This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

திங்கள், 18 ஏப்ரல், 2011

குழ்ப்பத்தை உருவாக்கிய 78 சதவிகித வாக்குபதிவு - கருணாநிதியா? ஜெயலலிதாவா? ஒரு சூடான அல்சல்

கட்ந்த ஏப்ரல் 13ம் தேதி (2011)  தமிழக பேரவை தேர்தல் அமைதியாக 234 தொகுதிகளிலும் நடைபெற்று முடிந்தது.  .  தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளால், வாக்காளரகளுக்கு பணம் கொடுப்பது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டது.  தேர்தல் தினத்தன்று, பூத் ஸிலிப்களையும் தேர்தல் ஆணையமே வழங்கியது, கள்ள் ஒட்டுகளை தவிர்த்தது.  பாதுகாப்புகளை அதிகரித்ததால், வாக்காளர்கள் பெருமளவில் வந்து அச்சமின்றி  வாக்களித்தார்கள்.  பல மாவட்டங்களில், 80 சதவிகிதத்ற்கு மேல், வாக்கு பதிவு ஆகியது.  வழக்கமாக தேர்தல் நாளன்று ஓய்வு எடுக்கும் நடுத்தர வகுப்பு இளைஞர்களும் முதியவர்களும் கூட ஆர்வமுடன் காலை 7.30 மணிக்கே வந்து ஒரு மணீ நேரத்திற்கு மேல் வரிசையில் நின்று வாக்களித்தது ஒரு மவுன் புரட்சியா என்பது மே 13ம் தேதி தான் தெரியவரும். 

இந்த தேர்தலின் முதல் வெற்றி, தேர்தல் ஆணைத்திற்கும், அதில் பணிபுரிந்த பல ஆயிரக்கணக்கான அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் தான்.   
யாருக்கு வெற்றி?
 தமிழ்நாட்டில் 78 சதவிகித வாக்கு பதிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.  சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில், இந்த அளவு வாக்குபதிவு ஆனது இதுதான் முதல் முறை.  1967ல், 76 சதவிகித வாக்குபதிவு ஆனதுதான், இதுவரை ரிகார்டாக இருந்தது. அந்த தேர்தல், காங்கிரஸை வீழ்த்தி, திமுக முதலில் ஆட்சி அமைக்க உதவியது.  இந்த 78 சதவிகித வாக்கு பதிவால் யாருக்கு லாபம்?  கருணாநிதிக்கா அல்லது ஜெயலலிதாவுக்கா?  நானும் தமிழ்நாட்டின் கடைசி கோடி வரை பல தரப்பினருடன் தொடர்பு கொண்டு பேசினேன்.  பொதுமக்கள், திமுக, அதிமுக அணிக்காக உழைத்த அரசியல் தொண்டர்கள், நடு மட்ட தலைவர்கள் போன்ற பலருடனும் பேசினேன்.  ஊடகங்களில் வந்த செய்திகளையும் வைத்து பார்த்தால்,  நான்கு வகையான முடிவுகளைத்தான் தெரிவிக்கிறார்கள். ஆட்சி அமைக்க 118 சீட்கள் தேவை. 
1.  திமுக அணி மெஜாரிட்டி பெறும் (118க்கு மேல்).   திமுக ஆட்சி அமைக்கும்.
2.  திமுக சுமார் 80 சீட்கள் பெறும்.  அதிமுகவும் அதே அளவு சுமார் 80 பெறும்.    அதிமுக தவிர மற்ற கட்சிகளை அணைத்து, திமுகவே ஆட்சி அமைக்கும்.  அதிமுக அணியிலுள்ள மற்ற கட்சிகள் திமுகவிற்கு தாவும்.  
3.  அதிமுக 80 முதல் 90 சீட்கள் பெறும்.  கூட்டணி கட்சிகளுடன் இணைந்து, அதிமுக ஆட்சி அமைக்கும்.
4.  அதிமுக தனிப்பட்ட முழு மெஜாரிட்டி பெறும்.  அத்துடன், அதிமுக அணி 160 முதல் 180 இடங்களை கைப்பற்றும்.  அதிமுக ஆட்சி அமைக்கும்.

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகளையும் மீறி, சுமார் 3000 கோடி முதல் 5000 கோடி வரை திமுக செலவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன.  முதல்வர் நிற்கும் தொகுதியான திருவாரூரிலும், ஸ்டாலின் நிற்கும் குளத்தூரிலும் அதிக பணம் செலவு செய்திருப்பதாக பத்திரிகையாளர்கள் கூறுகிறார்கள்.  

அதிக அளவு பணம் பட்டுவாடா செய்ததாலும், திமுக இலவசங்க்ளை முன்பு கொடுத்திருப்பதாலும், ஆட்சி அமைத்தால், கிரைண்டர் மிக்ஸி லேப்டாப் போன்றவைகளை இலவசமாக கொடுக்க திமுக வாக்குறுதி கொடுத்திருப்பதாலும், திமுக அணியினர் தாஙகள் தான் ஆட்சி அமைப்போம் என்று உறுதியாக கூறுகிறார்கள்.  (மேலே பாயிண்ட் 1 மற்றும் 2).லஞ்சம் ஊழல், 2ஜி போன்றவை கிராம மக்களிடம் எடுபடவில்லை என்றும் திமுகவினர் கூறுகின்றனர். இருந்தாலும், பல திமுக தலைவர்களிடையே, கலக்கமும் உள்ளது.  

