This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

புதன், 25 ஜூன், 2008

பனகல் பார்க் காமெடி

இன்றைய ஹிந்து நாளிதழில் ( 26 ஜீன் 2008) ஒரு செய்தி வந்துள்ளது.
http://www.hindu.com/2008/06/25/stories/2008062557720100.htm

சென்னை பனகல் பார்க் பகுதியில், ப்ல பெரிய நிறுவனங்கள் தங்கள் கட்டிடங்களை, சட்டதிற்கு புறம்பாக கட்டியுள்ளனர். கட்டிட விதிமுறைகளுக்கு மாறாக கட்டினர். சென்னை ய உயர் நீதிமன்றம், அந்த கட்டிடங்களை இடிக்குமாறு உத்தரவிட்டது. ஆனால் கட்டிட உரிமையாளர்கள், டில்லி உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து, கட்டிடங்களை இடிப்பதற்கு ஒரு தடை உத்தரவு வாங்கி உள்ளார்கள்.

தமிழக அரசு நீதிபதி மோகன் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்து உள்ளது. நேற்று இந்த கமிஷன் முன்பு, கட்டிட உரிமையாளர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு மனு அளித்துள்ளார்கள். இந்த மனுவில் அவர்கள் " சட்டதிற்கு புறம்பாக கட்டிடங்கள், அறியாமையாலும் (ஆச்சரியமாக இருக்கிறதா?) கட்டப்பட்டதாகவும், வியாபாரத்தின் மீதுள்ள உற்சாகத்தாலும் (passion) ( இன்னும் ஆச்சரிய்மாக இருக்கிறதா?) கட்டப்பட்டதாகவும், அதனால், விதிவிலக்கு அளித்து இடிக்காமல் விட்டுவிட வேண்டுமென்றும்' கோரியுள்ளார்கள். இதில் காமெடி என்னவென்றால், விதிமுறைகள் மீறப்பட்டது, 'பேராசையினால்' அல்ல என்றும் மனுவில் கூறியுள்ளார்கள்.

இந்த பெரிய கட்டிட்ங்களை ஒரு கொத்தனார் மட்டும் கட்டியிருக்க முடியாது. பெரிய பெரிய இன்ஜினீயர்களும், ஆர்க்கிடெக்டுகளும் இணைந்து தான் கட்டி இருக்க முடியும். அப்படியென்றால், அந்த கட்டிட பொறியாளர்களுக்கு தண்டனை உண்டா? இல்லை என்றால், அரசு அதிகாரிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து ச்மாளித்து விட்டதாக தோற்றமளிக்காதா? (கட்டிட உரிமையாளர்கள் மனுப்படி அரசு அதிகாரிகளுக்கும் அரசியல் வாதிகளுக்கும் சம்பந்தம் இல்லை போன்று தோன்றுகிற்து).

இந்த மனுவை ஏற்றுக்கொண்டால், கொலை செய்தவர்களும், திருடர்களூம் கூட 'அறியாமையாலும், பணம் சேர்க்க வேண்டுமென்ற் உத்வேகத்திலும் (passion) செய்ததாகவும், 'பேராசையினால்' அல்ல என்றும், தங்களை மன்னிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனு கொடுத்தால், அந்த மனுவையும் நீதி மன்றம் பரிசீலிக்குமா?

2 கருத்துகள்:

  1. மெய்யாலுமே செம காமெடிபா!!!!!!

    பதிலளிநீக்கு
  2. சிரிப்பதா அழுவதா என தெரியவில்லை.

    உலகத்தையே முட்டாளாக்க நினைப்பவர்கள் நம் ஊரில் தான் அதிகம் இருப்பார்கள் என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...