வெற்றி குரல் இதழ் 14
இந்த இடுகையை எழுதும் நேரத்தில், அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் ஒய்ந்து விட்டது. வருகிற மே 13ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடக்க இருக்க இருக்கிறது. இந்த நிலையில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களின் சொத்து, கடன், மற்றும் குற்ற பின்னணி ஆகியவைகளை அவர்கள் சம்ர்ப்பித்த மனுக்களிலிருந்து தொகுத்து பத்திரிகைகள் மூலமாக ஒவ்வொரு கட்ட தேர்தலின் போதும் முதல் நாள் வெளியிட்டு வருகிறார்கள். அதன்படி, தமிழக வேட்பாளர்களைப்பற்றிய விவரங்களையும் இன்று பத்திரிகையாளர்கள் முன் வெளியிட்டார்கள்.
இந்த தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தில் பல பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒய்வு பெற்ற ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பல இடங்களிலிருந்தும் பலர், முக்கியமாக மாணவர்கள், இண்டர்நெட் மூலமாக இந்த விவரங்களை தொகுத்தனர்.
வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தபின், அந்த மனுக்களை 'ஸ்கேன்' செய்து சென்னையிலுள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பர். தலைமை தேர்தல் அதிகாரி, அந்த விவரங்களை, jpeg ஃபைலாக அவர்களது இணைய தளத்தில் வெளியிடுவர். தம்ழகத்தில் 877 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பல ஃபைல்களை பதிவிறக்கம் கூட செய்ய முடியவில்லை என்று, தேசிய தேர்தல் கண்காணிப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையம், இந்த விவரங்களை சரியாக உடனடியாகவும் தங்கள் இணைய தளத்திலும் வெளியிடவில்லை. இந்த கம்பூட்டர் யுகத்தில், இது போன்று, காலம் தாழ்த்தியும், பதிவிறக்கம் செய்ய முடியாமலும் வெளியிட்டால், மக்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் சட்டசபை, மற்றும் மக்களவை தேர்தலிலாவது, கணினி மூலம் இந்த விவரங்களை அளிக்கலாம். லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு விண்ணப்ங்களையே சமாளிக்கும் அரசாங்கம், இந்த விண்ணப்ங்களை மனம் இருந்தால், சரியாக வழங்க முடியும்.
அகில இந்திய அளவில், அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும் http://www.myneta.info என்கிற் இணைய தளத்தில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம் வெளியிடுகிறது.
இது சம்பந்தமாக, தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தின் தமிழக நிர்வாகிகளை, பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேட்டி கண்டேன். அவர்களது பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமித்து கேட்கவும். (12 நிமிடங்கள்)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857419
இந்த தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தில் பல பேராசிரியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஒய்வு பெற்ற ஐ.ஏ.ஸ் அதிகாரிகள், நீதிபதிகள் இருக்கிறார்கள். இந்தியாவிலுள்ள பல இடங்களிலிருந்தும் பலர், முக்கியமாக மாணவர்கள், இண்டர்நெட் மூலமாக இந்த விவரங்களை தொகுத்தனர்.
வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்தபின், அந்த மனுக்களை 'ஸ்கேன்' செய்து சென்னையிலுள்ள தலைமை தேர்தல் அதிகாரிக்கு அனுப்பி வைப்பர். தலைமை தேர்தல் அதிகாரி, அந்த விவரங்களை, jpeg ஃபைலாக அவர்களது இணைய தளத்தில் வெளியிடுவர். தம்ழகத்தில் 877 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் பல ஃபைல்களை பதிவிறக்கம் கூட செய்ய முடியவில்லை என்று, தேசிய தேர்தல் கண்காணிப்பு நிர்வாகிகள் கூறுகின்றனர்.
தேர்தல் ஆணையம், இந்த விவரங்களை சரியாக உடனடியாகவும் தங்கள் இணைய தளத்திலும் வெளியிடவில்லை. இந்த கம்பூட்டர் யுகத்தில், இது போன்று, காலம் தாழ்த்தியும், பதிவிறக்கம் செய்ய முடியாமலும் வெளியிட்டால், மக்கள் தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சந்தேகிக்க வாய்ப்பு உள்ளது. அடுத்து வரும் சட்டசபை, மற்றும் மக்களவை தேர்தலிலாவது, கணினி மூலம் இந்த விவரங்களை அளிக்கலாம். லட்சக்கணக்கான மாணவர்களின் தேர்வு விண்ணப்ங்களையே சமாளிக்கும் அரசாங்கம், இந்த விண்ணப்ங்களை மனம் இருந்தால், சரியாக வழங்க முடியும்.
அகில இந்திய அளவில், அனைத்து வேட்பாளர்களின் விவரங்களையும் http://www.myneta.info என்கிற் இணைய தளத்தில், தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கம் வெளியிடுகிறது.
இது சம்பந்தமாக, தேசிய தேர்தல் கண்காணிப்பு இயக்கத்தின் தமிழக நிர்வாகிகளை, பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேட்டி கண்டேன். அவர்களது பேட்டியை கீழ்காணும் பிளாஷ் பிளேயரில், 'பிளே' பட்டனை அழுத்தி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்யூட்டரில் சேமித்து கேட்கவும். (12 நிமிடங்கள்)
இந்த ஆடியோவை, கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857419







தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி ....
பதிலளிநீக்குதங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி ....
இந்த 2009 ல் கூட நம்ம இந்தியாவில் , அரசு இயந்திரத்தின் நிலை....கேவலம்..