்பிக்கைகள் பெருகத் தொடங்கிவிட்ட்ன. இந்தியாவில், தொன்று தொட்டு ஆன்மீகம், அறிவியல் சார்ந்தது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டும், தேவையற்ற மூட நம்பிக்கைளை, பகுத்தறிவு வாதிகள் வளர்த்து விட்டனர். இந்தியாவின் மற்ற மாநிலங்களில், இந்த அளவு மூட நம்பிக்கைகள் இல்லை. காரணம், அங்கு அதிகமாக யாரும் பகுத்தறிவு பேசுவதில்லை.
ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது. நாத்திகம் பேசுபவர்களுக்கும் தில்லை நடராஜர் தான் கைகொடுக்க வேண்டியதாகிவிட்டது. 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகியது' என்று கூறுவார்கள். ' தில்லை நடராஜனை பீரங்கி கொண்டு பிளக்கப்போவதாக முழக்கமிட்டவர்கள், தில்லை அம்பலத்தில் தேவாரம் பாட துடிப்பதை' இன்று பெரியார் உயிருடன் இருந்து பார்த்திருந்தால் என்ன கூறியிருப்பார்?

ஞாயிறு, 16 மார்ச், 2008

சமூக சேவையில் எவரெஸ்ட்டை ஒத்த 'எவரெஸ்ட் டீம்'

கார்த்திபன், டீம் எவரெஸ்ட்தமிழ் நாட்டிலுள்ள ஆரணியில் ஒரு எளிய நடுத்தர குடும்பத்திலிருந்து வரும் கார்த்திபன் (வயது 23) , ஒரு பொறியியல் பட்டதாரி. ஒரு பிரபல ஐ.டி கம்பெனியில் பணியாற்றுகிறார். நாற்பதாயிரம் பேருக்கு மேல் வேலைபுரியும் இந்த கம்பெனியில், சுமார் இரண்டாயிரம் பேரை இணைத்து "டீம் எவரெஸ்ட்" என்கிற சமூக் சேவை அமைப்பை துவக்கி, பல நற்பணிகளை சுமார் 18 மாதங்களாக செய்து வருகிறார்.


"டாக்டர் கலாம் என்கிற மாமனிதரின் தூண்டுதல் இல்லையென்றால், இன்று எங்களைப்போன்ற இளைஞர்கள், சமுதாயத்தைப்பற்றியே சிந்தித்து இருக்க மாட்டோம்." என்று பெருமையுடன் கலாமைப்பற்றி உணர்ச்சிபொங்க கூறும் கார்த்திபன், தன்னுடன் பணிபுரியும் 2000 நண்பர்களையும் இணைத்துக்கொண்டு, தமிழ்நாட்டின் 31 மாவட்டங்களிலும் உள்ள கிராமங்களில், கல்விப்பணி ஆற்றுகிறார். நிதி வசதியற்ற, நல்ல மார்க் எடுத்துள்ள ஏழை மாணவர்களுக்கு, தொழிற்கல்வி பெற உதவியுள்ளார்கள். அவர்கள் விடுக்கும் ஒரே கண்டிஷன், இந்த மாணவர்கள், தங்கள் கல்வி முடிந்தவுடன், அவர்களும் , தங்களைப்போன்ற மற்ற எழை மாணவர்களுக்கும் உதவி செய்யவேண்டும் என்பதே!



இந்த டீமிலுள்ள அனைவரும், விடுமுறை நாட்களில், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கும் விஜயம் செய்து, அங்கு உள்ளவர்களுடன் தங்களது அன்பையும் கொடுக்கிறார்கள். "நகரத்திலுள்ள இல்லங்களுக்கு நிதி உதவி தேவையில்லை. அங்கு உள்ள குழந்தைகளுக்கும், முதியோர்களூக்கும் தேவை அன்பு மட்டுமே. ஆனால் கிராமப்புறங்களிலுள்ள அனாதை ஆசிரமங்களூம், முதியோர் இல்லங்களுக்கும் நிதி உதவியும், அன்பும் தேவை" என்கிறார் கார்த்திபன். அதனால், யாருக்கு என்ன தேவையோ, அதை மட்டும் அளிக்கிறார்கள்.


"இந்த உலகில் கடைசி இரண்டு மனிதன் இருக்கும் வரை, யாருமே அனாதை இல்லை" என்று தத்துவமாக பேசி, நெகிழவைக்கிறார்.


