This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

வெள்ளி, 28 டிசம்பர், 2012

தமிழ்நாட்டின் சாதனை எம்.பிக்கள் - தாமரைசெல்வன் (தர்மபுரி)


2009ம் ஆண்டு ஜூன் மாதம் 4ம் தேதி துவங்கிய 15வது மக்களவை, 2012 டிசம்பர் 20ம் தேதிவரை, 12 கூட்டத்தொடரையும், 282 அமர்வுகளை நடத்தியுள்ளது.  தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிய 39 மக்களவை உறுப்பினர்கள் எவ்வாறு மக்களவையில் பணியாற்றினார்கள் என்பதை முந்தைய பதிவில் எழுதியிருந்தோம்.  

மக்களவையில், உறுப்பினர்களின் பணி அவர்கள் பங்கேற்கும் விவாதங்கள், மக்களவையில் சமர்ப்பிக்கும் தனியார் மசோதாக்கள், பிரச்சனைகளை உள்ளடக்கிய கேள்விகளை கேட்பது, வருகை பதிவேடு ஆகிய நான்கு பிரிவுகளில் மதிப்பிடப்படுகிறது.  

அரசியல்வாதிகளை கடுமையாக விமர்சிக்கும் இந்த காலகட்டத்தில், கடந்த 4 ஆண்டுகளாக, நாம் மக்களவையில் சிறந்த முறையில் பங்கேற்று பணியாற்றும் உறுப்பினர்களை கௌரவித்தும், பாராட்டியும் வருகிறோம்.  அகில இந்திய அளவில் சிற்ந்து விளங்கும் மக்களவை உறுப்பினர்களுக்கு சன்சத் ரதனா விருதும் கொடுத்து வருகிறோம்.  எந்த துறையிலும் சிறந்த பணியாற்றுபவர்களை பாராட்டினால் தான், அவர்களுக்கும் ஒரு உற்சாகம் ஏற்படும்.  அவர்களது பணியும் எதிர்காலத்தில் சிறப்பாக அமையும்.

தமிழ்நாட்டில், சிறந்த பணியாற்றி முதலிட்த்தை ஆரம்பம் முதலே தக்கவைத்துக்கொண்டுள்ள திருநெல்வேலி எம்.பி திரு இராமசுப்பு (காங்கிரஸ்) அவர்களின் பேட்டியையும் சென்ற பதிவில் வெளியிட்டிருந்தோம்.

தர்மபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் திரு தாமரைசெல்வன் (திமுக) அவர்கள் 12 கூட்டத்தொடரிலும் சேர்ந்து, 90 விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.  3 தனியார் மசோதாக்களை தாக்கல் செய்துள்ளார்.  532 கேள்விகளை எழுப்பியுள்ளார்.  82 சதவிகித அமர்வுகளில் பங்கேற்றுள்ளார்.  திமுக உறுப்பினர்களிடையே விவாதங்களில் பங்கேற்ற் வகையில் முதலிடம் பெறுகிறார்.  மொத்த கூட்டுப்புள்ளியில், தமிழ்நாட்டில் மூன்றாம்  இடம் பெறுகிறார்.

திரு தாமரைசெல்வனை, இன்று காலை (28 டிசம்பர் 2012) தொலைபேசி மூலம் வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தோம்.   மக்களவையில் அவர் எழுப்பிய தேசிய, மாநில, தொகுதி பிரச்சனைகளைப் பற்றியும், 2012ல் அவர் மனதுக்கு பிடித்த ஒரு தொகுதிப் பணி பற்றியும், 2013ல் அவர் செயல்படுத்த எண்ணியுள்ள ஒரு கனவுத் திட்டத்தை பற்றியும் விளக்கமாக கூறியுள்ளார்.  

தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவையில் சிறந்த பணியாற்றும் மற்ற உறுப்பினர்களையும் பேட்டி எடுத்து வெளியிட எண்ணியுள்ளோம்.

திரு தாமரைசெல்வனின்  சுவையான பேட்டியை கேடகவும். (9 நிமிடங்கள்).

இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேடகலாம்.


1 கருத்துகள்:

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...