![Prof. Radhakrihnan, Vice Chancellor, Anna University, Coimbatore Prof. Radhakrihnan, Vice Chancellor, Anna University, Coimbatore](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiB6yOBzUXFqEnnL34ludDosUJeLBKRtYpKoZB7LCe22c5nLogOYeLHPKsviDm-ddHRPRSEEfMjS6xZXiqfY8K4FVHOnjtpIUEh_EKE7VMJryd4TNiVpCQsUMBGXMEcH7_EwO6v_m4WYTmJ/s400/vc1.jpg)
தமிழ்நாட்டில் மட்டும் பொறியியல் படிப்பிற்கு ஒரு லட்சம் இடங்கள் 300 கல்லுரிகள், தனியார் பல்கலைகழகங்களில் உள்ளன. அதில் 75000 இடங்கள், ஐ.டி. சம்பந்தபட்ட B.E. படிப்பில் உள்ளன. மீதி 25000 இடங்கள் சிவில், மெகானிகல், ஆட்டோமொபைல் படிப்புகளில் உள்ளன.
பிளஸ் டூ முடித்தவுடன் ஐ.டி. படிக்கவில்லை என்றால் வாழ்க்கையே முடிந்து விட்டதாக எண்ணி, ஐ.டி. பொறியியல் படிப்பில் மோதுகிறார்கள். இது தேவையற்ற ஒன்று. ஐ.டி. படிக்கும் மாணவர்கள், 75000 சக மாணவர்களுடன் மோதவேண்டும். சிவில், மெகானிகல் படிப்பவர்களுக்கு போட்டி கம்மி. சிவில் அல்லது மெகானிகல் படித்தவர்கள், ஐ.டி. துறையிலும் பணியாற்ற முடியும். ஆனல், ஐ.டி. மட்டும் படித்தவர்கள், சிவில், மெகானிகல் துறைகளுக்கு போகமுடியாது.
தவிரவும், கலை கல்லூரியில் B.A அல்லது B.Sc படிப்ப்தையும் குறைவாக மதிப்பிடுகிறார்கள். தற்போது, ஒரு டிகிரியுடன், கம்யூட்டர் ஆறிவு இருந்தாலே, ஐ.டி. துறையில் வேலைகள் கிடைக்கின்றன. ஏன்? வங்கி துறைகளுக்கு சாஃப்ட்வேர் த்யாரிக்கும் லேசர் சாஃப்ட் நிறுவனத்தில், பத்தம் வகுப்பு, பிளஸ் டூ படித்தவர்களும் programmers களாக பணியாற்றுகிறார்கள். இது ஒரு புது முன்மாதிரி.
அடுதத வாரத்தில், கவுன்சிலிங் அண்ணா பல்கலைகழகத்தில் துவங்க உள்ளது. இந்த நிலையில், அண்ணா பல்கலைகழ்கம், கோயம்பத்தூரின் துணைவேந்தர் பேராசிரிய்ர் ஆர். இராதாகிருஷ்ணனிடம் தொலைபேசியில் ஒரு பேட்டி எடுத்தேன். இந்த பேட்டியில், மாணவர்களூக்கும் பெற்றோர்களுக்கும் சிறந்த அறிவுரைகளை வழங்குகிறார். அதை நீங்களும் கேளுங்களேன். play பட்டனை கிளிக் செய்து கேட்கவும். (17 நிமிடம் - ஆங்கிலம்)
இந்த பேட்டியை கீழ்கண்ட இணைய தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857185
இந்த பேட்டியை mp3 யாக பதிவிறக்கம் செய்ய விரும்பினால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, டெஸ்க் டாப்பில் சேமிக்கவும் (16 mb)
மிக்க சரி.
பதிலளிநீக்குபோன வருடம் இயந்திரவியல் படித்துமுடிந்த ஒரு பையனுக்கு விப்ரோவில் வேலை கிடைத்தவுடன் எனது மனைவி கேட்ட கேள்வியும் இது தான்.