
இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளில் இல்லாத ஒரு நிலை தேசிய கட்சிகளுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில், ஒரு பெரிய கட்சி தலைமையில், கூட்டணி ஆட்சி என்கிற நிலை வந்துள்ளது. இந்த தேர்தலில், மாநில கட்சிகள், காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி ஆகிய இரு கட்சிகளையுமே, மாநில கட்சிகள் ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டன. பெரிய கட்சிகள பரிதாப்மாக சிறிய கட்சிகளை பேரம் பேசி தாஜா செய்ய வேண்டிய நிலை இப்போது வந்துள்ளது.
இந்த நிலைமை தேசிய நலனுக்கு உகந்ததா என்பது பற்றி, தேசிய அக்கறை கொண்ட அனைவரது எண்ணத்திலும் வந்துள்ளது. இது குறித்து, நான் திரு தடா. பெரியசாமியிடம் ஒரு பேட்டி கண்டேன். திரு பெரியசாமி, ஒரு காலத்தில் தீவிரவாதத்தில் இருந்து, மனம் மாறி, தற்போது, பெரிய அளவில் தலித் மேம்பாட்டிற்கு 60 இரவு பள்ளிக்கூடங்கள் நடத்தி சமூக சேவை செய்து வருகிறார். அவரால், சுமார் 3000 தலித் குழந்தைகள் பயன்பெறுகிறார்கள். விடுதலை சிறுத்தைகள் அமைப்பை திருமாவளவனுடன் இணைந்து நிறுவினார். அரசியல் மற்றும் தலித் சமூக பணிகளில் ஈடுபட்டிற்கும் இவர், தமிழக அரசியலில் ஒரு முக்கியமான குறிபிடத்தக்க தலித் தலைவர்.
(1) தேசிய கட்சிகளின் இன்றைய பரிதாப நிலைக்கு காரணம், (2) 60 ஆண்டுகளுக்கு பிறகும் ஏன் தலித மக்கள முன்னேற முடியவில்லை, (3) தேசிய நலனுக்காக காங்கிரஸும், பி.ஜே.பியும் ஒரு தேசிய அரசு அமைக்க வாய்ப்பு உள்ளதா என்பது பற்றி மன்ம் திறந்து உரையாடினார்.
அவரது பேட்டியை 'கிளிக்' செய்து கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்ட் இணைப்பில் சரியாக கேட்கலாம். ஆடியோ சரியாக வரவில்லை என்றால், இந்த ஆடியோவை டவுன்லோடு செய்து, mp3 பிளேயரில் கேட்கலாம்)
இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857380
இனி வரும் நாட்களில், பல அரசியல் தலைவர்களீன் தமிழ் பேட்டிகளை இங்கு வெளியிட இருக்கிறேன். பதிவுகளை இமெயிலில் பெற வலது பக்கத்திலுள்ள அதற்குரிய கட்டத்தில், உங்கள் இமெயில் விலாசத்தை பதிவு செய்யவும்.
Great effort on audio! I havent yet listened. But will download for listening later. Thank you
பதிலளிநீக்கு