This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வியாழன், 15 நவம்பர், 2007

ஜனாதிபதி மாளிகையை விட்ட 100 நாட்களில் டாக்டர் கலாமின் சாதனை


வழக்கமாக, ஒரு அரசியல் தலைவரோ அல்லது ஒரு நிறுவனத்தின் மேலதிகாரியோ பதவி ஏற்ற 100 நாட்கள் கழித்து தங்கள் சாதனைகளை ஒரு பட்டியலிட்டு பார்ப்பது வழக்கம். ஆனால், ஒரு பதவியிலிருந்து ஓய்வு பெற்ற ஒருவர், தான் வெளிவந்த 100 நாட்களின் சாதனைகளை நோக்குவதில்லை.

வழக்கமாக பதவியிலிருந்து ஓய்வு பெறும் அனைவரும், தங்கள் வேலை பணிகளை குறைத்து கொள்வ்துதான் வழக்கம். ஆனால் நம் 'மக்கள் ஜனாதிபதி' டாக்டர் கலாம் எதையுமே ஒரு புதுமையாக செய்யப் பழகியவர்.

ஜனாதிபதி மாளிகையிலிருந்ததைவிட அதிக 'பிஸி' ஆகிவிட்டார். அவர் ஓய்வு (?) பெற்ற கடந்த 100 நாட்களில் 90 கூட்டங்களில் பேசியுள்ளார்; மூன்று நாடுகளில் சுற்றுபயணம் செய்துள்ளார்'; சுமார் ஆறு லட்சம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்துள்ளார். அவர் செல்லுமிடமெல்லாம், மக்கள் அவருக்கு ஜனாதிபதிக்குரிய் மதிப்பையும் மரியாதையையும் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு நெருங்கிய நண்பரும், விஞ்ஞானியுமான திரு பொன்ராஜ், டாக்டர் கலாமின் ஒவ்வொரு பேச்சையும் பதிவு செய்து, அதை www.abdulkalam.com என்கிற இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறார். அது தவிர, ஒரு e-paper ம் துவங்கி அதன் மூலம் கலாமின் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

டாக்டர் கலாமை போன்ற தேசபற்றுள்ள மற்றும் இளைஞர்களை கவரக்கூடிய ஒரு மாமனிதரை பல ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் பார்க்கிறோம். அவர் தொடர்ந்து மக்கள் பணி ஆற்ற அவருக்கு நீண்ட ஆயுளையும் நல்ல தேக ஆரோக்கியத்தையும் கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

புதன், 7 நவம்பர், 2007

வெற்றிப்படிகளில் ஏறி வந்த ஐ.சி.ஐ.சி.ஐ வங்கிக்கு ஒரு சறுக்கல் - குண்டர்களை ஏவி கடன் வசூலித்ததால் கோர்ட் அபராதம்

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி துவங்கிய குறுகிய காலத்திலேயே மாபெறும் வளர்ச்சி பெற்று, பல பிரபல வங்கிகளையும் பின்னுக்குத்தள்ளி முன்னேறி வருகிறது. அவர்களது ப்ரிமிக்கத்தக்க வளர்ச்சி, அவர்களது செருக்கையும் அதிகப்படுத்தி உள்ளது. பல இடங்களில் கொடுத்த கடனை வசூலிப்பதற்கு, அடியாட்களை ஏவியும், மிரட்டியும் வசுலிப்பதாக செய்திகள் வந்தன.

கடந்த நவம்பர் ஆறாம் தேதி, டில்லியிலுள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, தங்களிடம் கடன் வாங்கிய ஒரு வாடிக்கையாளரை குண்டர்கள் மூலம் அடித்ததற்காக 55 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சென்ற் வாரம், ரிசர்வ் வங்கியின் கவர்னர், தனியார் மற்றும் பன்னாட்டு வங்கிகள் குண்டர்கள் வழியாக கடன் வசூல் செய்வதை கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை கீழ்கண்ட யூ.ஆர்.எல்லில் படிக்கலாம்.

http://www.signonsandiego.com/news/business/20071106-0006-india-loancollectorbeating.html

வெற்றிபடிகளில் ஏறும் போது , செருக்கு தலையில் ஏறுகிறது. அந்த இறுமாப்பு சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்களை செய்ய தூண்டுகிற்து. அங்குதான,் சறுக்கலின் முதல் படி துவங்குகிற்து.

மீண்டும் சந்திப்போம். அனவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 4 நவம்பர், 2007

உடல் ஊனம் வெற்றிக்கு தடையில்லை

எனது நெருங்கிய நண்பர் திரு ஜெயகுமாரின் மகன் திரு சித்தார்த், சிறு வயது முதல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தன்னுடைய ஒவ்வொரு சோதனைகளையும், தன் விடா முயற்சியால் முறியடித்து, சாதனைக்ளாக்கி வாழ்க்கையில் வெற்றி பெற்றுவருகிறார். தற்போது ஒரு பன்னாட்டு வங்கியில் ஒரு அதிகாரியாக பனியாற்றி வருகிறார்.

டாக்டர் கலாம் அவர்கள் , குடியரசுத்தலைவராக இருந்த போது , சித்தார்த்தை அழைத்து அவருடன் பேசி மகிழ்ந்துள்ளார். ஒரு விழாவில், டாக்டர் கலாம் அவர்கள், சித்தார்த்தைப்பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார்.

டாக்டர் கலாம் அவர்கள் பேசியதை, நீங்களும் கேளுங்களேன்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...