
தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டது. அரசியல் கட்சிகள் அணி அமைத்து விட்டன. வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
இந்து மக்கள் கட்சி, ஜெயல்லிதாவிற்கு அதிரடியாக ஆதரவு தந்து, பிரச்சாரத்தை துவக்கி விட்டது. பெரியார் சிலை உடைப்பு, தாய் மதம் திரும்புதல் முதலிய நிகழ்ச்சிகள் மூலமாக தமிழக மக்களிடையே பிரபலமானவர் திரு அர்ஜுன் சம்பத். சில மாதங்களுக்கு முன், தமிழக மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டவர். சில நாட்கள், தலைப்பு செய்தியாகி இருந்தவர்.
வெற்றிகுரல் சார்பாக, நான் அவரை தொலைபேசி மூலம் பேட்டி கண்டேன். ஜெயலலிதாதான் அடுத்த பிரதமர் என்று அடித்து சொல்லும் அர்ஜுன் சம்பத், அவரது கொள்கைக்கு எதிரான கம்யூனிஸ்ட்டுகளுடன் எவ்வாறு செயல் படுவார் என்று கூறினார். தமிழகத்தில், தேர்தலில் மக்கள் முன் இருக்கும் பிரச்சனைகள், இலங்கை பிரச்சனை, சுவிஸ் வங்கி கணக்குகள், தேர்தலுக்கு பின் அமைய இருக்கும் அரசு ஆகியவை பற்றியெல்லாம் பேசினார். அவரது பரபரப்பான பேட்டியை நீங்களூம் கேளுங்களேன்.
கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை கிளிக் செய்து அவரது பேட்டியை கேட்கவும். (இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க்டாப்பில் சேமித்து, mp3 பிளேயரில் கேட்கவும்) - 15 நிமிடம்.
இந்த பேட்டியை கீழ்கண்டதளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857398
0 கருத்துகள்:
கருத்துரையிடுக