தாங்கள்தான் ஆட்சி அமைக்க இருப்பதாக திமுக பலமாக முழங்கி வருவதால், அதிமுகவினரும், ‘உண்மையாக இருக்குமோ’ என்று குழப்பத்தில் உள்ளனர். அதே சமயம் பல இடங்களில், திமுக பணத்தை சரியாக பட்டுவாட செய்யவில்லை என்றும், இடையிலேயே அமுக்கி விட்டார்கள் என்றும் திமுக வட்டாரங்களில் விஜாரித்ததில் தெரிகிறது.  சுமார் 200 முதல் 500 வரை பல இடங்களீல் கொடுக்க்பட்டதாகவும் தெரிகிறது. அப்படியே பணம் வாங்கியவர்கள், திமுகவின் அடிப்படை வாக்காளர் தவிர மற்றவர்கள், திமுகவிற்கே வாக்களித்திருப்பார்களா என்றும் தெரியவில்லை.  பலர், மனசாட்சிபடி வாக்களித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 

வக்களிக்க பணம் வழங்கியதையே காரணம் காட்டி, அதற்குள்ள அத்தாட்சிகளூடன், தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்து, திமுக வின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் சில அமைப்புக்கள் தயாராகி வருகின்றன என்றும் தகவல்கள் கூறுகின்றன.

நான் சென்னையிலிருந்து, கன்னியாகுமரி வரை கிரமங்கள் முதல் நகரங்கள் வரை பல தர்ப்பினருடனும் பேசினேன்.  தமிழ்நாடு முழுவதும், காலை 7.30 மணிமுதல், மக்கள் ஆர்வமுடன் வோட்டு பதிவுக்கு வரிசையில் நின்று இருந்தனர்.  Under Current என்ப்படும் , மக்களிடையே ஒரு அலை இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.  

தமிழ்நாடு முழுவதும், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, திமுகவின் குடும்ப அரசியல், ஊழலில் கருணாநிதியன் குடும்ப பங்கு ஆகியவை மக்கள் மனதில் அதிகம் பாதித்திருப்பதாக தெரிகிறது.  பணம் கொடுத்தும், இலவசங்களை உறுதிமொழி கொடுத்தும், மக்களின் அடிப்படை தேவைகளை மறந்து விடச்செயவது ஒரு கடினமான ஒன்று.  பணம் பெற்றவர்களும், திமுகவினர் கொள்ளை அடித்ததை தானே கொடுத்தார்கள் என்ற மனப்பங்கிலும் இருந்திருப்பதாக தெரிகிறது.  அதனால், அவர்கள், தங்கள் வாக்குகளை, மனசாட்சி படி பதிவு செய்திருக்கலாம்.  அந்த வாக்குகள், திமுகவிற்கு எதிரானதாகவே அமையும்.

நகர்ப்புறம் மற்றும் நடுத்த்ர மக்கள், இளைஞர்கள் மத்தியில் ஒரு கோப அலை இருப்பதும் தெளிவாக இருந்தது.  அவர்களூம் மாற்றத்தை விரும்பி, திமுகவிற்கு எதிராகவே வாக்களித்திருப்பார்கள்.

78 சதவிகித வாக்கு பதிவு,  மக்களின் கோப அலையா, அல்லது பணபட்டுவாடாவிற்கு வந்த அலையா என்று பார்த்தால், 80 சதவிகிதம் கோப அலையாக இருக்கத்தான் வாய்ப்பு உண்டு.  

எனது நண்பரும், பிரப்ல பத்திரிகையாள்ருமான சுதாங்கள் அவர்கள் ஒரு வட இந்திய டிவி பேட்டியில், “திமுக வென்றால், குடும்பத்திற்கு லாபம்;  திமுக தோற்றால், திமுகவிற்கு லாபம்” என்றார்.  அவரை தொடர்பு கொண்டு ஏன் இப்படி கூறினீர்கள் என்ற் கேட்டபோது, திமுக தோற்றால், அவர்கள் சுய பரிசோதனை செய்வதற்கு நேரம் கிடைக்கும்.  அது, திமுகவினை, குடும்ப அரசியலிருந்து விடுவித்து, மீண்டும் ஒரு புத்த்துணர்ச்சியுடன் எழுந்து வர ஒரு வாய்ப்பாக அமையும் என்று விளக்கினார். 

அனைத்து விவரங்களையும், கூட்டி, கழித்து பார்த்தால், எனது கணிப்பில், அதிமுக முழு மெஜாரிடி பெறும் என்றும், அதிமுக கூட்டணியினர் 160 முதல் 180 இடம் வரை கைப்பற்றுவார்கள் என்றும் எண்ணுகிறேன்.  திமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியுறவும் வாய்ப்பு உள்ளதாகவும் நினைக்கிறேன்.  

“வோட்டு இயந்திரங்கள் அமைதியாக தூங்குகின்றன.  ஆணால், எங்களூக்குத்தான் தூக்கம் இல்லை” என்று ஒரு அரசியல் நண்பர் கூறியதைத்தான் நினைவு கொள்கிறேன்.  இந்த கூற்று, அரசியல்வாதிகளூக்கு மட்டுமல்ல, வாக்களித்த நம் அனைவருக்குமே பொருந்தும். 
.
வருகிற மே 13ம் தேதிவரை பொறுத்துக்கொள்வோம்.  

