This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

ஞாயிறு, 30 நவம்பர், 2008

அரசியல் வாதிகளே! மனித உரிமை காவலர்களே!! எங்கு ஒளிந்து கொண்டீர்கள்?

கடந்த நான்கு நாட்களாக, இந்தியாவை, ஏன் உலக நாடுகளையே உலுக்கி வரும் மும்பாய் நகரத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாதிகளைப்பற்றிதான் அனைத்து டி.வி. மற்ற பிற் மீடியாக்களில் செய்தி வருகிற்து. 'செக்யூலர்' அரசு என்று மார்தட்டிக்கொள்ளும் காங்கிரஸ் அரசே, பாகிஸ்தானை சுட்டி காண்பிக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிரா முதலமைச்சரும் ராஜ்னாமா செய்து விட்டதாக செய்திகள் வருகின்றன. இந்திய் பொருளாதாரத்தை பாழ்படுத்திய சிதம்பரத்தை எப்படி தூக்குவது என்று எண்ணிய வேளையில், சாமர்திய்மாக அவரை உள்துறைக்கு தள்ளிவிட்டார்கள். (ஒரே கல்லில் இரண்டு மாங்காய்). மகராஷ்டிர துணை முதல்வர் 'இது ஒரு சிறிய நிகழ்வு' என்கிறார். என்ன வெட்கக்கேடு.

இந்த பயங்கரவாததிற்கு பிறகு, அனைத்து டி.வி.களிலும் பொதுமக்கள் அரசியல் வாதிகள் மீது தங்கள் வெறுப்பினை உமிழ்கிறார்கள். ஒவ்வொரு தலைவருக்கும், எவ்வளவு பாதுகாப்பு. ஆனால் மக்களூக்கு மட்டும் இல்லை. தீவிரவாதிகளை நியாயப்படுத்தி பேச்சு வேறு. பார்லிமெண்டை தாக்கிய் தீவிரவாதியை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு பிறகும் தூக்கில் இட முடியவில்லை. 'சிமி' அமைப்பு தடை செய்யப்டும் போது, அவர்களுக்கு ஆதரவாக லல்லுவின் தாண்டவம். இந்தியாவில் தடை செய்யப்பட்ட புலிகளின் தலைவர் பிர்பாகரனின் பிறந்த நாளை, சென்னை உயர்நீதினற வளாகத்தில் கொண்டாடுவது போன்ற ப்ல நிகழ்வுகளால், மக்கள் அரசியல் வாதிகள் மீது மிகுந்த வெறுப்பு அடைந்துள்ளார்கள். அந்த இயக்கத்தின் ஒரு தலைவர் மறையும் போது, இந்திய அரசியல் சட்டதிற்கு உட்பட்ட தமிழக முதல்வர் 'கவிதை அஞ்சலி' செலுத்துகிறார். இந்த தலைவர்களெல்லாம், மும்பை ஹோட்டலில் மாட்டிக்கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவர்க்ள் தீவிரவாதத்தின் கொடுமையை உணர்ந்திருப்பார்கள்.

இந்திய கமாண்டோக்கள், தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றினார்கள். அவர்களது இறுதி ஊர்வலத்தில் மக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செய்ததை டி.வி. கண்ட போது, அவர்கள்தான் உண்மையான ஹீரோக்களாக இருந்தார்கள். அங்கு வந்த அரசியல்வாதிகளை மக்கள் திட்டியதையும் காண்பித்தார்கள்.

தீவிரவாதிகளை தாக்கி பேசினாலே, ஒரு குறிப்பிட்ட மததினரை தாக்குவதாக நினைத்து கொண்டு, தீவிரவாததிற்கு மறைமுகமாக அனைத்து தலைவர்களும் ஆதரவளித்து, தீவிரவாததை நியாயப்படுத்துகிறார்கள். அந்த குறிப்பிட்ட மததினரும், இவர்களின் குள்ள நரித்தனத்தை புரிந்து கொள்ளாமல், ஏதோ அவர்கள் தான் தங்கள் காவலர்கள் போன்று நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அவர்களும் தைரிய்மாக வெளியே வந்து, தீவிரவாததிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு ஜாதி மதம் கிடையாது. அவர்கள் மனித இனத்தின் எதிரிகள். மும்பையில் நடந்த தாக்குதலில் அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் இறந்திருக்கிறார்கள்.