இராஜராஜன் கட்டிய கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டு விட்டு, அதன் வெளிச்சமே தெரியாதவகையில், தங்களுடைய பெயரை பெரிய எழுத்தில் போட்டு அசத்தும், இந்த காலங்களில், ஆரவாரமே இல்லாமல், டாகடர் கலாமின் 2020 கனவுகளை, ந்னவுகளாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள இந்த இரண்டாயிரம் இளைஞர்களும், தங்களுக்குள் கம்பெனியின் 'இண்டிரானெட் பிளாக்" மூலமாக தகவல்களை பறிமாறிக்கொள்கிறார்கள். இது வெளி உலகிற்கும் தெரிய வாய்பில்லை.


"எவரெஸ்ட் பாஸிடிவ்" என்கிற் ஒரு இணைய இதழையும் விரைவில் துவக்கி, பத்திரிகைகளில் வெளிவரும் பாசிடிவான விஷயங்களை (வருகிறதா என்ன?) தொகுத்து, தங்களது உறுப்பினர்களுக்கு இமெயிலில் சர்குலேட் செய்ய இருக்கிறார்கள்.


இந்த இளைஞர்களைப் பார்க்கும் போது, எதிர்கால இந்தியாவைப்பற்றி கவலைப்பட தேவையில்லை.


"டீம் எவரெஸ்ட்" இளைஞர்களை வாழ்த்துவோம். இந்த இளைஞர்களை தொடர்பு கொள்ள இமெயில் முகவரி teameverest@yahoo.co.in

சனி, 8 மார்ச், 2008

டாக்டர் அப்துல் கலாமுடன் ஒரு சிறப்பு நேர்முகம் - விஷன் 2020 அடைவதற்கு கார்பொரேட் நிறுவனங்களின் பங்கு

பிரைம்பாயிண்ட் அறக்கட்டளையினால் வெளியிடப்படும் PR-e-Sense என்கிற மாத மின் இதழ் 24 இதழ்களை வெளிட்டு மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த பிப்ரவரி 08 இதழ் 'இரண்டாம் ஆண்டு சிரப்பு மலராக' வெளியிடப்பட்டது.

இன்று இந்தியர்கள் அனைவரையும் 'விஷன் 2020' ப்ற்றி தன்னம்பிக்கையுடன் பேசவைத்த பெருமை , 'இந்தியா 2020' புத்த்கம் எழுதிய டாக்டர் அப்துல் கலாமிற்கும், அவரது நண்பர் டாக்டர் ய.சு. ராஜனுக்கும் தான் சேரும்.

பிப்ரவரி 08 இதழை டாக்டர் ய்.சு ராஜன் 'கௌரவ ஆசிரிய்ராக' பொறுப்பேற்று தொகுத்து வழங்கி எங்களுக்கு பெருமை வழங்கினார். இந்த இதழில் டாக்டர் கலாமின் சிறப்பு நேர்முகமும், டாக்டர் ராஜனின் சிறப்பு நேர்முகமும் வெளியாகியுள்ளன.

ஆங்கிலத்திலுள்ள இந்த இதழை கீழ்கண்ட தளத்திலிருந்து டவுன்லோடு செய்து படிக்கவும். இந்த இதழை டவுன் லோடு செய்து மற்றவர்களுக்கும் அனுப்பவும்.

http://www.primepointfoundation.org/presense/presensze0208.pdf

டாக்டர் அப்துல் கலாமின் நேர்முகத்தை (ஆங்கிலம்) கேட்க, இங்கே கிளிக் செய்து கேட்கவும்.


வெள்ளி, 7 மார்ச், 2008

தீவிரவாத எதிர்ப்பும் மக்கள் உரிமையும்

நான் கடந்த மார்ச் 5ம் தேதி பதிவில், FACT என்கிற தீவிர வாத எதிர்ப்பு அமைப்பு நடத்திய ஒரு கண்காட்சி பற்றி கூறியிருந்தேன். 9ம் தேதி வரை நடை பெறவிருந்த அந்த கண்காட்சியை நேற்று (6ம் தேதி) மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த செய்தி இன்றைய (7ம் தேதி) செய்திதாள்களில் வந்துள்ளது.