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள்


தேர்தல் ஆணையம் சிறந்த முறையில், தமிழ்நாடு தேர்தலை நடத்தி முடித்துள்ளது.  இந்த அளவு சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற்றதற்கு, பணிபுரிந்த லட்சக்கணக்கான் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான் முக்கிய காரணம்.  தேர்தலை சிறந்த முறையில் நடத்த வேண்டுமென்ற ஒர் நல்லெண்ணத்தில், பல பெண் ஊழியர்களும், ஆசிரியர்களும் பல தொல்லைகளை அனுபத்ததாக தகவல்கள் வருகின்றன.  எனது நண்பரும் ஒரு மூத்த பத்திரிகையாளருமான பத்மன், எனக்கு இந்த கட்டுரிஅயை அனுப்பியுள்ளார்.  நானும் இந்த விஷ்யம் பற்றி,  தேர்தல் பணியாற்றிய பெண் ஊழியர்களிடையே விவாதித்தேன்.  பதம்ன் எழுதியிருப்பதில் உணமை இருக்கிறது.

இந்த விஷ்யங்கள், குரேஷி, பிரவீண்குமார் அளவில் தெரியாமல் இருக்கலாம்.  அவர்கள் செய்யும் நல்ல பணிகள்,  ஏற்பாடு செய்யும் கீழ்மட்ட அதிகாரிகளால், மாசுபட்டுவிடக்கூடாது என்கிற் எண்ணத்தில், இதை எழுதுகிறோம்.   தேர்தல் ஆணையம், இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்களை அரங்கேற்றிய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க்வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் வேண்டுகோள்.  தேர்தல் ஆணையத்திற்கு அவப்பெயர் தேடித்தர, அந்த அதிகாரிகள் முயற்சி செய்யவும் செய்திருக்கலாம்.  வாசகர்கள், தேர்தல் ஆணையத்தின் பார்வைக்கு எடுத்து செல்லுமாறு வேண்டுகிறேன்.

சீனிவாசன்.


தேர்தல் ஆணையம் - வலிமைக்குள் சில வலிகள் 
பத்மன்

   உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பதற்கு வலுவான தேர்தல் ஆணையமே அடிப்படைக் காரணம் என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி அனைத்திந்திய அளவிலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை, பெருமளவில் வன்முறைக் கீறலின்றி பேரமைதியாகவே தேர்தல்  ஆணையம் நடத்தி முடித்திருக்கிறது. சில குற்றச்சாட்டுகள் வீசப்படுகின்றபோதிலும், பணப்பாய்ச்சலைத் தடுத்துவிட்டதாகப் பாராட்டு மழையில் நனைகிறது தேர்தல் ஆணையம். இரவு 10 மணிக்குமேல் உண்மையிலேயே பிரசார கூக்குரல்கள் ஏதுமில்லை. வழக்கமான சுவரொட்டிகளும் வர்ண விளம்பரங்களும் இல்லாமல் வீட்டுச்சுவர்கள் வெறிச்சோடிக் கிடந்தாலும் பொதுமக்களிடம் நிம்மதி பளிச்சிட்டது. புகைப்படத்துடன் கூடிய வாக்குச்சாவடிச் சீட்டு அறிமுகத்தால் கள்ளவாக்குகளையும் 99.9 சதவீதம் தடுத்திருக்கிறது. வாக்களித்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதிலும் தேர்தல் ஆணையம் பெருவெற்றி பெற்றிருப்பதற்கு வாக்குப்பதிவு சதவீதமே சாட்சி.

    இத்தனை விஷயங்களும் ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தல் ஆணையத்தின்  வலிமையைப் பறைசாற்றினாலும், அதன் நடைமுறைகளில் சில முட்கள் அதன் சதையைக் கிழித்து வழியை ஏற்படுத்துகின்றன. அரசியல் ரீதியில் சில கட்சிகள் அவ்வப்போது தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அல்ல இவை. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் அமைப்பான தேர்தல் ஆணையத்தின் போக்கில் ஒருவித சவாதிகரம் புரையோடிக் கிடப்பதைக் கண்டதால் எழுந்த வேதனையின் வெளிப்பாடு இது.

   அரசுப் பணியாளர்களுக்கு ஆங்கிலத்தில் கவர்மென்ட் சர்வன்ட் என்ற பெயர் இருப்பதை அப்படியே அச்சுஅசல் பிசகாமல் கடைப்பிடிப்பது தேர்தல் ஆணையம் மட்டும்தான். தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களை அது நடத்துகின்ற விதத்தில் பழைய பிரிட்டிஷ் தர்பார் மாறாமல் நீடிக்கிறது. ஜனநாயகத் திருவிழாவான தேர்தலை சிறப்பாக நடத்திக் காட்ட வேண்டும் என்ற அசுர வேகத்தில், அந்த ஜனநாயகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களிடம் அசுரனாகவே தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. மனிதநேய முகத்தைக் கழற்றி எறிந்துவிட்டுத்தான் இந்த ஜனநாயகப் பணியை தேர்தல் ஆணையத்தால் ஆற்றமுடிகிறது என்பது முரண்சுவை.


