This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

செவ்வாய், 11 டிசம்பர், 2007

தமிழ் பத்திரிகையாளர் எம். எஸ் - அஞ்சலி

மக்கள் குரல் ஆசிரியர் எம்.எஸ்
மக்கள் குரல் ஆசிரியர் திரு எம். சண்முகவேல் (80) இன்று (11.12.2007) அதிகாலை இறைவனடி சேர்ந்தார். தமிழ் பத்திரிகை உலகின் ஜாம்பவானாகிய இவர், எம். எஸ் என்று அனவ்ராலும் அன்புடன் அழைக்கப்பட்டார். தினத்தந்தியில் தன்னுடைய பத்திரிகை பணியை துவக்கிய இவர், நவமணி, அலை ஓசை மற்றும் மக்கள் குரலில் பணியாற்றிய்வர்.

தமிழ் பத்திரிகைகளை அடித்தள மக்களுக்கு எடுத்துச் சென்ற் ஒரு சில மூத்த பத்திரிகையாளர்களில் இவரும் முதன்மையானவர். சுமார் 60 ஆண்டுகளாக தமிழ் பத்திரிகை பணிகளுக்காகவே தன்னை அர்பணித்துக் கொண்ட திரு எம். எஸ். இறுதி வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து பத்திரிகைகளிலும், செய்திகளுக்கு ஒரு தலைப்புதான் கொடுப்பார்கள். ஆனால், திரு எம். எஸ். சில முக்கிய்மான செய்திகளுக்கு மூன்று அல்லது நான்கு அடுக்கு தலைப்புகள் கொடுத்து செய்திகளை சுவாரசியமாக்கி விடுவார். என்றைக்கும், பத்திரிகை உலகில், செய்திகளுக்கு தலைப்பு கொடுப்பதில் இவர் மிகவும் பிரசித்தம்.

கடந்த ஒரு மாத காலமாக உடல் நலம் குன்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை மருத்துவ மனையில் நான் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. தன்னுடைய உடல் நலம் குன்றிய இறுதி நாட்களிலும், மருத்துவ மனையிலிருந்தும் பத்திரிகை பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதை பார்த்ததும் எனக்கு மெய்சிலிர்த்தது.

திரு எம். எஸ் அவர்களின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், பத்திரிகை தோழர்களுக்கும், அவரது எழுத்தின் ரசிகர்களுக்கும் நம்முடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வோம். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.

1 கருத்துகள்:

  1. மக்கள் குரல்,அலை ஓசை தமிழ் பத்திரிகை உலகில் ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது உண்மையே.அதன் பின் புலமாய் இருந்த எம்.எஸ் அவர்களுக்கு எனது அஞ்சலி.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...