மனித உரிமை இயக்கங்களோ, சொல்லவே வேண்டாம். தீவிரவாதிகளை கைது செய்யும் போதும், தூக்கில் இடும் போதும், அவர்களுக்கு ஆதரவாக வெடகமின்றி கத்துவார்கள். அந்த தீவிரவாதிகள், மக்களை தாக்கும் போது, அந்த மனித உரிமை ஆர்வலர்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள். தீவிரவாதம் என்பது மனித உரிமை மீறல். மும்பையில் 200க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கிறார்கள். அவர்களது குடும்பத்தைபற்றி எந்த மனித உரிமை அமைப்புகளாவது சிந்தனை செய்ததுண்டா? ஆனால், தீவிரவாதிகளை தூக்கில் இடும்போது மட்டும், தீவிரவாதிகளின் குடும்பம் நினைவுக்கு வந்து விடுகிறது. இதுவரை எந்த மனித உரிமை அமைப்புகளும் ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை. அவர்கள் தீவிரவாத அமைப்புகளீன் ஏஜண்டுகளாக இருப்பவர்கள்.

தீவிரவாதத்தை மறைமுகமாகவோ அல்லது நேரிடையாகவோ ஆதரிப்பவர்கள், அவர்கள் அரசியல் வாதிகளாகட்டும் அல்ல்து மனித உரிமை ஆர்வலர்களாக்ட்டும், அவர்களும் 'தீவிரவாதிகளே'. இதை மக்கள் உணரும் காலம் வந்து விட்டது.

மக்களுடன் இருக்க வேண்டிய தலைவர்கள், ஒரு பெரிய பாதுகாப்பு படையுடன் செல்கிறார்கள். அவர்கள், தீவிரவாதிகளை ஆதரிப்பதால், தீவிர்வாதிகளிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லை. பிறகு எதற்கு இந்த பாதுகாப்பு? பந்தாவிற்கா அல்லது மக்களுடைய கோபத்திலிருந்து பாதுகாத்து கொள்ளவா? ஆனால் மக்களுக்கு மட்டும் எந்த பாதுகாப்புமில்லை.

4 கருத்துகள்:

  1. //தீவிரவாதிகளை தாக்கி பேசினாலே, ஒரு குறிப்பிட்ட மததினரை தாக்குவதாக நினைத்து கொண்டு, தீவிரவாததிற்கு மறைமுகமாக அனைத்து தலைவர்களும் ஆதரவளித்து, தீவிரவாததை நியாயப்படுத்துகிறார்கள். அந்த குறிப்பிட்ட மததினரும், இவர்களின் குள்ள நரித்தனத்தை புரிந்து கொள்ளாமல், ஏதோ அவர்கள் தான் தங்கள் காவலர்கள் போன்று நினைக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். அவர்களும் தைரிய்மாக வெளியே வந்து, தீவிரவாததிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்.//

    Well Said

    பதிலளிநீக்கு
  2. Really our politicians should bow in shame, but this will not happen. They are thick skinned, they will try to make mileage out of the present calamity and try to augment several thousands/ sorry several lakhs crores of money to their vast generation to follow. We need leaders of the stature of Sardar Vallabhai Patel/ Netaji. Your article has come out well expressing the anger of the majority of the innocent helpless individuals. We can only pray God that Kalki Awathara should come fast and evils should be destroyed soon and honest citizens should be peaceful.

    பதிலளிநீக்கு
  3. I recently came across your blog and have been reading along. I thought I would leave my first

    comment. I don't know what to say except that I have enjoyed reading. Nice blog. I will keep visiting this

    blog very often.

    Alena

    www.smallbusinessavenues.com

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...