தேர்தல் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் விருப்பத்தின் பேரில் வருவதில்லை, கட்டாயத்தின் பேரில் நியமிக்கப்படுகிறார்கள். இதற்கு, தேர்தல் பணியை ஆற்ற அவர்களுக்கு விருப்பம் இல்லை என்று அர்த்தமல்ல, அந்தப் பணிகளை ஆற்றுவோருக்கு அளிக்கப்படும் 'உபசரிப்பு' யாருமே விரும்பாத வகையில் இருக்கிறது என்பதே உண்மை. தேர்தலை வெற்றிகரமாகத் தேர்தல் ஆணையம் நடத்தினாலும், அதன் திறமை, நேர்த்தி இதில் பளிச்சிட்டாலும் தேர்தல் பணியாளர்களிடம் தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறையில் ஒரு தொழில் நேர்த்தி இல்லை, திறமைக் குறைவும் தென்படுகிறது. சரி, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு அப்படி என்னதான் இன்னல்கள் இழைக்கப்படுகின்றன என்கிறீர்களா?

    தேர்தல் பணியில் ஈடுபடுவோர் அவசர கதியிலும், அலைக்கழிக்கப்பட்டும் இதற்குத் தயார் செய்யப்படுகிறார்கள். தேர்தல் பணியில் ஈடுபடுவோரின் வீட்டுக்கும் அவர் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடிக்கும் உள்ள தொலைவு, அந்தச் சமயத்தில் தேர்தல் பணியாற்ற வேண்டியவருக்குள்ள இதர கடமைகள் உள்ளிட்டவை கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் தொடங்கி, ஏறக்குறைய தேர்தல் தினத்தன்று நள்ளிரவு வரையில் நீடிக்கும் இந்த இமாலாயப் பணியில் இம்சைகள் அதிகம். கடினமான இந்த வேலைக்குப் பெண்களே அதிக அளவில் தேர்ந்தெடுக்கப் படுவது ஏன் என்று தெரியவில்லை. அவர்களுக்கே உரியப் பிரத்யேகப் பிரச்சினைகளும் கண்டுகொள்ளப்படுவதில்லை. உதாரணத்துக்கு, கைக்குழந்தையுடன் இருக்கும் பெண் என்றாலும், 5 மாதம் வரியுடைய குழந்தையாக இருந்தால் மட்டுமே விதிவிலக்கு. அதுவும் பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவற்றைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில், அவர்களது கைக்குழந்தைகள் 2 நாட்களுக்கு தாயார் இல்லாமல் தவிக்க வேண்டியதுதான்.

   உண்மையான காரணங்கள் இருந்தாலும்கூட, இந்தக் கட்டாய ஜனநாயகப் பணியில் இருந்து சில அரசு ஊழியர்களால் தப்ப முடியவில்லை. மகன் அல்லது மகள் அல்லது நெருங்கிய உறவினர்  திருமணத்தை வைத்துக்கொண்டு தவிர்க்க முடியாமல் பணிக்கு வந்து தவித்தவர்களும் உண்டு. வெளிநாடு சென்று உடனடியாகத் திரும்ப முடியாத நிலையில் இருந்த அதிகாரிகளுக்கும் கட்டாயம் அவர்கள் கடமையை ஆற்றத்தான் வேண்டும் என்று சொல்லிவிட்டது தேர்தல் ஆணையம். இல்லையேல் உடனடி நடவடிக்கை. தாயகம் திரும்பிய பிறகு உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து அவர்கள் தண்டனையைப் போக்கிக்கொள்ளலாம் என்று 'காருண்யத்துடன்' கூறிவிட்டது தேர்தல் ஆணையம். ஒரு அரசு வங்கிக் கிளையில் அனைத்து ஊழியர்களுக்குமே தேர்தல் பணி. ஒருசிலரையாவது வங்கிப் பணிக்கு விட்டுவைக்குமாறு வங்கிக் கிளை அதிகாரி கெஞ்சியும் மசியவில்லை தேர்தல் ஆணையம். வேறு கிளைகளில் இருந்து தற்காலிக ஊழியர்கள் தருவிக்கப்பட்டு நிலைமை ஓரளவு சமாளிக்கப்பட்டது.

   தேர்தல் பணிக்கு நியமிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் ஆசிரியர்களே. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு, பிளஸ்டூ விடைத்தாள் திருத்தும் வேலை ஆகிய பணிகளும் ஆசிரியர்களை ஏற்கனவே ஆக்கிரமித்திருந்தன. மத்தளத்துக்கு இருபக்கம் இடி. ஆசிரியர்களுக்கோ  எல்லாபக்கமும் இடி. பல்வேறு பணிகளால் ஆசிரியர்களுக்குப் பணமழை பொழிவதாக மற்றவர்கள் வயிறு எரிந்தாலும், தேர்தல் பணிக்குக் கிடைத்த ஊதியத்தைவிட போக்குவரத்து, சாப்பாடு உள்ளிட்டவற்றுக்கு அவர்கள் செலவழித்ததும், பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலும் அதிகம் என்பதே உண்மை.

   இந்த முறை தேர்தல் பணி நியமன உத்தரவு, தேர்தலுக்கு முதல் நாள் காலை 8 மணியளவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இதற்கான பணியாளர்கள் அனைவரும் அரக்கப்பரக்க வந்து சேர்ந்தனர். ஆனால், பணி நியமன ஆணை நண்பகல் 12 மணிக்குத்தான் கொடுக்கப்பட்டது. அவர்கள் பணியாற்ற வேண்டிய வாக்குச்சாவடியோ, பலருக்குப் பல மைல் தூரத்தில் இருந்தது. இந்த ஆணை கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் தங்களுக்குரிய வாக்குச்சாவடிக்கு அவர்கள் சென்றாக வேண்டும். ஆனால் இதற்குரிய வாகன ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்யவில்லை. ஆணையம் என்பதால் ஆணையிட்டதோடு தேர்தல் ஆணையத்தின் பணி முடிந்துவிட்டது. பொறுப்புணர்வுள்ள அலுவலர்கள் தங்களுக்குரிய இடங்களுக்கு வந்து சேர வேண்டியது அவைகளுடைய பொறுப்பு.

