"பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை " என்று சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் பாரதி கண்ட கனவு இப்போது நடைமுறையில் வரத்துவங்கி விட்டது. பாரதி, புதுமை பெண், ஆணுக்கு நிகராக கல்வி மற்றும் ஆளுமையில் இருக்க வேண்டும் என்று விரும்பினான்.
இதில் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், அவரது தாயார் திருமதி ஜுடித் ஜெஸ்லின் பாரதியும் (படத்தில் வலது புறம் இருப்பவர்) , ப்விகாவுடன் விமான பயிற்சி பெற்று, அவரும், பவிகா இருக்கும் அதே விமான கம்பெனியில் விமானியாக பணிபுரிகிறார்.
பவிகாவின் தந்தை வழி பாட்டனார் திரு தாமஸ், முண்டாசு கவிஞன் பாரதியாரின் ஒரு பக்தர். அதனால், அவரது குடும்பத்தில் உள்ள அனைவரது பெயருக்கும் பாரதி என்கிற பெயரை இணைத்து விட்டார். அதனால் தானோ என்னவோ பவிகாவும் அவரது தாயும் இணைந்து பயிற்சி எடுத்து, சாதனை படைக்கிறார்கள்.
பவிகா மற்றும் அவரது தாயாரின் ஆங்கில பேட்டியை, கிளிக் செய்து கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் டவுன் லோடு செய்து, கேட்கவும். (12 நிமிடங்கள்)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளங்களிலும் கேட்கலாம்.
பாட்பஸார்
ஓடியோ
0 கருத்துகள்:
கருத்துரையிடுக