
என்னுடைய நெடுங்கால நண்பர் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான திரு சுதாங்கன் அவருடைய பிளாகில் நடிகர் கமலை சந்தித்ததை குறிப்பிட்டு எழுதியுள்ளார். ஸ்ரீ இராமானுஜர் , நடிகர் கமலையும் எவ்வளவு தூரம் பாதித்துள்ளார் என்பதை பார்க்கும் போது, நெகிழ்வாக இருந்தது.
தலித் மக்களுக்காக 'கண்ணீர்' வடிக்கும் அரசியல்வாதிகள் ஸ்ரீ இராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை படிக்கவேண்டும். சுதாங்கனின் பிளாகிலிருந்து, கமல் கூறிய்தான வரிகள்:
quote
உண்மையிலேயே ஆதி சங்கரரும், ராமானுஜரும்தான் மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகள். அவங்க தப்பா எடுத்துக்கலைன்னு ஒரு விஷயம், தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் கி.வீரமணியும், தொல்திருமாவளவனும் தங்களை ராமானுஜதாஸன்னு சொல்லிக்கிட்டா கூட தப்பில்ல. ஏன் தெரியுமா ? பண்டை காலத்தில் தாழ்த்தப்பட்ட பிரிவுக்காரங்கதான் மூட்டைத் தூக்கிக்கிட்டு போவாங்க. வழியில அவங்களுக்கு முதுகு வலிச்சா, யாரும் உதவிக்கு வரமாட்டாங்க. மூட்டையை கீழே தரையில் வெச்சா, மறுபடியும் சுமக்கிறது கஷ்டம். இப்ப கூட கிராமப்பகுதிகள்ள, நீங்க மூணு கல் நட்ட சுமைதாங்கி கல் இருக்கும். இதை நிறுவனம்னு முதல்ல சொன்னவர் யார் தெரியுமா? ராமானுஜர்தான்.இது ராமானுஜர் படம் எடுத்த ஜீ.வி, ஐயர் சொல்லித்தான் எனக்கே தெரியும். ஒரு நாள் ஒரு கிராமத்து பக்கம் இருந்தோம். அப்ப அங்கிருந்த சுமைதாங்கி கல்லை பார்த்து அதை தொட்டு கும்பிட்டார். என்னன்னு கேட்டேன். இது ராமானுஜருடைய ஏற்பாடு என்றார். இதை யாராவது அந்த காலத்தில யோசிச்சிருப்பாங்களா.
unquote
0 கருத்துகள்:
கருத்துரையிடுக