   சரி, வந்து சேர்ந்த இடத்திலாவது உரிய வசதிகள் உண்டா? 2  நாள் இரவு தங்க வேண்டுமே? அதுவும் பிரத்யேகப் பிரச்சினைகள் கொண்ட பெண்களின் கதி என்ன? பாதுகாப்புக்கு போலீசார் உண்டு. ஆனால், இரவில் தங்குவதற்கு, இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு, காலையில் குளிப்பதற்கு உரிய வசதிகள் கிடையாது. நகர வாக்குச்சாவடிகள் என்றால் பரவாயில்லை. கிராமப்புற வாக்குச்சாவடிகள் என்றால் சரியான சாப்பாடும் கிடையாது. கிராம, குக்கிராம வாக்குச்சாவடிகளில் தேர்தல் ஆணையம் உணவுப் பொட்டலம் எதுவும் வழங்கவில்லை. பரிதாபப்பட்டு கிராம நிர்வாக அதிகாரிகள் வாங்கிக் கொடுத்தால்தான் உண்டு. இல்லையேல், கையேடு கொண்டு சென்ற பிஸ்கட்டுகளும் பழன்க்களும்தன் 2 நாட்களுக்கும் ஆகாரம்.

    அதுவும் இந்த முறை, கட்சி முகவர்கள் வாங்கிக் கொடுக்கும் காபி, டீயைக்கூட குடிக்கக் கூடாது என்ற கட்டளை வேறு. ஐயோ பாவம் என்று அந்த முகவர்கள் சாப்பாடு, வெயிலுக்கு குளிர்பானம் என்று தருவித்துக் கொடுத்தாலும்கூட அதைப் பெற்றுக்கொண்டால் அரசியல் தீட்டு ஒட்டிக்கொள்ளுமே! அவ்வாறெனில், அடிப்படைத் தேவையான உணவு உள்ளிடவற்றிற்கான உரிய ஏற்பாடுகளை வருவாய் அதிகாரிகள், கிராம அலுவலர்கள் மூலம் தேர்தல் ஆணையமே முறைப்படி செய்ய வேண்டும் அல்லவா? தேர்தல் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்தலாம், ஆனால் தேர்தல் பணியைச் செய்பவர்கள் இயந்திரங்கள் இல்லையே?

       இதேபோல், வாக்குப்பதிவு மாலை 5  மணியோடு முடிவடைந்து, மற்ற நடைமுறைகள் ஐந்தரை 6  மணிக்கு நிறைவடைந்தாலும்கூட தேர்தல் பணியாளர்கள் வீட்டுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை. வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாங்கினால்தானே அந்த இடத்திலிருந்து அவர்கள் நகர முடியும். ஒரு மண்டலத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு வாக்குச்சாவடியாக வந்து பரிசோதித்து, இந்த இயந்திரங்களை வாங்கிச் செல்வது நடைமுறை. இதனால் சில வாக்குச்சாவடிகளில் நள்ளிரவு நேரத்தில்தான் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெறப்பட்டன. தேர்தல் பணியாளர்களைப் பொறுத்தவரை அத்தோடு தேர்தல் ஆணையத்தின் கடமை முடிந்துவிட்டது. அத்துவானக் காட்டில் நள்ளிரவு நேரத்தில் தேர்தல் பணி கடமையை பூர்த்தி செய்த பணியாளர்களின் கதி அதோகதிதான். அவர்கள் சொந்த வாகனத்தில், அல்லது வாகன ஏற்பாடுகளில் திரும்பிச் செல்ல வேண்டியதுதான். இல்லையேல், துணைக்கு யாரும் இல்லாவிட்டாலும் வாக்குச்சாவடியிலேயே தங்கிச் செல்ல வேண்டியதுதான். ஆண்களாக இருந்தால் பரவாயில்லை. பெண்களின் கதி? ஒன்று, பாதுகாப்பான இடவசதி, இல்லையேல் முறையான வாகன வசதி செய்து தர வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை அல்லவா?

பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி மனமுவந்து விருப்பத்துடன் வாக்களிக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துவிட்டது. பாராட்டுகள். அதேபோல், தேர்தல் பணியாற்றுவோரும் எவ்வித அச்சமுமின்றி விருப்பத்துடன் பணியாற்றவரும் சூழ்நிலையை தேர்தல் ஆணையம் எப்போது கொண்டுவரும்?

 writer : PADMAN napnaban1967@gmail.com

திங்கள், 4 ஏப்ரல், 2011

தமிழக தேர்தல் 2011 - திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகள் - ஒரு அலசல்