விஷயம் இதுதான். இரண்டு அல்லது மூன்று இஸ்லாமியர் சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்து, இந்த கண்காட்சி நீடித்தால் மதக்கலவரம் ஏற்படும் என்றும் கண்காட்சி மனித உரிமைகளள மீறிவிட்டததகவும் புகார் கொடுத்துள்ளனர். உடனே, போலீஸ் அதிகாரிகளூம் களத்தில் இறங்கி, அதிரடியாக சில ஓவியங்களை சேதப்படுத்தியும், அதன் அமைப்பாளர்களை (பெண்கள் உட்பட) கைது செய்தும் ஒரு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

அதன் அமைப்பாளர்கள் நிகழ்ச்சி துவ்ங்கிய 3ம் தேதி, பத்திரிகையாளர்களை சந்திப்பதற்கும், கண்காட்சி துவக்க விழாவிற்கும் அழைத்திருந்தார்கள். (பத்திரிகையாளன் என்கிற முறையில் எனக்கும் அழைப்பு வந்தது). அன்றைய தினம் எந்த பத்திரிகையாளர்களுமே, நான் உட்பட, போகவில்லை. மறுநாளும் அந்த நிகழ்ச்சி செய்தியாகவில்லை. நானும் ஒரு பத்திரிகையாளன் என்கிற வகையில், இரண்டு நாட்கள் கழித்து, அந்த சாலையில் செல்லும்போது, கண்காட்சியில் நுழைந்தேன். அதனால் தான் நான் 5ம் தேதி, என்னுடைய பிளாகில் பதிவு செய்தேன். இந்த போலீஸ் தலையீட்டிற்கு பிறகு, இந்த கண்காட்சி உலக அளவில் செய்தி ஆக்கப்பட்டுவிட்டது.

அவுரங்கசீப்பின் அண்ணன் தாரா சுகோ பற்றி மிகவும் உயர்வாக குறிப்பிட்டு இருந்தார்கள். அவர் மற்ற மதத்தினரை எவ்வாறு மரியாதையுடன் நடத்தினார் என்பதையும் குறிப்பிட்டு இருந்தார்கள். (படம்). மற்றொரு இடத்தில், அவுரங்கசீப் திருகுரான் மீது பற்று வைத்திருந்த்தார் என்றும் தன்னுடைய குல்லாவை அவரே தைத்துகொண்டதையும் விவரித்து இருந்தார்கள்.

aurangazeb elder borther Dara Shukoh discussing with Vedid Scholars
நல்ல குடும்பத்தில் பிறந்த பலர், வெறியர்களாக இருந்த வரலாறு நிறைய உண்டு. அந்த அமைப்பாளர்களிடம் பேசும் போது அவர்கள், " அவுரங்கசீப்பிற்கு பதிலாக அவரது அண்ணன் தாரா சுகோவே மன்னராக ஆகியிருந்தால், இந்திய நாட்டின் சரித்திரமே மாறியிருக்கும்' என்றார்கள்.

ஒரு சிலரது போலீஸ் கம்ப்ளெயிண்ட்டினால், இதுவரை பேசப்ப்டாத அவுரங்கசீப்பின் அராஜகம் பற்றிய கண்காட்சி இப்போது பெரிய அளவில் உலக அளவில் விவாதிக்கப்படுகிறது. (இந்த கண்காட்சி அமைப்பாளர்கள், கம்ப்ளெயிண்ட் கொடுததவர்களுக்கு நன்றி செலுத்தவேண்டும்)

"பிரபல ஒவியர், எம். எஃப். ஹுசேன் இந்து கடவுள்களை நிர்வாணமாக ஒவியம் வரைந்து காட்சியில் வைத்திருந்தபோது, மனித உரிமை அமைப்பினர் அது 'ஒவியனின் கலை உரிமை' என்று வாதிட்டனர். அப்போது, அவர்கள் மனதில், கோடிககண்க்கான ஆன்மீகத்தில் நம்பிக்கை உடையவர்களின் மனம் புண்படுவ்தைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், இந்த அவுரங்கசீப் கண்காட்சியில், மனித உரிமை பறிபோகிவிட்டதாக அவர்கள் வாதிடுவது வியப்பாக இருக்கிறது" என்று இந்து அமைப்பினர் குறை கூறுகின்றனர்.

