This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 18 ஜூன், 2008

மக்கட்பண்புகள் குறைந்து வருகிறதா? - ராஜ் டிவியில் ஒரு நேர்முகம்

live telecast in Raj TV on soft skills of k. srinivasanஇன்று (18 ஜீன் 08) காலை ராஜ் டிவியின் காலை ஒளிபரப்பில், என்னுடைய பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகியது. ஒரு மணி நேரம் நீடித்த ஒளிபரப்பில், நேயர்களின் தொலைபேசி கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. க்ல்லூரி மாணவி நிஷா சிறப்பாக உரையாடலை நடத்தி சென்றார்.

தற்போது, ஏன் இளைஞர்களிடையே மனித பண்புகள் (soft skills) குறைந்து வருகின்ற்ன என்பது பற்றிய உரையாடல். நான் கூறிய ஒரு சில கருத்துக்கள் :

1. பெரும்பாலான நகர்புற இளைஞர்களிடையே நல்ல attitude என்ப்படும் மனப்பாங்கு குறைந்து வருகிற்து. அதிக அளவில் பணம், போட்டி ஆகியவையால், அவர்கள் பழகும் தன்மையும் (inter personal skills) பாதிக்கப்படுகின்றன. கிராமப்புற இளைஞர்களிடையே முன்னேற வேண்டும் என்கிற attitude உள்ளது. ஆனால் தன்னம்பிகை குறைவாக உள்ளது.

2. பெரும்பாலான குடும்பங்களில், பெற்றோர்களும், தங்கள் குழந்தைகள் பாடத்தில் அதிக மார்க் வாங்கவேண்டும் என்கிற எண்ணம் தான் அதிகமாக உள்ளது. பள்ளிகளிலும் மாணவர்களை பரிட்சைக்கு த்யார் செய்வதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். மனித பண்புகளை வளர்ப்பதற்கான சூழ்நிலை குறைவு.

3. soft skills குறைவாக இருப்பதால், மன அழுத்தம் அதிகமாகிற்து. 60 வயதில் வரக்கூடிய வியாதிகள் தற்போது 30 வயது இளைஞர்களை தாக்குகின்ற்ன. இரத்த அழுத்தம், இருதய நோய்கள், சர்க்கரை வியாதி, அமிலத்தன்மை ஆகிய நோய்கள் இளைஞர்களின் உடல் நலம் பாதிக்கப்படுகின்றன.

4. மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடியே மனித பண்புகள் வளர பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அதிக பங்கு உண்டு. சமூக சேவையில் ஈடுபட ஊக்குவிக்க வேண்டும். சமுதாயத்துடன் இணைந்து ப்ணியாற்றும் திறன் மேம்படவேண்டும்.

5. தற்போதுள்ள பாட திட்டங்களில், நீதி போதனைகள் குறைந்து விட்டன அல்லது நீக்கப்பட்டு விட்டன. மேலும், நகர்புறங்களில், கூட்டு குடும்ப முறை குறைந்து விட்டன. அதனால. குழந்தைகள் வீட்டு பெரியவர்களுடன் பழக வாய்ப்புகள் குறைந்து விட்டன. குழந்தைகளுக்கு கதைகள் மூலம் நீதிகளை கூறும் திறமையை வளர்க்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களிடையே hard skills எனப்படும் அறிவுத்திறன் மட்டும் வளர்வது போதாது. soft skills என்ப்படும் மனிதப்பண்புகள் வளரும் போதுதான, இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...