கடந்த 2006 தேர்தலில், திமுக வெளிய்ட்ட தேர்தல் அறிக்கையில், கலர் டிவி போன்ற இலவசங்கள் இடம் பெற்றதால், அந்த தேர்தல் அறிக்கை, ‘கதாநாயகி’ என்று வர்ணிக்கப்ட்டது.  திமுகவின் வெற்றிக்கும் அது ஒரு காரணமாக இருந்தது என்று கூறுபவர்களும் உண்டு.  இலவசங்களுக்கு கொடுத்த முன்னுரிமை, தனிப்பட்ட மனிதனின் வருமானத்தை பெருக்குவதற்கும், தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவதற்கும் கொடுக்கப்படவில்லை என்று அப்போதே, பல பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்தார்கள். 
தற்போது, 2011ல், திமுக அரசின் ஐந்தாண்டு கால ஆட்சி முடிவில், தமிழக அரசின் கடன் சுமை ஒரு லட்சம் கோடியாகி, தமிழ்நாட்டு மக்களை கடனாளியாக்கி விட்டது, மின்வெட்டால் பொருலாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் விமர்சிக்கப்படுகிறது.  தமிழக அரசின் ஆண்டு வருமானத்தில், கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு ‘டாஸ்மாக்’ மூலமாக, ‘குடிமகன்கள்’ வழங்கி வருகிறார்கள்.
2011 தேர்தல் தேதிகள் அறிவித்தவுடன், திமுக, அதிமுக மற்றும் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.  தமிழ்நாட்டில், திமுக மற்றும் அதிமுக ஆகியவைகளில் ஒரு கட்சிக்கு தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதால், இவர்களது தேர்தல் அறிக்கைகளை மட்டும் அலசலாம் என்று எண்ணியுள்ளேன்.
இந்த இரு தேர்தல் அறிக்கைகளையும், pdf ஃபைலாக என்னுடைய தளத்தில் ஏற்றியுள்ளேன். அவைகளை டவுன்லோடு செய்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
திமுக தேர்தல் அறிக்கை 2011 
அண்ணா திமுக தேர்தல் அறிக்கை 2011
நான் சுருக்கமாக இந்த தேர்தல் அறிக்கைகளை விளக்கியிருந்தாலும், வாசகர்கள் இந்த அறிக்கைகளை டவுன்லோடு செய்து, அவைகளை ஒப்பிட்டுக்கொள்ளும்படி வேண்டுகிறேன். 
திமுகவின் தேர்தல் அறிக்கை 2011 
1. 61 பக்கங்கள் கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில், 36 பக்கங்களில் மட்டும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்வார்கள் என்பதை விளக்கியுள்ளார்கள்.  மற்ற பக்கங்களீல், கலைஞரின் செய்தியும், தங்களுடைய முந்தைய சாதனைகளையும் கூறியுள்ளார்கள்.
2.  மிக்சி,கிரைண்டர், லேப்டாப், பஸ் பாஸ், இலவச அரிசி போன்ற இலவசங்களும் இடம் பெற்றுள்ளன.  
3.  மாநில சுயாட்சி, நதி நீர் பங்க்கீடு, மொழி கொளகை, ஈழ பிரச்சனை, மநில பட்டியலில் கல்வி, நதிகள் தேசிய மயமாக்குதல் மற்றும் பல பிரச்சனைகளை மத்திய அரசிடம் வலியுறுத்தவதாக கூறியுள்ளார்கள்.  
4, விவசாயத்தை பெருக்க , விவசாய சேவை மையங்களையும், ஒன்றிய அளவில், வேளான் உற்பத்தி கருவிகளுக்கான வங்கி, அதற்கான தொழிற்பேட்டை, இயற்கை வேளாண்மைக்கு ஒரு பிரிவும் அமைக்கப்படும்.
5.  வேலை வாய்ப்பை பெருக்க, ‘சிறப்பு திறன் மேம்பாட்டிற்கான பயிற்சி’ கள் மாவட்டம் தோறும் நட்த்தப்படும். 
6.  நிர்வாக சீரமைப்பு, வறுமை ஒழிப்பு,  மகளிர் சுய உதவி குழு, தடையில்ல மின்சாரம், நீர்வள மேம்பாட்டு திட்டம்,, மீனவர் நலன், மைனாரிட்டிகளின் நலன், கால்நடை வளம், மக்கள் நலவாழ்வு, மாற்று திறனாளிகளின் நலன், ஆதி திராவிடர்களின் நலன் போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.  
7.  இரண்டு மனநல மருத்துவ மனைகளும், ஒரு காச நோய் மருத்துவ மனையையும் துவக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகளை நிறுவ உறுதி அளித்துள்ளார்கள்.  சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு, இலவச dialysis தரவும் உறுதி அளித்துள்ளார்கள்.
8.  அனைத்து மாவட்டங்களிலும் ஒரு பல்கலைகழகம் நிறுவப்படும். 
9.  மதுரை மற்றும் கோவை மாநகரங்களில் மெட்ரோ ரயில் விரிவாக்கம்.
10. கலஞர் வீடு திட்டத்தில் மானியம் ஒரு லட்சம்.
பொதுவாக, இந்த தேர்தல் அறிக்கையில், வாக்குறுதிகளை ஒரு descriptive ஆகவே கொடுத்துள்ளார்கள்.  வருமானத்தை பெருக்கும் வழிமுறைகள் விளக்கப்படவில்லை.  தற்போது ஒரு லட்சம் கோடி கடனில் இருக்கும் தமிழகத்தை, எப்படி, கடனில்லா மாநிலமாக ஆக்குவது பற்றி எந்த விளக்கமும் இல்லை.  எப்படி தடையில்லா மினசாரம் கிடைக்கும் என்பதை விளக்கவில்லை.  
அதிமுகவின் தேர்தல் அறிக்கை 2011
1. 34 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையில் 54 பாயிண்ட்களாக தங்கள் வாக்குறுதிகளை கொடுத்துள்ளார்கள். இதில்,   திமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து இலவசங்களும் இடம் பெற்றுள்ளன. இலவசங்கள் தவிர, தமிழ்நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களையும், புள்ளி விவரங்களுடனும், அவைகளை அடையும் வழிமுறைகளை விளக்கியும் அளித்துள்ளார்கள்.   சில முக்கியமான திட்டஙகள். 
2,  இரண்டாம் விவசாய புரட்சி யாக ஆண்டு அரிசி உற்பத்தி 8,6 மில்லியன் டன்னிலிருந்து 13.45 மில்லியன் டன்னாக உயர்த்துவது.  இதற்காக, 30,000 ஹெக்டேர் நிலத்தை, சிறப்பு சிறுபாசன் திட்டத்தின் கீழ் கொண்டு வருவது. கரும்பு உற்பத்தியை, 475.5 லட்சம் டன்னிலிருந்து, 1000 லட்சம் டன்னிற்கு உயர்த்துவது.  