உலக அளவில் எல்லா மதத்திலும் நல்லவர்களும் உண்டு, தீயவர்களூம் உண்டு. 99.9999999 சதவிகிதத்தினர் நல்லவர்களே. அமைதியானவர்கள். ஒரு சில தீயவர்கள் செய்யும் கொடுமையான செய்கையால், அந்த மதத்தினர் அனனவரையும் குறை கூற முடியாது. அதே சமயம், அனைத்து மதத்தினரும், நல்லவர்களுக்காக வாதாட வேண்டும். தீயவர்களுக்காக வாதாடக்கூடாது.

என்னுடைய நெருங்கிய இஸ்லாமீய நண்பர்கள், (தங்கள் பெயரை வெளியிட விரும்பாமல்), மனம் வருந்தி, ஒரு சிலர், தங்கள் பப்ளிசிடிக்காக, அவுரங்கசீப் போன்ற கொடியவர்களை ஆதரித்து, போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்து, எவருமே அறியாத ஒரு கண்காட்சியை உலக அளவில் செய்தியாக்கி, தங்கள் சமூகத்தை சார்ந்த மற்ற நல்லவர்களூம் வன்முறையை ஆதரிப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டார்களே என்று ஆதங்கப்படுகிறார்கள்.

புதன், 5 மார்ச், 2008

தீவிரவாதத்தின் கொடுமைகளை விளக்கும் ஒரு கண்காட்சி



Foundation against continuing terrorism
FACT என்கிற ஒரு அறக்கட்டளை தீவிரவாதத்தை எதிர்த்து விழிப்புணர்வை உறுவாக்கும் ஒரு அமைப்பு. சென்னையில் கடந்த மார்ச் 3ம் தேதி முதல் ஒரு கண்காட்சியை சென்னை லலித்கலா அகடமியில் நடத்தி வருகிறார்கள். 9ம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில் அவுரங்கசீப் காலத்தில் நடந்த வன்முறைகளை, அவர் காலத்தில் எழுதப்பட்ட ஆவணங்கள் மூலமாகவே விவரித்திருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் பிகானீரில், அரசு கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

அவுரங்கசீப்பின் தந்தையார் ஷாஜஹான் மற்றும், மூத்த சகோதரர் தாரா சுகோ, மற்ற மதத்தினரிடம் எவ்வாறு அன்புடன் இருந்தார்கள் என்பதை விவரிக்கும் ஆவணங்களூம், படங்களும் காட்சியில் வைத்துள்ளார்கள்.


அதே சமயம், அவுரங்கசீப் எவ்வளவு கொடுமைக்காரனாக இருந்தார் என்பதை விளக்கும் ஆவணங்களும், படங்களும் காட்சியில் உள்ளன.

சத்ரபதி சிவாஜி அவுரங்கசீப் அவையிலிருந்து வெளியேறுகிறார்
ஒருமுறை ம்ராத்திய மன்னர் சிவாஜி, அவுரங்கசீப்பின் ஐம்ப்தாவது பிறந்த்நாள் விழாவிற்கு சென்று இருந்த சமயம், சிவாஜியை எவ்வர்று அவுரங்கசீப் அவமானப்படுத்தினார் என்பதையும் அதனால், சிவாஜி, அரசபையிலிருந்து வெளியேறியதையும் ஆவணங்கள் மற்றும் படம் மூலம் விவரித்துள்ளார்கள்.

சீக்கிய மதத்தின் ஒன்பதாவது குரு தேஜ் பகதூர் சிங், அவுரங்கசீப்பால் மக்கள் முன்னிலையில் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதும் படம் மற்றும் ஆவணங்கள் மூலம் விவரித்துள்ளனர். அதனால்தான், தேஜ் பகதூ சிங் அவர்களின் மகன் குரு கோவிந்த சிங் ' கல்சா' என்கிற அமைப்பை 1699ம் ஆண்டு, தீவிரவாததிற்கு எதிராக துவங்கியதாக வரலாறு.


நல்ல குடும்பத்திலிருந்து வ்ந்தாலும், ஒரு சிலரது, அதிகார வெறியில், கொடூரமான தீவிரவாதத்தில் ஈடுபடும்போது, மக்கள் எவ்வாறு அவதிப்படுகிறார்கள் என்பதை இந்த கண்காட்சி அமைதியாக வெளிப்படுத்துகிறது.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...