This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 27 மார்ச், 2009

தேர்தலுக்கு பிறகு அணிகள் மாறுமா? ஒரு யதார்த்தமான அலசல்

வெற்றிக்குரல் - இணைய ஒலி இதழ் 6

தமிழகத்தில் இப்போது 4 அணிகள் இருக்கின்றன. திமுக அணி, அதிமுக அணி, விஜயகாந்த அணி மற்றும் பிஜேபி அணி. மாயவதி கட்சி, தனியாக முதன் முறையாக களம் இறங்குவதால், அவர்கள் ஒரு அணியாக கருதலாமா என்பது தெரியவில்லை.

திமுக அணியில் காங்கிரஸ் இருக்கிறது. மாநிலத்திலும், மத்தியிலும் இரண்டு கட்சிகளுமே ஆட்சி செய்கின்றன. அதனால் ஏற்படக்கூடிய 'anti establishment' என்று கூறப்படும் வோட்டு இழப்பு இருவருக்கும் பாதிக்க்லாம். தவிரவும், பாமக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக அணியிலிருந்து வெளியேறிவிட்டன. இதனால் கூட வோட்டு இழப்பை திமுக அணி சந்திக்க வேண்டியிருக்கிறது. திமுக அணிக்கு எதிரான வாக்குகள், அதிமுக அணி, பாஜக அணி, விஜயகாந்த் அணி ஆகிய அணிகளிடையே பிரிந்து போகவும் வாய்ப்பு உள்ளது.

மேலும், மைனாரிடி வாக்குகள் எவ்வாறு செல்லும் என்பதும் முக்கியமான விஷயமாகும்.

தேசிய அளவிலும், மாநில அளவிலும், தேர்தலுக்கு பிற்கு அணிகள் மாறவும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இது பற்றி பிரபல அரசியல் பத்திரிகையாளர் திரு நுருல்லா அவர்களை 'வெற்றிக்குரலுக்காக' இன்று காலை (27.3.09) தொலைபேசியில் பேட்டி எடுத்தேன்.. திரு நுருல்லா அவர்கள், தினமலர், தினகரன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியவர். த்ற்போது, தினசுடர் பத்திரிகையில் பணியாற்றுகிறார். சென்ற பொது தேர்தலில் (2004), அவர் தினமலரில் எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரபலமனவை. அனைத்து அரசியல் தலைவர்களும் அவரது கருத்தை அறிய விரும்பினர்.

அவரது பேட்டியை, கீழே காணும் பிளாஷ் பிளேயரில், 'play' பட்டனை அழுத்தி, கேட்கவும் ( 18 நிமிடங்கள்). இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோவில் தடங்கல் இருந்தால், இந்த ஆடியோவை டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கவும்.



இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய்தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857381

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...