3.  வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு மாதம் தோறும் குடும்பத்திற்கு  20 லிட்டர் சுத்திகரிக்கப்ப்ட்ட குடிநீர் வழஙக உறுதி அளித்துள்ளார்கள். இதன் மூலம் 20,000 தொழிற்சாலைகள உருவாகவும், 5.6 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் கூறியுள்ளார்கள்.  மேலும், ஒரு லட்சம் பேருக்கு, போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
4.  தமிழ்நாட்டில் 1500  கிராமங்களிலும், 24 மணி நேரமும், தொலை தூர ம்ருத்துவ மையங்கள் (Tele medicine centres) அமைக்கவும், காப்பீட்டு திட்டத்தை சீரமைத்து அமல் படுத்தவும், நடமாடும் மருத்துவ மனைகள் அமைக்கவும் உறுதி அளித்துள்ளார்கள்.
5.  வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள மூன்று லடம் பேருக்கு, 1.80 லடசம் மதிப்புள்ள 300 சதுர அடியில்,  பசுமை வீடுகள் (Green Houses) இலவசமாக வழங்கப்ப்டும்.  மற்றும் 40  லட்சம் நடுத்த்ர வகுப்பினருக்கு 1 லட்சம் மனியத்துடம் விரிவாக்கம் செய்யப்படும்.  
6.  மின்சார திருட்டை ஒழிக்க ஒரு படை அமைத்து, வினியோக முறையில் மாற்றம் செய்து, 3 ஃபேஸ் கரண்ட் தடையில்லாமல் வழங்கப்ப்டும்.
7.  தற்போது 4500 மெகா வாட் கரண்ட் உற்பத்தி ஆகிறது.  தமிழ்நாட்டிற்கு 6000 மெகா வாட் கரண்ட் தேவைப்படுகிறது.  2013க்குள் 5000 மெகாவாட் மின்சாரம் மேலும் அதிகமாக உற்பத்தி செய்யப்படும்.  2012க்குள், 151 நகராட்சிகள் மற்றும் அனைத்து மாநகாரட்சிகளிலும், கழிவுகளிநிருந்து 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும்.  அந்த நகரங்கள், கார்பன் நியூட்ரல் நகரஙக்ளாக மாற்றப்படும்.  2013க்குள், பத்து 300மெகாவாட் சோலார் எனர்ஜி பார்க்குள் உருவாக்கப்பட்டு, 3000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இது தவிர, இயற்கை எரிவாயு மூலம் 161 கிராம பஞ்சாயத்துகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.  இந்த இயற்கை எரிவாயு மின்சாரம் தயாரிப்பில், சுமார் 64,000 பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்டும்.
8.  தற்போது தினமும் 2.5 மில்லியன் லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது.  இதை 10 மில்லியன் லிட்டராக அதிகரிக்க முயற்சிக்கப்படும். இதற்கு, 6000 கிராமங்களில், 60,000 கறவை மாடுகள் இலவசமாக் வழஙகப்பட்டு, சீரமக்கப்பட்ட பால் பண்ணைகள் உருவாக்கப்படும்.  இதனால் மீண்டும் ஒரு ‘வெண்மை புரட்சி’ உருவாக்கப்படும். இதனால், சுமார் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.  
10.  கால்நடை வளம் பெருக, அடித்தள மக்களுக்கு 4 ஆடுகள் இலவசமாக வழங்கப்படும். 
11.  நகர்ப்புற வசதிகள் கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டி, 30 அல்லது 40 கிராமங்கள் இணைக்கப்பட்டு அடிப்படை வசதிகள் உருவாக்கப்படும்.  
12.  மாணவர்கள் இடை நிறுத்தத்தை (school drop out) தவிர்க்க கல்வி உதவி வழங்கப்படும்.  மற்றும் கற்றல் குறைபாடு (Dyslexia) உள்ள சிறுவர்களுக்கும், சிறப்பு திட்டங்கள் வகுக்கப்படும்.
13.  உயர் கல்வியை உயிர்ப்பிக்க, 12 அம்ச திட்டம் உருவாக்கப்படும்.
14. 150 கிராமப்புற BPOக்கள் உருவாக்கப்படும்.  
15.  சென்னை, மதுரை, திருச்சி, கோவை நகரங்களில் மோனோ ரயில் அமைக்கப்படும்.  
16.  அனைத்து திட்டஙகள் வழியாகவும், அரசின் வருமானம் ஐந்து ஆண்டுகளில், 1,20,000 கோடி ரூபாய் அதிகரிக்கும்.  இந்த அதிக வருமானம்  இலவசங்களை சமாளிக்கவும், தற்போதுள்ள ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனை அடைக்கவும் பயன்படும்.  
பொதுவாக, அண்ணா திமுக தேர்தல் அறிக்கையில், இலவசங்களுக்கு மக்களை கவரும் வகையில் முன்னுரிமை கொடுத்திருந்தாலும், தங்களது குறிக்கோள்களை, புள்ளிவிவரஙகளூடன் விளக்கியுள்ளதுடன், அதன் வழிமுறைகளையும் விளக்கியுள்ளது மிகவும் சிறப்பு அம்சமாகும்.  இலவசங்களைமட்டும் பார்த்து விட்டு, அதிமுகவின் தேர்தல் அறிக்கை திமுகவின் ஸெராக்ஸ் காப்பி என்று விமர்சனம் எழுந்தது.  அதிமுகவினரும், தங்களது தேர்தல் அறிக்கையை விளக்கமாக மேடைகளில் பேசாததாலும், பத்திரிகைகள் இந்த அறிக்கையை படித்து முழுமையாக விமர்சனம் செயயாததாலும், அதிமுக அறிக்கையைன் நல்ல அம்சங்கள் வெளிவரவில்லை. 
அதே சமயம், சென்னையில், மெட்ரோ ரயில் திட்டம் பாதியில் இருக்கும் போது, இந்த அறிக்கையில், மோனோ ரயில் பற்றி இருப்பதால், மக்க்ளுக்கு ஒரு குழப்பம் உருவாகிற்து.  எந்த ஆட்சியில் துவங்கினாலும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் நல்ல திட்டங்கள் தொடர வேண்டுமென்று தான் மக்கள் விரும்புகிறார்கள்.  
பொதுவாக அதிமுக அறிக்கை பல நாட்கள், ஆராய்சி செய்து, பொருளாதார வல்லுநர்களால் தயாரிக்கப்பட்டது போல் தோன்றுகிறது.  அண்ணா திமுக ஆட்சி அமைத்தால், அவர்கள் கூறிய திட்டங்களை, தொய்வு இல்லாமல் நடைமுறைப்படுத்தினால், தமிழ்நாடு இந்தியாவில் ஒரு முன்னணி மாநில மாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.  
தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தேர்தல் அறிக்கையை பொருத்தவரை, நடு நிலையாக ஆராயும் போது, திமுக வின் அறிக்கைக்கு 100க்கு 40 மார்க்குகளும், அதிமுகவின் அறிக்கைக்கு 80 மார்க்குகளும் அளிகலாம் என்பது என் கருத்து.  

இந்த இரு தேர்தல் அறிக்கைகளையும், pdf ஃபைலாக என்னுடைய தளத்தில் ஏற்றியுள்ளேன். அவைகளை டவுன்லோடு செய்து கொள்ள கீழ்கண்ட லிங்கை கிளிக் செய்யவும்.
திமுக தேர்தல் அறிக்கை 2011 
அண்ணா திமுக தேர்தல் அறிக்கை 2011


சனி, 2 ஏப்ரல், 2011

தமிழக தேர்தல் 2011 பற்றி நடிகர் எஸ். வி. சேகரின் பரபரப்பு பேட்டி

நடிகர் எஸ். வி சேகர், கடந்த 2006 தேர்தலில், அண்ணா திமுக சார்பில் சென்னை மயிலாப்பூரில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  செல்வி ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், அண்ணா திமுகாவிலிருந்து நீக்கப்பட்டு, கட்சி சாரா எம். எல். ஏ ஆக பணியாற்றியவர்.
எஸ். வி சேகர், பிரபல நடிகராக இருந்தாலும், எளிமையானவராகவும், எந்நேரமும் எவராலும் மொபைல் போனில் தொடர்பு கொள்ளக்கூடியவராகவும் இருந்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் (2011), காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
நடிகர் எஸ். வி. சேகர்
இந்த பின்னணியில், மயிலாப்பூர் தொகுதியில், நன்கு அறிமுகமான இவரையே வேட்பாளராக அறிவிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
காங்கிரஸ் மேலிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு அவர்களின் மனைவியை வேட்பாளராக அறிவித்தது.  இதற்கு காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
தேர்தல் அதிகாரிகள் தங்கபாலுவின் மனைவியின் வேட்பு மனுவை நிராகரித்தனர்.   அந்த அம்மையார் வேட்பு மனுவில் கையெழுத்து இடவில்லை என்பது தான் காரணம்.  டம்மி வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தங்கபாலுவின் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இவரே கட்சியில் அதிகாரபூர்வ வேட்பாளரானார்.  இருப்பினும், குறுக்கு வழியில் வேட்பாளரான தங்கபாலுவுக்கு காங்கிரஸ் தொண்டர்களிடையே பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த சூழ்நிலையில், நான், கடந்த மார்ச் 31ம் தேதி, எஸ் வி சேகருடன் மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்தேன்.  தங்கபாலு விவகாரம், அவரை ஏன் காங்கிரஸ் கண்டுகொள்ளவில்லை, 2ஜி விவகாரம், சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எதிர்பார்ப்பு, நரேந்திர மோடி பற்றிய அவரது எண்ண்ங்கள்,  ஆகிய பல விஷயங்களை அவரது பாணியில் பரபரப்பாக பேட்டி அளித்தார்.  அவரது பேட்டியை (15 நிமிடங்கள்), கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் ‘பிளே’ பட்டனை சொடுக்கி கேட்கவும்.

இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...